Monday, December 20, 2010

தேகமும் சந்தேகமும்- நண்பர் யுவ கிருஷ்ணா உள்ளிட்டோருக்கு விளக்கம்

தேகம் நாவல் ஒரு சிறந்த நாவல் என ஏற்கனவே எழுதி விட்டேன்... மீண்டும் ஏன் என சிலர் கேட்கலாம்...

சில காரணங்கள் இருக்கின்றன..

பலர் இந்த நாவலை படித்து விட்டாலும், சிலர் மட்டுமே சரியான பார்வையை முன் வைத்துள்ளனர்..

 பலர் ஒரு சராசரி நாவல் போல புரிந்து கொண்டு விமர்சனம் எழுதி விட்டனர்..

சிறுவயதில் சமுதாயத்தால் கஷ்டப்படும் ஒருவன்,  இளைஞன் ஆன பின் ஒரு தாதாவிடம் சேர்ந்து கொடும் செயல் செய்கிறான். நடுவில் காதல்.. கடைசியில் ஹேப்பி எண்டிங்...
இப்படி தட்டையாக புரிந்து கொண்டவர்கள் பலர் உண்டு...


அதெல்லாம் பரவாயில்லை...

தெளிவான பார்வை கொண்டவரும், சீனியர் பதிவரும், எழுத்து துறையில் இருப்பவருமான நண்பர் யுவ கிருஷ்ணா , தேகம் நாவல் நல்ல நாவல்தான்.. ஆனால் மற்ற நாவல்களை விட சிறந்தது அல்ல என சொல்லி இருப்பது வியப்பளித்தது...

ஆனால் அவர் நினைப்பதை அவர் சொல்கிறார்..  அதை தவறு என சொல்ல முடியாது...

ஆனால் சிலர் நாவலை படிக்காமலேயே, இது சாடிஸ்ட் பற்றிய நாவல் என கற்பனை செய்து கொண்டு , அந்த அடிப்படையில் கருத்து சொல்லி வருகின்றனர்...

இன்னும் சிலர், நாவலை படித்தாலும் கூட, வதையின் வாதை பற்றிய நாவல் என யாரோ சொல்வதை கேட்டு விட்டு, நாவல் முழுதும் விதம் விதமான டார்ச்சர் பற்றிய செய்திகள் இருக்கும் ( ஹிட்லர் வதை முகாம் போல ) என நினைத்து , அப்படிப்பட்ட காட்சிகள் இல்லையே என கவலையில் ஆழ்ந்து விட்டனர்...

உண்மையில், இது நம்மை பற்றிய நாவல்... அதுவும் தமிழ் நாட்டுக்கு மிக மிக மிகவும் அவசியமான   நாவல்...

வதை என்பது கொல்வது மட்டும் அல்ல...  வெட்டுவது மட்டும் அல்ல...   ஈவ் டீசிங் செய்து பெண்களை தற்கொலை வரை கொண்டு செல்கிறார்களே ... அதுவும் வதைதான்..
வீட்டில் நடக்கும் வதைகளை பற்றி சொல்லவே வேண்டாம்...

பிசிக்கல் வன்முறை முதல் சைக்கலாஜிக்கல் வதை வரை எத்தனையோ நடக்கின்றன...
இதை செய்பவருக்கும் பாதிப்பு... அனுபவிப்பவருக்கும் பாதிப்பு...
உயிரினங்கள் வதை என்பது ஒன்று...  மனித வதை என்பது மிக மிக சிக்கலான ஒன்று...
மனித வதையில் உடல் தவிர மனமும் முக்கிய பங்காற்றுகிறது...

வன்முறை , வதை என்ற மெக்கானிசம் எப்படி செயல்படுகிறது என்பதுதான் நாவல்... வன்முறை சம்பவங்களை விவரிப்பது அல்ல...
 அப்படி விவரித்து ஒரு பாண்டஸி உலகில் நம்மை உலவ விடுவதை விட, உண்மையை எதிர்கொள்ள வைக்கிறது நாவல்...

பழி வாங்குவதற்கு மட்டும்தான் வதை நடக்கிறது என்பது கிடையாது... 

காமம் போல வதையும் , உடலுக்கு அப்பால் சென்று , மனம் சார்ந்த விஷயமாகிறது என்பதை இந்த நாவல் போல எதுவும் சொன்னதில்லை...
இரண்டையும் ஒப்பிட்டு, " டார்ச்சர் அல்லது காமம் முடிந்ததும் கவிதை எழுதுவான் " என்ற இடம் நுட்பமான ஓர் இடம்..
காமம் போதைதான் என்றாலும், சிலர் அந்த போதை அம்சத்துக்காக அழாமல் , சும்மா ஒரு கடமையாக அதை செய்வதும் உண்டு...

அதே போல சிலருக்கு வன்முறை போதையை தராது...  வன்முறையால் கிடைக்கும் ஆதாயத்திற்காக அதை செய்வதுண்டு...
நாய் பாஸ்கருக்கு அது ஒரு தொழில்தான்..  அதில் அவனுக்கு போதை எதுவும் இல்லை என காட்டியது அருமை...

காமம் , இன்னொரு உயிரை  கொல்வது என்பது எல்லா உயிரினங்ககளில் இருப்பதுதான்.. ஆனால் இதை ரசித்து செய்வது மனிதன் மட்டும்தான்...




இந்த நாவலின் 19 ஆவது அத்தியாயத்தில் ஒரு பெண் அனுபவிக்கும் கஷ்டங்கள்  விவரிக்க  பட்டுள்ளன...  
 அவளுக்கு எதிரான சம்பவங்கள் ஏன் நடக்கின்றன.. அவள் ஏதேனும் தவறு செய்து அதற்காக பழி வாங்க படுகிறாளா..யோசிக்க வேண்டிய கோணம்..

பழி வாங்குதல் என்பது வன்முறைக்கு ஒரு சாக்கு மட்டுமே...

ஒருவனை சும்மா வதைத்தால் மனசாட்சி உறுத்த கூடும்...
ஆனால் அவன்  கெட்டவன்  என்ற நம்பிக்கை வந்து விட்டால், எந்த உறுத்தலும் இன்றி அவன் வதையை ரசிக்க முடியும்...

அந்த காலத்தில், சின்ன வயதில்,  ஓணானை கல்லால் அடித்து , புகை இலை பொடியை உண்ண வைத்து, அது தடுமாறுவதை ரசித்து, இன்னும் பல வதைகள் செய்து  , கொல்வது வழக்கம்..
சிலர் அதன் மேல் சிறு நீர் கழிப்பதும் உண்டு..
ஓணானை பழி வாங்குதல் !!! அது என்ன குற்றம் செய்தது...

ராமர் இலங்கைக்கு பாலம் கட்டும்போது தன்னிற் கேட்டாராம்.. அணில் தண்ணீர் கொடுத்து நல்ல பெயரும் போனசாக முதுகில் கோடும் ( நாமம் ? )  வாங்கியது..ஓணான் தண்ணீர் கேட்ட மகராசனுக்கு சிறு நீர் கொடுத்ததாம்.. அதனால்தான் பழிக்கு பழி...


என்கவுண்டரில் கொல்லப்பட்ட "குற்றவாளியை " இன்னும் டார்ச்சர் செய்து கொன்று இருந்தால் மகிழ்ந்து இருப்போமோ இல்லையா..



அவன் தனடனைக்கு உரியவன் என்பது வேறு  விஷயம்.. ஆனால் அவன் கொலைக்கு எல்லோரும் மகிழ்ந்தார்களே... மகிழ்ந்தவர்கள்  அனைவரும் பெண்மையை பூசிப்பவர்கள் ..சக உயிரின் வேதனையை தம் வேதனையாக எடுத்துக் கொண்டவர்கள்   என சொல்வதா.. அல்லது அந்த கொண்டாட்டம் வன்முறையை ரசிக்கும் போக்கா என்பது ஆய்வுக்கு உரியது...


இந்த நாவலை  நன்றாக  படித்து விட்டு, எதை எல்லாம் நாம் ரசித்தோம் என நினைத்து பார்த்தால், நம்மை பற்றி நமக்கு ஒரு ஐடியா கிடைக்கிறது...

காமம் ஒரு போதை.. வதை ஒரு போதை... இரண்டும் கலந்தால்... ???
இது பற்றி துணிச்சலாக யார் எழுதுவது?

வன்முறையை பற்றி சில கேஸ் ஸ்டடி களை நாவலில் படிக்கும்போது, அதை போல பல சம்பவங்கள் நம் நினைவுக்கு வருகின்றன..

அதுதான் நாவலின் வெற்றி..

" மாற்றி வாசித்து கொள்ளும் உரிமையை வாசகர்களுக்கு தருகின்றேன் ' என சொல்லப்பட்டு விடும் நிலையில், சில சம்பவங்கள் ரிப்பிட் ஆவது போல இருக்கிறது என்ற விமர்சனம் அர்த்தம் அற்றது ஆகி விடுகிறது...

இதற்கெல்லாம் மேல் , நான் ரசித்த விஷயம் கிளைமேக்ஸ்...

சாதரணமாக    தோன்றினாலும், நுட்பமான இடம் அது..
இப்போது சொல்லி, படிக்காதவர்களின் வாசிப்பு இன்பத்தை குலைக்க விரும்பவில்லை..

ஜே கிருஷ்ணமுர்த்தி  தன் ஒட்டு மொத்த வாழ்விலும் சொல்லி வந்த விஷ்யத்தை , அந்த அடிப்படை சாரத்தை ஆராய்ந்திருக்கும் இந்த நாவல் , தமிழின் மிக முக்கிய நாவல் என்பதை வலியுறுத்தவே இதை எழுதுகிறேன்...

இலக்கிய உலகம் தாண்டி, சிந்தனை உலகில் இந்த நாவல் சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கும்...
.. சிலர் சிறிய நாவல் என்பதை மைனஸ் பாயிண்டாக சொல்வது தவறு...
உலகின்  பல உன்னத எழுத்துக்கள், சிறிய வடிவில்தான் வந்துள்ளன என்பதை  மறக்க கூடாது...சொல்ல வரும் விஷயம் "நச்"  என மனதில் பதிய இந்த வடிவம் உதவியாக இரு க்கிறது...


இதை படிப்பவர்கள் ஆழ்ந்து படிக்குமாறு கேட்டு  கொள்கிறேன்...


ஒரு பேப்பர் , பேனாவுடன் அமர்ந்து நிதானமாக படித்து, உங்கள் எண்ணங்களை எழுதி கொண்டு வாருங்கள்...  ஆச்சரியமான விஷயங்கள் கிடைக்கும்...

ஒரே மூச்சில் படிக்க தூண்டும் வகையில் கதையோட்டம் இருந்தாலும், அப்படி படிக்க கூடாது என்பது என் கருத்து...

அத்தியாய ஆரம்பத்தில் இருக்கும் வரிகளை படித்து , அதை நன்கு உள்வாங்கி கொள்ள வேண்டும்.. அதன் பின் அந்த அத்தியாயத்தை படித்தால், ஒரு நாளுக்கு ஒரு அத்தியாயம் மட்டுமே போதுமானதாக இருக்கும்...

இது சிறு நாவல் அல்ல... சிறந்த நாவல் 

3 comments:

  1. உண்மையில் நான் இன்னும் படிக்கலிங்க...

    அன்புச் சகோதரன்...
    மதி.சுதா.
    யாழ்ப்பாணத்தில் உருவாகும் திரைப்படமும் அதன் பின்னணியும்.

    ReplyDelete
  2. உண்மையில் நான் இன்னும் படிக்கலிங்க..."

    படிங்க நண்பரே

    ReplyDelete
  3. அவருடைய தளத்திற்கான இணைப்பு தருகிறேன்... சென்று பார்க்கவும்”

    பார்த்தேன் .. படித்தேன்... ரசித்தேன்

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா