Wednesday, June 9, 2010

உன்னிடம் மயங்குகிறேன் .உள்ளத்தால் நெருங்குகிறேன்


" அவளை விவாகரத்து செய்ய போறேண்டா "

நான் சொன்னதை நம்ப முடியாமல் பார்த்தான் அஹமது.

" என்னடா சொல்ற? எல்லோரும் பொறாமை படர மாதிரி நல்ல வாழ்க்கை கிடைச்சி இருக்கு.. ஏன் லூசு மாதிரி பேசற ? " பரிவுடன் கேட்டான்.

" டேய்... என்னை பத்தி நல்ல தெரிஞ்சவன் நீ..உன் கூட மனசு விட்டு பேசத்தான் இந்த ஹோட்டலுக்கு வர சொன்னேன். கீதா நல்ல பொண்ணுதான். படிச்சவ, நல்ல வேளையில் இருக்கா.. பாரம்பரியம் மிக்க குடும்பம்.. பணக்காரி வேற.. அழகு , சொல்லவே வேண்டாம். அழகான துப்பாக்கியும் உண்டு.. அழகான கவிதையும் உண்டு.. அவள் அழகு கவிதை போன்ற அழகு. பல கலைகளில் ஆர்வம் உண்டு அவளுக்கு..
இப்ப என்ன பிரச்சினைனா, இவ்வளவு சிறப்பு மிக்க அவள் என்னை ஏன் தேர்ந்தெடுத்தா ? நான் நல்லவன் தான், அனால் சராசரி குடும்பத்தை சேர்ந்த சராசரி ஆள்.. சராசரி படிப்பு, சராசரி வேலை. காதல் திருமணமும் இல்லை.. அதான் குழப்பம் "

' இதில் என்னட குழப்பம் .. எது எப்படியோ, நல்ல மனைவி கிடச்சா சந்தோஷம்தானே டா " குழம்பினான்

" இதுல ஏதாசும் சதி இருக்குமோ நு சந்தேக படறேன் ... என்னை சும்மா டம்மி மாதிரி பயன் படுத்த பாக்குரங்கள. இல்லை அவள் கிட்ட எதாச்சும் குறை இருக்கா ... நேத்து கூட அவளோட அத்தை பையனை பார்த்தேண்ட.. வீட்டுக்கு வந்தான். சும்மா அந்த கால கமல் மாதிரி அழகா இருக்கான.. பணக்காரன் வேற... அவனை எல்லாம் வீடு என்னை எண்டா தேர்ந்தெடுத்தா? "

" அட லூசு... ஜாலியா எஞ்சாய் பண்ணாம என்னடா இப்படி தொல்லை பண்ற... "

" சிரியஸ் நஸ் தெரியாம பேசற... இன்னும் பச்சையாகவே சொல்றேன்... அவளக்கு திருமணத்துக்கு முன் எதோ முறை தவறிய தொடர்பு இருந்திருக்கு... அதனால்தான், தெரிஜவங்களை எல்லாம் விட்டுட்டு, ஏமாளியான என்னை பிடிச்சு இருக்காங்க நு சந்தேக படறேன் "

சடாரென கையை ஓங்கி விட்டான் அஹமது.. நல்ல வேளை.. நிதானத்துக்கு வந்து விட்டான்.. எதுவும் பேசாமல், சடாரென வெளியேறினான்.. இதற்கு அடித்து இருக்கலாம்..

********************************************************

சந்தேகம் என்னை அரித்து கொண்டிருந்தது...

கீதா திடிரென அழைத்தாள் " என்னங்க.. உங்க பிறந்த நாள் வர போகுது.. நாம் சேர்ந்து கொண்டபோற முதல் பிறந்த நாள். வாங்க போயி, எனக்கு நகை, வளையல், சேலை, அப்புறம் உங்களுக்கு ஒரு சட்டை எடுக்கலாம் " அழைத்தாள்..

பல்லை கடித்து கொண்டேன்.. செர்ந்த்பு கொண்டதற முதல் பிறந்த நாலா..அல்லது இதுதான் கடைசியா.. இருந்தாலும் கிளம்பினேன்..

***************************

எனக்கு பல ஆடைகளை பார்த்தாள்.. அவள் சொன்ன எதுவும் பிடிக்கவில்லை... விலை உயர்ந்த ஒரு சட்டை, பேன்ட். எடுத்து கொண்டேன்..

அனால், அவள் தேர்வு ரொம்ப சிக்கலாக இருந்தது.. விலை உயர்ந்த வளையல், விலை உயர்ந்த ஒரு நெக்லஸ் எடுத்து கொண்டாள் ...

ஏழை கடைக்குள் நுழைந்தோம்... எவ்வளவு செலவழிக்க போகிறாளோ என திகிலுடன் சென்றேன்..

அதிக நேரம் எடுக்க வில்லை... ஒரு சேலையை தேர்வு செய்தாள் . எனக்கே சற்று வியப்பு " என்னடி , இவ்வளவு மலிவான விலையில் சூஸ் பண்ணி இருக்க.. இன்னும் கொஞ்ச காஸ்ட்லிய எடு .. அப்பத்தான் மதிப்ப இருக்கும் ":

" இல்லைங்க ..இதுதான் பிடிச்சு இருக்கு "

" என பேசற..எவ்வளவு அழகழகா , காஸ்ட்லியான சேலை எல்லாம் இருக்கு ..அதை எடு ..இதை போய் ஏன் பிடிச்சுருக்கு நு சொல்ற "

" காஸ்ட்லிய இல்லையா நு முக்கியம் இலிங்க... எனக்கு இதுதான் பிடிச்சு இருக்கு... உங்களுக்கு அது அழகா தோணலாம்.. எனக்கு இதுதான் அழகா தோணுது... எனக்கு எது பிடிக்குதுன்னு எனக்குத்தானே தெரியும்... இதை எப்படி விளக்றது நு எனக்கு புரியலைங்க " பாவமாக சொன்னாள்..

" எனக்கு புரியுது " என்றேன் நான்..உண்மையிலேயே எனக்கு புரிந்து விட்டது

7 comments:

  1. முன்னேற்றம் வாழ்க...

    உங்களுக்கு ஒட்டு போட்டாச்சு என் பதிவு தமிளிஷ்யில் வெளியாகி உள்ளது. எனக்கும் ஒரு ஒட்டு போடுங்க...
    http://rkguru.blogspot.com/2010/06/blog-post_08.html

    ReplyDelete
  2. எனக்கும் புரிந்தது

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா