Friday, June 4, 2010

சில நேரங்களில் சில பதிவர்கள்

நாம் யாரை அல்லது எதை போற்றுகிறோமோ, ஆராதிக்கிரோமோ, அதன் பண்புகள் நமக்கும் வந்து விடும் என்பது ஒரு உளவியல் தத்துவம்..

சமிபத்து சில நிகழ்சிகள் இதை உணர்த்துவதாக இருக்கிறது..

ஒரு பதிவர் நரகல் நடையில் , ஒரு கதை எழுதினார். அவரது நோக்கம் தெளிவாக தெரிந்தது... யாரை காய படுத்த நினைத்தாரோ , அவரை காய படுத்தி விட்டு பிறகு பாதுகாப்பு கருதி, பதுங்கி கொண்டார்.

இதை ஒவ்வொருவரும் எப்படி எதிர் கொள்கிறார்கள் என்ற பார்வைதைதான் பதிவர்களை அல்ல- ஒட்டு மொத்த மனிதர்களை புரிந்து கொள்ள உதவுகிறது..

1 ஒரு இரட்டை வேட எழுத்தாளரின் ரசிகர்கள், அந்த எழுத்தளரை போலவே , தெளிவில்லாத கருத்தை சொல்லி பிரச்சினையை சிக்கலாக்கினர்கள் ( நரகல் நடை பதிவரும், அந்த எழுத்தாளரின் ரசிகர்தான் ) ..

தம்பி , நீ எழுதுனது தப்பு என அறிவுரை சொல்லி திருத்துவதை விட்டு விட்டு, மூல காரணத்தை ஆராய்ந்து , படிப்புக்கும் , சிந்திக்கும் திறனுக்கும் சம்பந்தம் இல்லை என் காட்டினார்கள் இவர்கள். இதை ஆரம்பித்தது அந்த பெண் பதிவர்தான். பெண் என்றால் என்ன வேண்டுமானாலும் சொல்லலாமா என வெட்டி வாதம் செய்தனர்..
அந்த பெண் பதிவர் ஆபாசமாக எதுவும் எழுதவில்லை.. கிண்டலான தொனியில் கருத்தை சொல்லி இருந்தார். பிடிக்கவில்லை என்றால், அவர் கருத்தைதானே கிண்டல் செய வேண்டும்? அதை விட்டு விட்டு ஆபாச அரச்சனையில் இறங்குவது தவறு என அந்த ரசிகர் கூட்ட பதிவர்களுக்கு புரியவில்லை... இவர்களை போன்றவர்களை நம்பித்தான் பத்திரிகை உலகம் இருக்கிறது என்பது சற்று பயமாக இருக்கிறது...
ஊருக்கெல்லாம் அட்வைஸ்.. தனக்கு எந்த நெறியும் இல்லை என்ற எழுத்தாளரின் கொள்கைக்கு அப்படியே ஒத்து போகிறார்கள் இவர்கள்..

2 பதிவர் உண்மைத்தமிழன், நான் மதிக்கும் பதிவர்களில் ஒருவர்.. ரசிப்பவரும் கூட.. ஆனால் , இந்த விஷயத்தில் அவர் பார்வையில் தெளிவு இல்லை.. ஒருவன என்னை தாக்கினால், யாரவது என்னை காப்பாற்றுவார்களா, என்று தான் நான் பார்ப்பேன்... இதுதான் இயல்பு.. ஆனால், உதவிக்கு கரம் நீட்டுபவர்களை திட்டி, யாரும் உதவ வேண்டாம் என சொல்லி, தான் சாமாதான புறா என நிருபிக்கும் தமிழர்களின் இயல்பை இவர் காட்டி இருக்கிறார்.. உதவி வேண்டாம்/ வேண்டும் என சொல்லவேண்டியது பாதிக்க பட்டர்வர்கல்தானே தவிர இவரல்ல..இவருக்கு ஏன் இந்த வேண்டாத வேலை... ? பாவம்..நல்லதுதான் நினைத்து இருக்கிறார்.. ஆனால், சரியான கருத்தை சொல்ல வில்லை..

3 படிப்பு கூட சில சமயங்களில் நல்ல சிந்தனையை தர கூடும் என்ற நம்பிக்கை தருவது, மாதவராஜின் தீராத பக்கங்கள்..

4 பாதிக்கப்படவர்கள் வலி அதிகம்.. அதை எப்படி குணப்படுத்துவது என ஆரோக்கியமாக சிந்திப்பதுதான், அந்த நரகல் நடை பதிவருக்கும் கூட நல்லது.. அப்படி அணுகாமல், ஜாதி பற்றுடன் அணுகி தமது ஜாதி பற்றை காட்டி உள்ளனர் சில பதிவர்கள்..

மொத்தத்தில், பல பதிகர்களின் சுய முகத்தை அறிய உதவி இருக்கிறது இந்த விவகாரம்

7 comments:

  1. பார்வையாளன் ஸார்..

    இரு தரப்பினரும் ஏற்றுக் கொள்வதைப் போல் பிரச்சினையை வெகுவிரைவில் பேசித் தீர்த்துக் கொள்ளுங்கள் என்றுதான் சொன்னேன்..!

    வினவு கூட்டத்தை எதிர்ப்பதற்குக் காரணம், தீர்வுக்காக சட்டத்தைத் தங்கள் கையில் எடுத்துக் கொள்ள நினைக்கும் அவர்களுடைய சர்வாதிகார போக்கினாலும், பதிவர்களை சாதி ரீதியாகப் பிளக்க நினைக்கும் வன்மத்தினாலும்தான்..!

    என் மேல் வைத்திருக்கும் அபிமானத்திற்கு மிக்க நன்றி..!

    ReplyDelete
  2. நண்பருக்கு வணக்கம் ஒருவரின் மனதை காயப்படுத்தக்கூடிய ஒரு நிகழ்வை மீண்டும் மீண்டும் நினைவு கூறுவது இன்னும் வலியை அதிக்கப்படுத்தும் . புரிதலுக்கு நன்றி

    ReplyDelete
  3. "இரு தரப்பினரும் ஏற்றுக் கொள்வதைப் போல் பிரச்சினையை வெகுவிரைவில் பேசித் தீர்த்துக் கொள்ளுங்கள் என்றுதான் சொன்னேன்"

    என்ன சார் நீங்க... பாதிக்கப்படவர் ஏற்கும்படி பிரசினையை தீர்ததால் நல்லதுதான்,,

    அதென்ன இருதரப்பும் ஏற்றுக் கொள்வதைப் போல் ..?

    அடித்தவனையும் , அடி வாங்கியவனையும் ஒரே நிலையில் வைத்து ஏன் பேசுகிறீர்கள் ?

    ReplyDelete
  4. பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

    நண்பருக்கு வணக்கம் ஒருவரின் மனதை காயப்படுத்தக்கூடிய ஒரு நிகழ்வை மீண்டும் மீண்டும் நினைவு கூறுவது இன்னும் வலியை அதிக்கப்படுத்தும் .

    ***********************

    உலகில் நல்லவர்களும் இருக்கிறார்கள் என்பது உங்கள் கருத்தில் இருந்து புரிகிறது.. மன காயத்துக்கு ஆறுதலாக இருந்தது..
    உங்கள் கருத்தை ஏற்கிறேன். அதனால்தான், யார் பெயரையும் குறிப்பிடாமலும், விரிவாக பிரசினக்குள் போகாமலும் கட்டுப்பாட்டுடன் இருந்தேன்..

    ReplyDelete
  5. நல்ல பதிவு இராஜபிரியன்

    ReplyDelete
  6. \\அந்த பெண் பதிவர் ஆபாசமாக எதுவும் எழுதவில்லை.. கிண்டலான தொனியில் கருத்தை சொல்லி இருந்தார். பிடிக்கவில்லை என்றால், அவர் கருத்தைதானே கிண்டல் செய வேண்டும்? அதை விட்டு விட்டு ஆபாச அரச்சனையில் இறங்குவது தவறு என அந்த ரசிகர் கூட்ட பதிவர்களுக்கு புரியவில்லை...\\
    \\அடித்தவனையும் , அடி வாங்கியவனையும் ஒரே நிலையில் வைத்து ஏன் பேசுகிறீர்கள் ?\\

    ReplyDelete
  7. கண்ணீர் துடைக்காவிட்டாலும் காயாம் செய்யாதிருக்கட்டும்.... பதிவர்களின் (எழுதுகோல்) கைவிரல்கள்.

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா