Monday, June 7, 2010

கொஞ்ச நேரம் கொஞ்சலாமா



அலுவலகத்தில் இருந்து களைப்பாக வீடு திரும்பிய கணவனை கொல்ல வேண்டும் போல இருந்தது. கொலை என்பது கோபத்தினால் அல்ல.. அன்பினால்.

மாலதிக்கு , ராஜாவை மிகவும் பிடிக்கும். அவன் சுறுசுறுப்பு, அன்பான பேச்சு, நகைசுவை உணர்ச்சி என எல்லாம் பிடிக்கும். திருமணம் ஆகி 3 ஆண்டுகளில் சண்டை எதுவும் இல்லை.. ஆனால் அவன் வேலை வேலை என அலைவது மட்டும் பிடிக்கவில்லை..

இன்று கூட வெளியே போகலாம் என சிக்கிரம் வர சொல்லி இருந்தால், ஏதோ மீட்டிங் என சொலி தாமதமாக வந்தான். சண்டை போட கூட வாய்ப்பு இல்லை.. உட்கார்ந்த படியே தூங்கி விட்டான் ..

எழுப்பினாள்.. கொஞ்சுவான் என எதிர்பார்த்தாள்.." டிஸ்டர்ப் பன்னதடீ..டயர்ட இருக்கு " தூங்கி போனான்,..

************************************************

" உன் நிலைமை புரியுதுடீ... ஆனா, அவர் நிலைமையையும் பாரு. குடும்பம் நல்ல நிலைக்கு வரணும்தானே ராப்பகலா பாடு படுறார்.." தோழி சுமதி அட்வைஸ்

" அதெல்லாம் சரிடி.. ஆனா, பணம் சம்பத்திப்பது மட்டும்தான் வாழ்க்கையா ? " மாலதி எதிர் வாதம் செய்தாள்

" பணம்தான் வாழ்க்கை இல்லை.. ஆனா பணமும் தேவை.. சரி ஒன்னு செய்... அவர் சுமையை நீயும் பகிர்ந்துக்கோ,,, இனிமே ஓவர் டைம் எல்ல்லாம் செய்ய வேண்டாம்னு சொல்லிடு... அந்த இழப்ப ஈடு கட்ட, நீ டுயுஷன் எடுத்து சம்பாதி... தையல் வேலை தெரியுமே. அதில் சம்பாதி.. அவருக்கு வேலை சுமை குறையும் ..உன் கூட அன்ப பேச நேரமும் , தெம்பும் இருக்கும் "

நல்ல ஐடியாவாக தோன்றியது

***********************************

ஒரு வாரமாக சீக்கிரம் வேலை விட்டு வருவதால், ராஜாவுக்கு உடலும் மனமும் உற்சாகமாக இருந்தது.. கவிதை கூட எழுத தோன்றியது... இன்று அவளை அசத்த வேண்டும்...மல்லி பூ, அல்வா எல்லாம் வாங்கி கொண்டு உற்சாகமாக வீடு வந்தான்...

" மாலு ..இங்கே வாயேன் " அன்பாக அழைத்தான்...

" ஒரு நிமிஷம் " என சொல்லி விட்டு தையலை தொடர்ந்தாள்.. யுயுஷன் தாமதம்கி விட்டதால், தையல் வேலையும் தாம்தகிறது..

ஒரு வழியாக முடித்தாள்.. காத்து இருந்த ராஜ, அவளை கொஞ்சுவதற்கு நெருங்கினான்...

" தையல் வேலை முடித்த தையலே... இதோ , பூவுக்கு பூ சூட்டுகிறேன்" மல்லி பூவை எடுத்த ராஜா திடுக்கிட்டான்... அவள், சேரில் உட்கார்ந்த படியே தூங்கி இருந்தாள்

" ஹே ..என்ன இது " எழுப்பினான்..

" சாரிங்க... களைப்பா இருக்கு.... குட் நைட் "

அவன் தழுவதற்குள், நித்திரை அவளை தழிவியது

6 comments:

  1. அருமை.
    அழகாகப்படம் பிடிக்கப்பட்ட குறும்படம் படம் பார்த்த உணர்வு.

    ReplyDelete
  2. பதிவுலகில் இன்றைய டாப் டென் பதிவுகளை WWW.SINHACITY.COM இல் வாசியுங்கள்

    ReplyDelete
  3. ரசித்து படித்தேன்

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா