Monday, June 14, 2010

நேரங்கெட்ட நேரத்தில் , கருவறை போராட்டம் - பெரியார் என்ன சொல்லி இருப்பார் ?



இலங்கை தமிழர்களின் திக்கற்ற நிலை.. அதை கண்டு கொள்ளாமல் இருப்பது, ஆதரவு கொடுப்பது என்பது அவர்கள் மனசாட்சிக்கும் , கொள்கைக்கும் உட்பட்டது.. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கொள்கை இருக்கலாம். அது தவறல்ல.

ஆனால், இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்க வேண்டியவர்கள் சரியாக செயல் படுகிறார்களா என்பதே கேள்வி.

அங்கே உயிருக்கு போரடிடி கொண்டிருக்கும் நிலையில், பெரியவர் பழ . நெடுமாறன் அவர்கள், கோயிலில் அர்ச்சனை செய்ய போராட்டம் நடத்தியதாக வந்த செய்தியை பார்த்ததும் " அட இயற்கையே " என நொந்து கொள்ள தோன்றியது..

துன்பப்படும் தமிழர்களுக்காக , அணித்து தமிழர்களையும் - ஆன்மிக வாதிகள், நாத்திக வாதிகள், இடது சாரிகள், வலது சாரிகள் என அனைவரையும் - ஒன்றிணைப்பது தானே அவரது முதல் வேலையாக இருக்க வேண்டும் ? இப்போது போய் , இந்த போராட்டம் நடத்துவது, நமக்குள் பிளவைதானே ஏற்படுத்தும்..

இது தேவையே இல்லாத போராட்டம் என்பதில்லை.. உயிருக்கு போராட்வனுக்கு , முதலுதவி செய்து விட்டு சாமிக்கு பூ போடலாமே..

கடவுளை மற.. மனிதனை நினை என்றது சொன்ன பெரியார் இன்று இருந்தால், நேரங்கெட்ட நேரத்தில் நடந்த இந்த போராட்டத்தை கண்டித்து இருப்பார்...

மற்ற எல்லோரும் , இலங்கை தமிழர்களுக்காக போராடுவதை தவிர மற்ற வேலை களும் செய்கிறார்களே ( செம்மொழி மாநாடு, கொட நாடு பயணம் ) என நெடுமாறன் கேட்க கூடாது..

அவர்கள் இலங்கை தமிழர் பிரச்சினையை தங்கள் பிராதான கொள்கையாக முனிறுத்த வில்லை... நெடுமாறன் அப்படியல்ல.. கவனம் சிதர்மல் இருப்பதுதான், அவருக்கு பலம் சேர்க்கும்..

No comments:

Post a Comment

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா