Friday, June 11, 2010

தினமும் என்னை கவனி


" சிங்கம் படத்துல , என் இதயம் பாட்டை போடுங்க " என்று எப் எம்மில் கேட்பது போல என்னிடம் கேட்ட ஜோசப் மீது எரிச்சலாக வந்தது. பெரியவர்., அனுபவசாலி, இங்கிதம் தெரிந்தவர். இப்படி செல் போனில் பாட்டு கேட்பதை தவறாக சொல்லவில்லை.. ஆனால், கூட்டமான பஸ்ஸில் , கஷ்டப்பட்டு சீட் கிடைத்து உட்கார்ந்து இருக்கும் நிலையில் , இப்படி கேட்பது கொஞ்சமும் சரி இல்லை. அதுவும் புது பாட்டுதான் வேண்டுமாம்..

பைக் சர்விஸ் விட்டு இருந்ததால், இருவரும் பஸ்ஸில் அலுவலகம் செல்ல வேண்டிய நிலை. பக்கத்து வீடு.. நிண்ட நாள் பழக்கம். என் பைக்கில்தான் எப்போதும் செல்வோம். ஒரு வாரம் மட்டும் பஸ் ...

பைக்கில் செல்லும் பொது, நான் பாட்டு கேட்டால், அதை கண்டிப்பார்.. கவனம் சிதறும் என்பார்... ஆனால், பஸ்ஸில் அவர் பாட்டு கேட்க விரும்பும் ரசனை எனக்கு பிடிக்கவில்லை... பேசாமல், நாளைக்கு செல் போனை வீட்டிலேயே வைத்து விட்டு வர வேண்டும் என தீர்மானித்தேன்..
*********************
அடுத்தநாள்.. செல் போனை கொண்டு வந்தேன்.. ஆனால் , மெமரி கார்டை கழட்டி வைத்து விட்டேன்...

பஸ்சில் அமர்ந்ததும்., ராவணன் பாட்டு போடுப்பா என்றார்.

" சார், மெமரி கர்ட்ல ஏதோ ப்ராப்ளம்.. பாட்டு கேட்க முடியாது " என்றேன் .

செல் போனை வாங்கி பா ர்த்த அவர் ஏமாற்றத்துடன் தி ரு ப்பி கொடுத்தார் ...
எனக்கே சற்று பாவமாக இருந்தது.. பாவம் எதோ ஆசை படுகிறார். இன்னும் ரெண்டு நாள் பஸ் பயணம்தானே.. இசை விருதை நாளை கொடுக்க வேண்டும் என நினைத்துகொண்டேன்.
************

பேருந்தில் இருந்து இறங்கினோம்... அடித்து பிடித்து இறங்குவது பெரிய போராட்டம்... வழியில் சற்று தாமதமாகி விட்டது .. எதோ ஊர்வலம்..

" அலுவலகத்துக்கு போன் செஞ்சு தாமதம் னு சொல்லிடு ப்பா" என்றார்..

சாட்டை பையில் கை விட்டு , போனை எடுக்க எத்தனித்த நான், அதிர்ந்தேன்.. போனை காணோம்... புது போன்..

அவரும் பதறினார்.. பஸ்ஸில் , கூட்டத்தில் விழுந்துருச்சா.. யாராச்சும் பிக் பாக்கட் அடிசுட்டங்கள...

புது போன் சார் .. பரிதாமாக சொன்னேன்...

என்னப்பா பண்றது..ஜாக்ரதைய இருக்கணும்... நானே ரெண்டு போனை தொலைச்சு இருக்கேன்... பஸ் ல வந்து உனக்கு எனக்கும் பழக்கம் இல்லை.. அதான் , பஸ்ல வர்ற சில நாட்கள், தினமும் கவனமா இருக்கணும் னு , பாட்டு போட சொன்னேன்... எங்காவது விழுந்த கூட , உடனே தெரிஞ்சுடும்.. அப்பவே எடுத்துடலாம்.. நம்ம கேட்ட நேரம், இன்னிக்கு, பாட்டு மிஸ் ஆயிடுச்சு என்றார்...

அவர் அனுபவ அறிவு புரிந்தது... பாட்டு கேட்க அல்ல... செல்லை காப்பாற்ற , பாடு பட்டு இருக்கிறார் என்பதை உணர தாமதமாகி விட்டது...

No comments:

Post a Comment

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா