Thursday, June 17, 2010

தேடுதல் தேடுதல் என்கிறார்களே.. என்ன தேடுகிறார்கள்? jo Amalan Rayen Fernando

நண்பர் jo Amalan Rayen Fernando சில கேள்விகள் கேட்டு இருந்தார்.. சித்தர்களை பற்றி எழுதும் ஒருவரது பதிவில் இவர் கேட்ட கேள்விக்கு பதில் அளிக்கவில்லை என ஆதங்க பட்டு இருந்தார்... அவர் சற்று பிசியாக இருந்திருக்க கூடும்... விட்டு விடுங்கள்...
நண்பர் கிண்டலுக்காக கேட்டதாக நான் கருதவில்லை... விஷயம தெரிந்து கொள்ள கேட்கிறார் என்றே எடுத்து கொண்டு பதில் அளிக்கிறேன்..

*****************************************************************************************

தேடுதல் தேடுதல் என்கிறார்களே.. என்ன தேடுகிறார்கள்? ஏன் தேட வேண்டும்?

தேடித்தான் ஆக வேண்டும் என்ற கட்டாயம் இல்லை... இப்போது இருப்பதே போதும் என்று நினைத்தால், அப்படியே வாழலாம்...
அனால் ஒன்றை தேட ஆரம்பித்தால் அதை கண்டிப்பாக அடையலாம். எதை தேடுவது என்பதை நாம்தான் முடிவு செய்ய வேண்டும்....

அருணகிரிநாதர் தேடியதையே, நாம் தேட வேண்டும் என்ற அவசியம் இல்லை.. பிறகு ஏன் அவரை பற்றி எழுதுகிறேன் என்றால், ஒரு வேளை அவர் தேடியதையே, தேடும் சிலருக்கு அது பயன் பட கூடும் என்பதால்...
அவர் தேடியது என்ன என்றே புரிய விட்டாலும் பாதகமில்லை... நமக்கு என்று என்ன தேடுதல் இருக்கிறதோ , அதற்கு எது உதவும் என பார்த்து , அந்த விஷயங்களில் கவனம் செலுத்தலாம்...

சிறந்த கண்டு பிடிப்பு , மக்களின் ஏழ்மையை ஒழித்தல், நல வாழ்வுக்கான வழியை கண்டுபிடித்தல், கடவுள் நம்பிக்கையை ஒழிக்கும் வழியை காணுதல், என தேடல் எப்படியும் இருக்கலாம்...
தேடலே இல்லாமலும் இருக்கலாம்.

அருணகிரிநாதரை பற்றி சொல்லுங்கள் ..

நாவல் எழுதினால்தான், முழுதாக சொல்ல முடியும். இருந்தாலும் சுருக்கமாக...

அவர் தன அக்காவல் , அன்பாக வளர்க்கப்ட்டார்... சிறு வயதிலே அறிவு கூர்மையுடன் விளங்கினார்.
சிறு வயடஹில் அவர் தேடல், மகிழ்ச்சியான வாழ்வு என்பதாக இருந்தது.... பெண்களுடன் உல்லாசமாக இருப்பது மகிழ்ச்சிக்கு வழி என நினைத்தார்.... அவர் தேடியது கிடைத்தது... மகிழ்ந்தார்... பணம் முழுதும அதற்கே செலவழித்தார்.... நோயில் விழுந்தார்... ஆனாலும், மழ்சியை பெண்களிடம் தேடினர்....
பணம் முழுதும் செலவழிந்த நிலையில், அதே பெண்கள் அவரை திரும்பி பார்க்கவில்லை.... மகிழ்ச்சியாக இருந்த விஷயம், துன்பமானதாக மாறியதை உணர்ந்தார்... காசு இல்லாத நிலையிலும பெண்ணுக்காக அலைந்த அவரை பார்த்து , அக்காவுக்கு கோபம்.... எண்டா இப்படி அலையற... நானும் பெண்தானே ... என்னை எடுத்துக்கோ, என கோபமாக கத்தவே, அருணகிரிநாதருக்கு, தன் தவறு புரிந்தது...

பெண் என்பது போதை வஸ்து அல்ல... இன்பம் தர அமைக்க பட்டதும் அல்ல... ஒரு கால கட்டத்தில் இன்பமாக்ள தோன்றும் தற்காலிக விஷயம் என தோன்றியது..

எப்போதும் இன்பம் தருவது முருகனின் அருளே என தோன்றியது..தேடினார்.. அடைந்தார்....
இடையில் ஒருமுறை, தேவியை வழிபடும் ஒரு அமைச்சருடன் பிரசினை ஏற்பட்டு, நீங்கியது... தேவி வழிபடும் சரியானதுதான்... அனால், அவரின் தேடல் வேறு ..அவ்வளவுதான்..

அப்படீன்நா , முருகனின் அருளை பெறுவது தான் வாழ்வின் நோக்கமா?

இல்லை. அவரை பொறுத்த வரை அப்படி தோன்றியது... உங்களுக்கும் அப்படி தோன்றினால், அவர் பாடல்களை படித்து உட்பொருட்களை கண்டு பிடிக்க பாருங்கள்... அவர் தேடியது தவறு என தோன்ற கூடும்... பாதகமில்லை.... உங்களுக்கு எது சரி என தோன்றுகிறதோ அதை தேடுங்கள்...

ஏசுவோ, நபியோ, ரமணரோ , பாபா வோ, அல்லது கீதையோ, அல்லது இது எல்லாமே தவறு என்று சொல்வதோ - எதை வேண்டுமானாலும் தேர்ந்தெடுக்க உங்களுக்கு உரிமை உண்டு

சித்தர்கள் கடவுளை ஏற்பவர்களா அல்லது மறுப்பவர்களா ?

அவர்களில் பல வகை உண்டு... ஒட்டு மொத்தமாக வகை படுத்த முடியாது..

அவர்கள்தான் உலகை வெறுத்து போய் விட்டார்களே. .. நாம் ஏன் அவர்களை கொண்டாட வேண்டும்..?

எல்லோரும் அவர்களை கொண்டாட வேண்டாம்... அவர்கள் தேடல், உங்கள் தேடலுடன் ஒத்து போனால், அந்த சித்தரை கொண்டாடலாம்...

3 comments:

  1. அருமையான பதிவு...உங்களுக்கு ஓட்டு போட்டாச்சு..
    தமிளிஷில் என் பதிவும் வந்திருக்கிறது அதற்கும் ஒரு ஓட்டு போடுங்கள்....
    http://rkguru.blogspot.com/2010/06/blog-post_17.html

    ReplyDelete
  2. உண்மையான சித்தர்கள் யாசிக்க மாட்டார்கள்.. கிடைத்ததை சாப்பிடுவார்கள் அல்லது சாப்பிடாமல் இருப்பார்கள்..
    அந்த நிலை பற்றி நிறைய ஆராய்சிகள் நடக்கின்றன.

    ReplyDelete
  3. அருமையான பதிவு...உங்களுக்கு ஓட்டு போட்டாச்சு..
    தமிளிஷில் என் பதிவும் வந்திருக்கிறது அதற்கும் ஒரு ஓட்டு போடுங்கள்//

    அருமையா பின்னூட்டம் போட்டீங்க..போங்க...நானும் ஓட்டு போட்டுட்டேன்..பின்னூட்டம் போட்டுட்டேன்..என்னோட தளத்தையும் பார்க்கனும் ஆமா..

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா