Saturday, October 30, 2010

வரலாற்று வினோதம் : கார்ப்பரேட் உலகை, மேனேஜ்மெண்ட் அறிஞர்களை முட்டாளாக்கிய புத்தகம்

தான் நம்பாத ஒரு விஷயத்தை பிரச்சாரம் செய்வதும், செய்லபடுத்த முடியாது என தெளிவாக தெரிந்தும் ஒரு விஷயத்தை தான் நம்புவதாக பில்ம் காட்டுவதுவதும் உலகம் முழுக்க நடக்கும் விஷ்யம்தான்..

சும்மா டைம் பாசுக்கு பேசுகிறார்கள் என அவர்களுக்கும் தெரியும் , மற்றவர்களுக்கும் தெரியும் என்பதால் இதை எல்லாம் யாரும் சீரியசாக எடுது கொள்வதில்லை..

இதில் ஒரு விசித்திரம் இருக்கிறது..

ஆன்மீகம் பேசும் தலைவர்கள், ஆன்மீக நெறிக்கு விரோதமாக நடந்தாலோ அல்லது நாத்திகம் பேசும் தலைவர்கள் ஆன்மீக சம்பிராதயங்களை பின் பற்றினாலோ அது பெரிய பாதிப்பை ஏற்படுத்துவதில்லை.. எளிமையை வலியிறுத்தும் தலைவரின் விழாக்கள் ஆடம்பரமாக நடந்தாலும் கவலையில்லை

எனக்கு நம்பிக்கை இல்லை.. மற்றவர் உணர்வுகளை மதிக்க  இப்படி செய்ய வேண்டி இருக்கிறது என்று விளக்கமளித்தால் போதும்..எல்லோரும் சமாதானம் ஆகி விடுவார்கள்..

ஆனால் எழுத்தாளர்கள் நிலை வேறு..இது போன்ற hypocrisy யை எழுத்தாளர்கள் செய்தால் அவர்களை ஒதுக்கி விடுவார்கள்.. அதற்கு பின் அந்த எழுத்தாளரின் புத்தகம் விலை போகாது..

(எழுத்தாளனையும் எழுத்தையும் பிரித்து பார்க்கும் கலாச்சாரம் இங்கு இல்லை என்பதும் ஒரு காரணம் )

நீ எழுவதை உன்னாலேயே பின்பற்ற முடியவில்லை..ஊர்க்கு என்ன உபதேசம் என்று கேட்டு ஒதுக்கி விடுவார்கள்..

 

தமிழ் நாட்டிலேயே இப்படி என்றால், உலக அளவில் கேட்கவே வேண்டாம்.. அவ்வளவு சீக்கிரம் யாரையும் ஏமாற்ற முடியாது..

ஆனால், சாதாரண பொது மக்களை அல்ல, வாசகர்களை கூட அல்ல, .. கார்பரேட் உலகத்தையும், மேலாண்மை அறிஞர்களையுமே ஒரு புத்தகம் முட்டாளாக்கி விட்டது ..

நம்ப முடியாமல் இருக்கலாம்.. ஆனால் இது உண்மை..

புத்தகத்தை பற்றி பார்க்கும் முன் அதை எழுதியவர் பற்றி பார்க்கலாம்..

டாம் பீட்டர்ஸ்---

1942ல் பிறந்த இவர் , பெண்டகனில் சில ஆண்டுகள் பணி ஆற்றினார். அதன் பின் ஸ்டான்போர்டில் எம் பி ஏ படித்து முடித்து வாஷிங்டன் திரும்பினார்..

அனுப்வமும் படிப்பும் கலந்த திறமை இவருக்கு மேலாண்மை துறையில் வரவேற்பை கொடுத்தது..

ஒரு மேனேஜ்மெண்ட் கன்சல்டன்சியில் பணியாற்றினார்.. அங்கு வாட்டர்மேன் என்பவரும் பணியாற்றினார்.

சிறந்து விளங்கும் ஒரு நிறுவனம் , மற்ற நிறுவனங்களில் இருந்து எப்படி தனித்து விளங்கிகிறது என்பதை ஆராய அவர் வேலை செய்த நிறுவனம் உத்தரவிட்டது..

உலகை கலக்கிய புத்தகம்…இன் சர்ச் ஆஃப் எக்சலன்ஸ் - 1982

வாட்டர்மேன் சில தனித்த பண்புகளை கண்டு பிடித்தார்.. இவைதான் ஒரு நிறுவனத்தை எக்சலண்ட் நிறுவனமாக்குகின்றன என்றார் அவர்..

இது ஆர்வமூட்டவே, இருவரும் சேர்ந்து அமெரிக்காவின் 43 பெரிய நிறுவனங்களை ஆராய்ந்து ( அல்லது ஆராய்ந்ததாக சொல்லி ) , அவற்றுக்கு பொதுவான எட்டு பண்புகள் இருப்பதாக சொன்னார்கள்..

என்ன பெரிய மேனேஜ்மெண்ட் படிப்பு? இந்த எட்டு பண்புகள் என்ன என்று பாருங்கள்..அதை அப்படியே உங்கள் நிறுவனத்தில் அமல் செய்யுங்கள் .. நீங்களும் எக்சலண்ட் நிறுவனம் ஆகி விடலாம்..

அவ்வளவுதான்..  மிக எளிது…

இப்படி இவர்கள் சொன்னதும், மேலாண்மை துறையின் நிபுணர்களான பீட்டர் டிரக்கர் போன்றோர் திகைத்து விட்டனர்.. ஒரு நிறுவனதை நடத்துவது எவ்வளவு கஷ்டம்.. அதன்  வெற்றிக்கு எவ்வளவோ விஷ்யங்கள் தேவை ஆயிற்றே.. இவர்கள் எட்டு விஷய்ம் இருந்தால், எக்சலண்டை எட்டி விடலாம் என்கிறார்களே என குழம்பினர்..

ஆனால் புத்தகம் எழுதிய இரட்டையர் அசரவில்லை.. நாங்கள் சும்மாவா சொல்கிறோம்.. எக்சலண்ட் நிறுவனங்களை ( ஐ பி எம், பி அண்ட்  ஜி , காட்டர் பில்லர், ஜெனெரல் எலெக்ட்ரிக் டிஜிடல் எக்யூப்மெண்ட் போன்றவற்றை ) ஆராய்ந்துதானே சொல்கிறோம்… என சொல்லவே, விற்பனை வரலாறு காணாத அளவில் ஆனது..

நாமும் எக்சலண்ட் நிறுவனம் ஆக வேண்டும் என நினைத்த நிறுவனங்கள் மொத்தமாக வாங்கி , த்ம் ஊழியர்களுக்கு வழங்கின..

பொதுவான வாசகர்கள் கூட தம் “மேனேஜ்மெண்ட் “ அறிவை வளர்த்து கொள்ள இதை வாங்கினர்.. வாங்கி பரிசளித்தனர்..இது போல எந்த மேனேஜ்மெண்ட் புத்தகமும் விற்பனை ஆகவில்லை என ஒப்பிட கூட முடியாது.. ஒப்பீட்டுக்கெல்லாம் அப்பாற்பட்டு விற்பனை ஆனது புத்தகம்..

கல்லூரி மாணவர்களுக்கு இந்த புத்தகம் ரெகமண்ட் செய்யப்பட்டது ( ஒட்டு மொத்த இந்திய நிலவரம் தெரியவில்லை… தமிழ் நாட்டில் இன்றும் இந்த புத்தகம் ரெகமண்ட் செய்யப்படுகிறது.. அந்த ரெகமண்டேஷனில் புத்தகம் வாங்கிய ஏமாளிகளில் நானும் ஒருவன்.. ஹி ஹி )

அவர்கள் தேர்ந்தெடுத்த எக்சலண்ட் நிறுவனங்களின் பொது தன்மை என்ன ?

  • விரைவாக முடிவெடு- விரைவாக செயல்படு
  • குறைந்த பட்ச ஆட்களை வைத்து அதிக பட்ச வேலைகளை முடி
  • வாடிக்கையாளருடன் தொடர்பில் இரு
  • ஊழியரின் செய்லதிறனை அதிகரி
  • ஊழியரை சுதந்திரமாக வேலை செய்ய விடு
  • கொள்கை அடிப்படையில், ஒரு லட்சியத்தை அடிப்படையாக கொண்டு வேலை செய்
  • என்ன தெரியுமோ அதை உருப்படியாக செய்
  • அடிப்படைபன்புகளை உறுதியாக கடை பிடி.. அன்ராட வேலையை சுதந்திரமாக விடு

அட.. இது இருந்தால் போதுமா..இதுதான் மேனேஜ்மெண்டா ..இதுதான் எக்சலண்ட் நிறுவனதின் அடிப்படை பண்பா என ஒட்டு மொத்த கார்ப்பரேட் உலகமும் வியந்து போற்றியது..

ஒரே ஆண்டுதான்..

அனைவருக்கும் மாபெரும் அதிர்ச்சி காத்து இருந்தது..

எக்சலண்ட் நிறுவனங்கள் என இவர்கள் தேர்ந்து எடுத்து இருந்தார்கள் அல்லவா..

அதில் கிட்டத்தட்ட அனைத்தும், எங்களால் தொழில் செய்ய முடியவில்லை.. நஷ்டத்தை சமாளிக்க முடியவில்லை… போய் வருகிறோம் என மஞ்சள் கடுதாசி கொடுத்தன..

அட, ஒன்று இரண்டு என்றால் பரவாயில்லை.. அனைத்தும் நஷ்டமா..இவற்றை  எப்படி எக்சலண்ட் நிறுவனம் என இவர்கள் தேர்ந்தெடுத்தார்கள்… அடிப்படை பண்புகளை எந்த அடிப்படையில் வரையரை செய்தனர்,,,  அந்த பண்புகளை இந்த நிறுவனங்கள் கடைபிடிக்கின்றன என்பதை எப்படி முடிவு செய்தார்கள் என கேள்விகள் எழுந்தன..தான் நம்பாத ஒரு விஷ்யத்தை, அவர் நிறுவனத்தில்கூட செயல்படுத்தாத விஷ்யத்தை, நஷ்டமாகும் நிறுவனங்கள் பின்பற்றும் விஷ்யத்தை நமக்கு போதித்தார்களா என பொருமினர். என்னதான் ஆராய்ந்தார்கள்

அப்படி ஒழுங்காக ஆராய்ந்து இருந்தால் , இவை எக்சலண்ட் நிறுவனங்கள் அல்ல… நஷ்ட நிறுவனங்கள் என தெரிந்து இருக்குமே என கோப பட்டனர்..

என்ன கோபித்து என்ன ? அதற்குள் புத்தகம் நன்றாக சம்பாதிது விட்டது…

அதிலும் , டாம் பீட்டர்ஸ் மிக நன்ராக சம்பாதித்தார்,,..

அவர் பணியாற்ற நிறுவனதில் இருந்து விலகி விட்டுத்தான் புத்தகம் ரிலீஸ் செய்தார்.. எனவே ராயல்டி பணம் இவருக்கு வந்த்து.. அந்த நிறுவனத்தில் இருந்து இருந்தால், அந்த நிறுவனத்துக்குத்தான் பணம் போய் இருக்கும்..

சரி..எங்கு தவறு நடந்தது..இதற்கு டாம் என்ன பதில் அளித்து சமாளித்தார்..  அதன் பின் அவர் புத்தம் எழுதினாரா? என்ன எழுதினார்? என்பதை விரிவாக பிறகு பார்க்கலாம்..

எது எப்படி இருந்தாலும், ஒட்டு மொத்த கார்ப்பரேட் உலகை முட்டாள் ஆக்கிய பெருமை , இந்த புத்தகத்துக்கு என்றும் உண்டு..

வரலாறு மறக்க முடியாத புத்தகங்களில் ஒன்று – இன் சர்ச் ஆஃப் எக்சலன்ஸ்

5 comments:

  1. (எழுத்தாளனையும் எழுத்தையும் பிரித்து பார்க்கும் கலாச்சாரம் இங்கு இல்லை என்பதும் ஒரு காரணம் )

    நீ எழுவதை உன்னாலேயே பின்பற்ற முடியவில்லை..ஊர்க்கு என்ன உபதேசம் என்று கேட்டு ஒதுக்கி விடுவார்கள்..


    ....யோசிக்க வைக்கும் விஷயம் தான்

    ReplyDelete
  2. இதற்கு அடுத்து அவர் என்ன செய்தார் என்பதும் சுவையானதுதான்

    ReplyDelete
  3. Iyya IBM and GE are ever green companies.
    Konjam History sllum podhu evidence kudunga,
    when did they file bankruptcy?

    ReplyDelete
  4. Iyya IBM and GE are ever green companies"

    உண்மைதான்.. ஆனால் ஒரு கால கட்டத்தில் ஐ பி எம் நிறுவனம் கிட்டத்தட்ட அழிவின் விளிம்புக்கு சென்றது..

    அதில் இருந்து எப்படி மீண்டது என்பது தனி வரலாறு.
    ஆனாலும் முன்பு இருந்த முதலிடத்தை இழந்தது, இழந்ததுதான்..

    சந்தை மாறுதல், புதிய கண்டுபிடிப்புகள், புதிய நிறுவனங்கள் உதயம் என பல காரணங்கள்..
    இதை எல்லாம் அந்த புத்தகம் அலசவில்லை

    ReplyDelete
  5. ரஞ்சிதானந்தாவின் போதனைகள் மாதிரி இருக்கு.

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா