Monday, June 28, 2010

ஓஷோவையே நடுங்க வைத்த சிந்தனை உலக தீவிரவாதி !!!


நாம் பல புத்தகங்கள் படிக்கிறோம்.. பலரடன் பேசுகிறோம்.. சிலரை படிக்கும் போது , மகிழ்ச்சியாக இருக்கும்... நாம் தேடிய ஒன்று கிடைத்தது போல இருக்கும்...

நான் யு ஜி கிருஷ்ணமுர்த்தியை படித்ததும் எனக்கு வருத்தமாக இருந்தது... இத்தனை நாள் இவரை பற்றி படிக்காமல் இருந்து விட்டோமே என்று...

பரபரப்பு பதிவரான நண்பர் செந்தில்தான், யு ஜி அவர்களை பற்றி சொல்லி , படிக்க சொன்னார்.. அவரை நன்றியுடன் நினைத்து கொண்டேன்...

நாம் பார்த்த சிந்தனையாளர்களில், யு ஜி கிருஷ்ண முர்த்தி முற்றிலும் வேறு பட்டவர்.. சிந்தனை உலக தீவிரவாதி என்றே சொல்லலாம்.. எதற்கும் கட்டுப்படமாட்டார்... அடி பணிய மாட்டார்..

ஓஷோ புத்தகங்கள் அனைத்தையும் படித்தவர்களுக்கு தெரியும்... அவர் புத்தி சாலிதான்.. ஆனால் நேர்மையானவர் அல்ல..

ஜே கேயை பொறுத்தவரை, நேர்மையானவர் என்ற போதிலும், அவர் கருத்துக்களை யார் வேண்டுமானாலும் தங்களுக்கு ஏற்ப பயன்படுத்தி கொள்ளும் வகையில், கருத்துக்கள் இருக்கும்.. அவரை குறை சொல்ல வில்லை... அவர் நியாயமாக சொல்லி இருந்தாலும், சில வார்த்தைகள் குழப்பமான அர்த்தம் தருவதால் இந்த நிலை...

அவர் கடவுள் இல்லை என்று சொல்கிறார் என சிலரும், ஆன்மா, மறு பிறப்பு, கடவுள் என எல்லாவற்றையும் ஏற்கிறார் என சிலரும் எளிதாக நிருபிக்கும் வகையில் சில வார்த்தைகள் இருக்கும் ...

உண்மையில் அவர் இரண்டுக்கும் அப்பாற்பட்டவர்...

ஆனால், யு ஜி கிருஷ்ணமுர்த்தியை பொறுத்தவரை, அவர் கருத்துக்கள் தெளிவாக, எளிமையாக இருக்கும்... எனவே வேறு யாரும் அதை அவர்களுக்கு ஏற்றவாறு மாற்ற முடியாது..

இன்னொன்று, அவரை பற்றி தெரிந்து கொள்வதற்கே, ஓர் உயர்ந்த மனநிலை தேவை.. அது பலருக்கு இருக்காது என்பதால், அவர் கருத்துக்கள் அதே உண்மைத்தன்மையுடன் நீடித்து வருகின்றன,, என்றுமே அப்படித்தான் இருக்கும்...

" நான் எதையும் புதிதாக சொல்ல போவதில்லை... நான் சொல்வதற்கு காப்புரிமை எதுவும் இல்லை... தேவை பட்டால், நான் சொன்னதை , நீங்களே கண்டுபிடித்து சொன்னதாக வேண்டும் என்றாலும் சொல்லிக் கொள்ளுங்கள் " என்ற அவர் அலட்சியமாக சொல்வது நம்மை வியக்க வைக்கிறது...

இந்த ஆன்மிக வாதிகள் பண்ணும் பந்தா இருக்கிறதே... அதை எல்லாம் எதிர்த்து நின்றவர் அவர்....

உண்மை நிலை இருக்கிறது...மோட்சம், தன்னை அறிதல் என்றெல்லாம் இருக்கிறது.. அது எல்லோருக்கும் புரியாது என்றெல்லாம் படம் காட்டுவார்கள்...

அவர்களை எல்லாம் பார்த்து பயந்து விடாதே என்ற உற்சாகத்தை அளிப்பவர்தான் இவர்...

உலகத்தையே கலக்கியவர் ஓஷோ... ஒரு கட்டத்தில் அவர் சீடர்கள், கிருஷ்ணமுர்தியின் பேச்சை கேட்டு, மனம் மாற தொடங்கினர்..

பயந்து போன ஓஷோ, தன சீடர்கள் யாரும் , கிருஷ்ணமுர்த்தியை பார்க்க கூடாது என அறிவிப்பே வெளியிட்டார்.. வேறு யாருக்கும் அவர் இப்படி பயந்ததாக சரித்திரம் இல்லை...

கற்பனையான ஒன்றில் உன் சக்தியை வீணடிக்காதே... ஒரு பூவை பார்த்து ரசிக்க முடிகிறதல்லவா.. அதே போல எதையும் உணரும் ஆற்றல் உன்னில் இருக்கிறது .. வேறு யாருடைய தயவும் உனக்கு தேவை இல்லை என்று சொல்லும் அவரை பற்றி சொல்ல நிறைய இருக்கிறது...

அவ்வப்போது பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்...

2 comments:

  1. Hi, Please read osho before arguing anything against him. Osho gave lot of names whom he thinks they are cheating people and also he said to follow the guy who makes your heart filled with blessing and alos said "I am not for all kind of peoples some choose different master".

    ReplyDelete
  2. நல்ல செய்தி.. நன்றி..

    சாமக்கோடங்கி..

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா