Tuesday, October 26, 2010

எம்பிஏ பாடத்தை இலக்கியம் , வரலாற்றில் கலந்து தரும் பாலகுமாரனின் உடையார்

சில நாவல்கள் படிக்கும்போது விறுவிறுப்பாக இருக்கும்.. ஆனால் படிது முடித்த பின் எதுவும் நினைவு இருக்காது..

இதை குறை என சொல்ல முடியாது.. படிக்கும் சுகம் கிடைக்கும் என்ற பலன் கண்டிப்பாக கிடைக்கும்..

படிப்பதை ஒரு அனுபவமாக மாற்றும் சீரோ டிகிரி போன்ற நாவல்கள் ஒருவகை.. படித்து முடித்தாலும் , படித்த்தன் தாக்கம் நீடிக்கும்..

படிக்கும்போது இனிமையாக இருக்கும் சில நாவல்கள், மனதை தாண்டிய ஒரு நிலைக்கு நம்மை எடுத்து செல்லும் சக்தி கொண்டு விளங்கும்..

விஷ்ணுபுரம் போன்றவை இந்த வகையை சேர்ந்தவை.

பாலகுமாரன் இந்த எல்லா வகை எழுத்திலும் கில்லாடி..

ஆனால் அவரது உடையார் என்ற நாவல் சற்றே வித்தியாசமானது..

தனது அனுபவங்களை நாவலாக்குவது ஒரு விதம்.. ஆனால் ஒரு நாவலுக்காக பல இடங்களை சென்று பார்த்து, பலருடன் பேசி , பல் நூல்களை படித்து , கடும் உழைப்புடன் ஒரு சினிமாவை உருவாக்குவது போல ஒரு நாவலை உருவாக்குவது என்பது பாலகுமாரன் அவர்களால் மட்டுமே முடியும்..

அந்த அளவுக்கு ராஜராஜ சோழன் மீது அவருக்கு ஆர்வம்..

பொன்னியின் செல்வன் படித்து விட்டொமே .. அதே கதைதானே இது என சிலர் நினைக்கலாம்..

வரலாறு மாறாது என்றாலும் பார்வை வெவ்வேறு என்பதை படித்தால்தான் உணர முடியும்..

சோழ வரலாறு என்ன ?

விஜயாலய சோழனுக்கு பின் பராந்தக சோழன் .. அவருக்கு மூன்று மகன்கள் ..

ராஜாதித்தர் கண்ட்ராதித்தர் அரிஞ்சயன்

இதில் முதல் மகன் போரில் இறந்து விட , கண்டராதிதரும் அவருக்கு பின் அரிஞசயனும் ஆட்சி செய்தனர்..

அதன் பின் தான் குழப்பம்.. அரிஞயனுக்கு பின் கண்டராதிதரின் மகன் உத்தம சோழன் ஆட்சிக்கு வர வேண்டும்.. ஆனால் அப்போது அவர் சின்ன வயதாக இருந்த்தால் அரிஞ்சயனின் மகன் சுந்தர சோழர் ஆட்சிக்கு வந்தார்..

சுந்தர சோழருக்கு பிறகாவது உத்தம சோழன் ஆட்சிக்கு வர வேண்டும் என்று சிலர் நினைக்க , இன்னும் சிலர் சுந்தர சோழரின் மகன் ஆதித்த கரிகாலன் ஆட்சிக்கு வர வேண்டும் என நினைக்க , உள் நாட்டு குழப்பம்..

சமகால அரசியல் நிலை போன்ற நிலை...

கட்சியனர் ஆதரவு ஒருவருக்கு, மக்கள் ஆதரவு ஒருவருக்கு என்ற நிலை..

கடைசியில் சுந்தர சோழர் மகனான ஆதித்த கரிகாலன் ஆட்சிக்கு வர, உத்தம சோழன் ஆதரவாளர்கள் என்ன செய்து கொண்டு இருந்தார்கள் என்பதற்கு ஆதாரங்கள் இல்லை..

இன்னிலையில் ஆதித்த கரிகாலன் கொல்லப்படுகிறான்.. இதை செய்த்து உத்தம சோழன் என்வும் சொல்ல்லாம் ..இல்லை எனவும் சொல்ல்லாம்..

வரலாற்று ஆதாரம் இல்லை..

இந்த நிலையில், உத்தம சோழனுக்கே பதவியை விட்டு கொடுத்து , தியாகி ஆனார் ராஜராஜ சோழன் ( ஆதித்த கரிகாலனின் தம்பி ) என்பதுதான் பொன்னியின் செல்வன் கிளைமேக்ஸ்..

அத்துடன் கதை முடிகிரது..

கதை முடிந்தாலும் வரலாறு முடியவில்லை..

ராஜராஜ சோழனுக்கு மக்கள் ஆதரவு அதிகரித்து, அவர் அரசரனார் என்பது வரலாறு..

உத்தம சோழனை டிஸ்மிஸ் செய்து விட்டு பதவி ஏற்றாரா, அல்லது உத்தம சோழன் தானே பதவி விலகினாரா.. அல்லது கொல்லப்பட்டாரா.. அல்லது மற்றவர்கள் பதவி விலக செய்தார்களா என்பதெல்லாம் சரியாக தெரியவில்லை...

ஆனால் கோடிட்ட இடங்களை இட்டு நிரப்பி, ராஜராஜசோழன் ஆட்சியை கண் முன் நிறுத்துவதுதான் உடையார்.. ஒரு வகையில் , பொன்னியின் செல்வனின் தொடர்ச்சி.. இன்னொரு வகையில் முற்றிலும் வேறுபட்ட நாவல் ( காரணத்தை பிறகு சொல்கிறேன் )

உத்தம சோழனின் மகனும் , பதவி போட்டியில் இருந்து விலகி விட, ராஜராஜன், அவனுக்கு பிறகு ராஜேந்திரன் என ஆட்சி தொடர்ந்த்து..

பலதுறைகளில் ஆட்சி பொற்கால ஆட்சியாக இருந்த்து என்பதற்கு ஆதாரங்கள் இருக்கின்றன.

அப்படி பொற்கால ஆட்சி அமைந்து இருக்க வேண்டுமானால், ராஜராஜ சோழன் எப்படிப்பட்ட ஆட்சி நட்த்தி இருக்க கூடும் என்ற மேனேஜ்மெண்ட் , நிர்வாக கலை சார்ந்த பார்வை பார்த்துள்ளார் பாலகுமாரன்..

பொன்னியின் செல்வனை பொறுத்தவரை, அதில் தனி மனித உணர்சிகளுக்குத்தான் முக்கியத்துவம் கொடுத்து இருப்பார் கல்கி.. அதுவும் சுவையாகத்தான் இருக்கும்...

ராஜராஜன் ஆட்சியின் உச்சமாக பிரமாண்ட ஆலயம் எழுப்ப்பட்ட்தை திறம்பட சொல்லி இருப்பது உடையார் நாவலின் ஹைலைட்..

இதை செய்ய வேண்டுமானால் எந்த அளவுக்கு தொழில் நுட்ப அறிவு இருந்திருக்க வெண்டும், மேனேஜ்மெண்ட் ஸ்கில்ஸ் இருந்திருக்க வேண்டும், என்பதை , ஒரு ஃபிக்‌ஷன் போல எழுதி சென்று இருக்கலாம்..

ஆனால் அப்படி எழுதாமால், ஒரு நிர்வாக இயல் புத்தகம் போலவும், சுய முன்னேற்ற நூல் போலவும் , பிரமாதப்படுத்தி இருக்கிறார் பாலகுமாரன்..

அதே நேரம் வரலாற்று ஆய்வு நூல் போலவும், ஆன்மீக நூல் போலவும், மென் ஆர் ஃபிரம் மார்ஸ் , விமன் ஃபிரம் வீனஸ் போன்ற மனவியல் நூல் போலவும் , அதற்குண்டான உழைப்பை செலுத்தி படைக்கப்பட்டுள்ளது இந்த நாவல்..

பொறியியல் துறையில் இருப்பவர்கள், இதை அணுஅணுவாக ரசிக்க முடியும்.. ஹீட் ட்ரீட்மண்ட், ஆயில் க்வெஞ்சிங் , என்பதெல்லாம் தெரிந்து இருந்தால் இன்னும் ரசிக்க முடியும்...

பாலகுமாரன் இத்தனை நாள் எழுதியதெல்லாம் , இந்த மெகா நாவலை படைப்பதற்கான ஒத்திகைதானோ என தோன்றுகிறது..

ஆன்மீகம், வரலாற்று பார்வைகளை பிறகு சொல்கிறேன்..

நிர்வாகவியலை அவர் கையாண்டு இருப்பதை மட்டும் இப்போதைக்கு சொல்கிறேன்.. ( ஆறு பாகம் கொண்ட நாவலைப்பற்றி ஒரே பதிவில் சொல்ல முடியாது )

தொழிலில் , வாழ்க்கையில் வெற்றி பெற தொடர்பு கொள்ளும் கலை என்பது மிக அவசியம்.. என்ன சொல்கிறோம் என்பதை விட எப்படி சொல்கிறோம் என்பதே முக்கியம்..

கண்டேன் சீதையை என அனுமான் சொன்னது ஞாபகம் இருக்கலாம்..

சரி, நாவலின் இந்த பகுதியை பாருங்கள்..

ஓடி வந்தவன் சாம்பானுக்கு அருகே வந்து மண்டி இட்டான்

“ ஆட்கள் வருகிறார்கள்.. பதினாறு பதினேழு பேர் மலையேறி வருகிறார்கள் “

சாம்பான் திகைத்தான்

“ அத்தனை பேரும் பெண்கள் “

வந்தவன் தொடர்ந்து சொன்னான்..

சாம்பான் கைபிரம்பு எடுது பளீரென அவனை அடித்தான்.

“ ஒரு விஷயத்தை எப்படி சொல்வதென புரிந்து கொள். பெண்கள் வருகிரார்கள் என சொல்லி இருந்தால் அது எவ்வளவு அழகாக இருந்து இருக்கும்,, ஆட்கள் வருகிறார்கள்..பெண்கள் என்கிறாயே..பரபரப்பாக ஏதோ சொல்ல வேண்டும் என ஆசை படுகிறாய்... இனி இப்படி செய்தால் உன்னை வெளியேற்றி விடுவேன்..விஷயத்தை சுருக்கமாகவும், நேரடியாகவும் சொல்ல கற்றுக்கொள் “ என கர்ஜித்தான்ன்.

நான் மிகவும் ரசித்த இடம் இது..



ஒழுக்கம் குறைந்தவர்களை பைசாசம் எளிதாக தாக்கும்.. அதோ, அருண்மொழியை பாருங்கள்.. நகராதே என்று சொன்னேன்.. இந்த கணம் வரை அவன் நகரவே இல்லை.. அவன் உங்களை விட நல்ல நிலைக்கு வருவான்...

கீழ்படிதல், ஒழுக்கம் போன்றவை இருந்தால்தான் தலைவன் ஆக முடியும் என சொல்லும் இந்த இட்த்தை, அத்ன் பின்புலத்தோடு படித்தால் மிகவும் ரசிக்க முடியும்...

கடைசி வரை வெல்ல முடியாத நிலையில் இருந்த எம் ஜி ஆர், ஆயிரம் அரசியல் தவறுகள் செய்தாலும் , ஒழுக்கத்தில் தீ போல இருந்தார் என்பதை மறுக்க முடியாது..

அதே போல , இவ்வள்வு பெரிய நிலையில் இருக்கும் ரஜினி, இன்னும் இயக்குனருக்கு இந்த அளவு கீழ்படிந்து நடிப்பதையும் கவனதில் கொண்டால், வெற்றிக்கு என சில ஃபார்முலாக்கள் இருப்பது தெரியும்..

ஒரு போர் படை தள்பதி , தன் படையினருடன் ஆற்றை கடக்க வேண்டி இருந்த்து...

ஆனால் அதை கடக்க எல்லோரும் பயந்தனர்..

“ ஆழம் அதிகமாக இருக்குமோ ? :”

தளபதி எதுவும் பேசவில்லை/..

தானே இறங்கினார்..

பிறகு மீண்டும் கரை ஏறினார்..

தன் காலில் இருந்த நீர் அடையாளத்தை காட்டினார்..

“ ஆழம் அதிகம் இல்லை..முழங்கால் அளவு தண்ணீர்தான் “

அதன் பின் அனைவரும் ஊக்கதுடன் ஆற்றை கடந்தனர்...

தலைவன் என்பவன் பேசுபவன் அல்லன்.. செயல் மூலம் மற்றவரை ஊக்கப்படுதுபவன்..

இந்த நாவலில் வரும் காட்சியை பாருங்கள்..

மன்னர் சரசரவென ஆற்றில் இறங்கினார்..வண்டி எவ்வலவு தொலைவில் இருக்கிறது என்பதை புரிந்து கொண்டார்..

“ ஏற்றம் கட்டுங்கள் “ என உத்தரவிட்டார்..

ஒரு மாபெரும் அரசர், ஆற்றில் இறங்கி , மற்றவர்களுக்கு வழிகாட்டும் இந்த இடம் அருமை..

அதே போல ஒரு செயலை, அனைவரின் பங்கேற்புடன் செய்தால்தான் வெற்றி கிடைக்கும்.. ஒளிவு மறைவு இல்லாத நிர்வாகம் அவசியம்.. அப்போதுதான் அனைவரும் ஆதரவு தருவார்கள்..உற்சாகத்துடன் உழைப்பார்கள் என்பதையும் அருமையாக அனுபவித்து எழுதி இருக்கிறார் பாலகுமாரன்..

வரலாற்றிலோ. நாவல் படிப்பதிலோ ஆர்வம் இல்லாவிட்டாலும் பரவாயில்லை..

கண்டிப்பாக படியுங்கள்... பயனுள்ள்தாக இருக்கும்..

வரலாற்றில் , இலக்கியத்தில் ஆர்வம் இருப்பவர்களுக்கு இது ஒரு பொக்கிஷம்

9 comments:

  1. ஏற்கனவே இந்த நாவல் என் படிக்கும் பட்டியலில் இருந்தது.
    உங்கள் அறிமுகம் இன்னும் ஆவலை அதிகமாக்கி விட்டது. முதலில் வாங்கி விட வேண்டும்.
    நன்றி நண்பரே.

    ReplyDelete
  2. படித்து விட்டு, உங்க கருத்துக்களை சொல்ல மறக்காதீங்க

    ReplyDelete
  3. //அதே போல ஒரு செயலை, அனைவரின் பங்கேற்புடன் செய்தால்தான் வெற்றி கிடைக்கும்.. ஒளிவு மறைவு இல்லாத நிர்வாகம் அவசியம்.. அப்போதுதான் அனைவரும் ஆதரவு தருவார்கள்..உற்சாகத்துடன் உழைப்பார்கள் என்பதையும் அருமையாக அனுபவித்து எழுதி இருக்கிறார் பாலகுமாரன்..

    வரலாற்றிலோ. நாவல் படிப்பதிலோ ஆர்வம் இல்லாவிட்டாலும் பரவாயில்லை.. //



    பகிர்வுக்கு நன்றி. புத்தக விமர்சனம் முற்றிலும் மாறுபட்டு புதிய கோணத்தில் வழங்கியமைக்கு நன்றி. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. நன்றி , மதுரை சரவணன்

    ReplyDelete
  5. நாவலை படித்து விட்டு உங்களுக்கு கமெண்ட் போடுறேன்.

    ReplyDelete
  6. அருமையா இருக்கு உங்க கோணம். நான் இந்த நாவலை 3 தடவ படித்துவிட்டேன்.. இனிமே இது போல் ஒரு நாவல் பாலக்குமாரன் அவர்களாலே எழுத முடியுமாங்றது சந்தேகம் தான்..

    இந்த நாவல படித்துவிட்டு தஞ்சை கோவிலுக்கு போகும் போது ஒரு மாதிரியான மிடுக்கு,பெருமை வரும். என்னமோ நாமலே கட்டினது மாதிரி. அவ்வளவுக்கு இந்த நாவல் பாதிப்பை உண்டாக்கிவிட்டது...

    நீங்க சொல்கிற மாதிரி உடையரிலிருந்து ’பொன்னியின் செல்வன்’ முற்றிலும் வேறுப்பட்டது. ‘பொன்னியின் செல்வன்’ படித்ததும் ஒரு முழு திருப்தி இருந்தது, ‘உடையார்’ படித்ததும் மனது எதையோ அனுபவிச்ச மாதிரி இருந்தது...

    பாலக்குமாரன் அடுத்து ‘ராஜேந்திரச் சோழன்’ வரலாறு எழுதப்போவதாக கேள்விப்பட்டேன்.. காத்திருக்கிறேன்...

    ReplyDelete
  7. பாலக்குமாரன் அடுத்து ‘ராஜேந்திரச் சோழன்’ வரலாறு எழுதப்போவதாக கேள்விப்பட்டேன்..////

    அதற்கு சற்று நாளாகும் என தோன்றுகிறது .

    ReplyDelete
  8. உடையார் மிக நன்றாக இருக்கிறது, நான் ஆறு பாகங்களையும் படித்து விட்டேன். இப்போது மீண்டும் மீண்டும் படித்து கொண்டிருகிறேன். உங்கள் விமர்சனம் மிக அருமை.

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா