Tuesday, June 1, 2010

கன்னம் தொடும் கவிதை ஓசை

" அட பாவி... அவ-- சாரி- அவுங்கலை எதிர்த்து ஏன்டா ரிபோர்ட் கொடுத்த ? இன்னிக்கு உனக்கு தீபாவளிதான் " சக நண்பனின் எச்சரிக்கை, வயிற்றில் புளியை கரைத்தது..

ஆனாலும் நான் தப்பு செய்ததாக தோன்றவில்லை. எங்கள் நிறுவனம யந்திர பாகங்கள் உற்பத்தி செய்யும் நிறுவனம்.நாங்கள் சந்தை படுத்தும் பிரிவில் இருந்தோம். நான் அப்போதுதான் சேர்ந்திருந்தேன். ஹரிதா என்னை விட சீனியர். நல்ல பெயர் அவளுக்கு..ஆனால் அவள் கொடுத்த ஒரு ஐடியா எனக்கு பிடிக்கவில்லை. அதை ஏற்க கூடாது என என் தரப்பு வாதங்களை சொல்லி இருந்தேன். இலவச பொருட்கள் கொடுத்து இது போன்ற பொருட்களின் விற்பனையை உயர்த்த முடியாது என்பது என் கருத்து. சர்விஸ், டெலிவரி போன்றவற்றை முதன்மை படுத்துவோம் என்பது என் வாதம். இந்தியாவில் இலவசம்தான் இறைவன் என்று அவள் வாதிட்டாலும், என் தரப்பையே நிர்வாகம் ஏற்றது. புதியவனானா எனக்கு பெருமைதான். ஹரிதவின் பனி வரல்லாற்றில் இது முதல் தோல்வி..

இந்நிலையில்தான், வெங்கட் என்னை பயமுறுத்தினான்..

" அவளை பத்தி உனக்கு தெரியாது.. செலவாக்கான ஆள் அவ.... எதிர்த்து பேசுன சீனியரையே, ஒரு வாட்டி செருப்பால அடிச்சு இருக்க... அவ கிட்ட ஜாக்கிரதையா இரு .." என்றான அவன். அவன் சொன்ன சீனியரை எனக்கும் தெரியும்.. இயந்திர துறையில் இருந்தாலும், இலக்கியமாக வாழ்பவர். இனிமையானவர். அன்பாக பழகுபவர்.. அவரை போய்... ஹரிதா மேல் பயம் ஏறபட்டது.... கோபம் எல்லாம் வரவில்லை.. நமக்கு ஏன் ஊர் வம்பு.. ஒதுங்கி போவோம் என முடிவெடுத்தேன்..

********************

என் இன் பாக்சை திறந்த எனக்கு அதிர்ச்சி... ஹரிதவிடம் இருந்து மெயில்.. என்ன வாக இருக்கும்..பயந்து கொண்டே படித்தேன்..

டியர் சார், வரும் நடை பெறவுள்ள தொழில் நுட்ப கண்காட்சியில் நாம் பங்கு பெறலாமா... எப்படி பட்ட பங்களிப்பு நன்றாக இருக்கும் என்பதை பற்றி என் கருத்துக்களை எழுதியுள்ளேன்... படித்து விட்டு உங்கள் கருத்தை சொல்லவும்- ஹரிதா.

அட ஆண்டவா... என்கிட்டே ஏன் கருத்து...சீனியர் எத்தனை பேர் இருக்கிறார்கள்... ஆழம் பார்க்கிறாளா ?

என்னை பொறுத்தவரை , அந்த கண்காட்சியில் கலந்து கொள்வதை விட, நேரடி விசிட் தான் நல்லது என நினைத்தேன்.. அந்த கண்காட்சிக்கு எங்கள் வாடிக்கையாளர்கள், வாய்ப்புள்ள வாடிக்கையாளர்கள் வருவது குறைவாகத்தான் இருக்கும் என்பது என் கணிப்பு... இருந்தாலும், அவளை எதிர்க்க விரும்பவில்லை...

டியர் மேடம், உங்கள் கருத்து அபாரம்.. அதை அப்படியே நிறைவேற்ற என் ஆதரவு என்றும் உண்டு என் எழுதி அனுப்பினேன்..

******************

" சார் ,,,உங்க கிட்ட நிறைய எதிர்பார்த்தேன்..இப்படி ஏமாத்திட்டீங்களே " சற்று கோபத்துடன் என்னிடம் சொன்னால் அவள். தன அறைக்கு வர சொல்லி குளிர் பானம் கொடுத்து விட்டு , கோப வார்த்தைகள் வீசியதை நான் எதிர்பார்க்கவில்லை..

அவளுக்கு ஜால்றாதனே அடித்தோம்..அப்புறம் என்ன .. எனக்கு புரியவில்லை..

சிக்ஸ் கேப்ஸ் திங்கிங் எல்லாம் உங்களுக்கு தெரியும் என எனக்கு தெரியும்..அதான் உங்க கருத்தை கேட்டேன்... ஒரு விஷயத்தின் நன்மைமை யை நான் பார்த்தால், நீங்க எதிர் கருத்தை சொல்லணும்..என்ன தடிகள வரும்,,நு பார்க்கனும்... இன்னொருவர அதில் என்ன உற்சாக அம்சங்கள் இருக்கு,,வளர்ச்சி வாய்புகள் இருக்குனு சொல்லணும்... ஒவ்வொரு விதமா பார்த்து கடைசியில ஒரு முழுமையான முடிவுக்கு வரலாம்.. அ தை விட்டுட்டு, நான் சொன்னதையே திருப்பி சொல்ல நீங்க எதுக்கு " பொரிந்தாள் அவள்..

நான் மௌனமாக என் கையில் இருந்த பைலை கொடுத்தேன்..அதில் அவள் கேட்டபடி, எல்லா கோணத்தையும் அலசி இருந்தேன்.. அசந்து போனாள்..
சுப்பர்.. இதை ஏன் முன்னாடியே கொடுக்கல... என் கருத்தின் தவறுகள் எனக்கு நல்ல புரியுது...அதை மாத்திக்கிறேன்..தேங்க்ஸ் என்றாள்..

இவ்வளவு நல்லவள், இன்னொரு நல்லவரான இலக்கியவாதியை ஏன் அடித்தாள்..
சற்று தயங்கி கேட்டே விட்டேன்... உங்களுக்கு எதிர் கருத்து பிடிக்காதுன்னு , இலக்கியவாதி இளவரசன் சொன்னாருங்க என்றேன்..

மெல்ல புன்னகைத்தாள்.."உங்க கிட்ட அப்படி சொல்லிடான்களா.. அவர் ஒரு கருத்தை சொன்னால் எதிர் கருத்தை சொல்வது என் வழக்கம்.. இன்னொரு கோணத்தை பார்க்க வேண்டும் என்பதற்காக.. அவர் என் கருத்துடன் மோதி இருக்க வேண்டும்.. அவர் கருத்து வென்றாலும் எனக்கு சந்தோஷம்தான்.. அனால், அவர் என் எதிர்ப்பை சமாளிக்க முடியாமல், என் பெண்மை யை அசிங்க படுத்த முயன்றார். என் உயர்வுக்கு காரணம் என் திறமை இல்லையம்.. என் அழகுதானாம், பலர் மயக்கித்தான் என் காரியத்தை சாதிக்கிறேனம்.. என் கருத்தை நிலைநாட்டி இல்லையம்..இப்படி வாய்க்கு வந்த படி பேசினார்/.... அதுதான் செருப்படி" என்றாள்

இருவரும் சீனியர் என்பதால், பிரசினை அமுக்கப்பட்டது என்பதை புரிந்து கொண்டேன்.

" அவரா அப்படி பேசினார்? அவர் அப்படி எல்லாம் பேசி நான் கேட்டது இல்லையே " நான்.

" சாதாரண நிலையில் எல்லோரும் இலக்கியம் பேசலாம்.. இனிமையாக இருக்கலாம்... ஒரு சிக்கலின் போதுதான், உண்மையான தன்மை வெளியாகிறது .. கோபம் அவர் அறிவை மறைக்கவில்லை,, அவர் அறிவை வெளிப்படுத்தியது அவர் என்னை மட்டும் இழிவு படுத்தவில்லை.. ஒட்டு மொத்த பெண் இனத்தை அல்லவா
இழிவு படுத்திவிட்டார் . ஒவ்வொரு அணுக்குள்ளும் பெண்தன்மை இருக்கிறது..பெண்ணுக்குள்ளும் ஆண் தன்மை இருக்கிறது... அதே போல, ஒரு பெண்ணை சார்ந்து அன்ன்களும், ஒரு ஆணை சார்ந்து பல பெண்களும் இருப்பது இயல்பு. இந்நிலையில், ஒரு பெண்ணை இழிவு படுத்துகிறோம் என நினைப்பதே தவறு.. அவளை இழிவு படுத்தும் பொது, பல ஆண்களையும்தான் இழிவு படுத்துகிறீர்கள்.. நான் செருப்பை கையில் எடுத்ததை ஆதரித்து ஆண்கள்தான் என்பது உங்களுக்கு தெரியுமா.. என்ன இருந்தாலும், அவரை அடித்தி இருக்க கூடாது என்றுதான் பெண்கள் சொன்னார்கள் " பொரிந்து தள்ளினால் அவள்,.

அவருடன் பல இலக்கிய விவாதங்கள் செய்துள்ளேன்.. அனால், அவர் வாங்கிய செருப்படிஓசைதான், சிறந்த கவிதையாக என் காதில் ஒலித்தது

2 comments:

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா