Monday, November 17, 2014

மருதகாசியின் பாடல் வரிகளை மாற்றிய எம் ஜி ஆர் - கலவை பதிவு

முன் குறிப்பு - மிக்சர் போஸ்ட் என்ற ஆங்கில வார்த்தை தேவை இல்லையே என சுட்டிக்காட்டிய நண்பர் கரிகாலனுக்கு நன்றி
--------------------------------------------------------------
மலை வாசஸ்தலம் ஒன்றில் எம் ஜி ஆர் பட ஷூட்டிங் நடக்க இருந்தது... வெதர் நன்றாக இருக்கிறதா என கேட்டு வை,...என இயக்குனர் துணை இயக்குனரை பணித்து இருந்தார்... து . இ கலக்டர் அலுவகத்தை தொடர்பு கொண்டு அங்கு வெதர் நன்றாக இருக்கிறதா சார் என கேட்க , சூப்பர் வெதர் என சொல்லி விட்டனர்.
படக்குழு அங்கே சென்றது.. ஆனால் ஷூட்டிங் நடத்த தோதான வெதர் இல்லாமல் , படப்படிப்பை நடத்த முடியவில்லை.. பெரிய நஷ்டம்..
என்ன தவறு நடந்தது..
வெதர் நன்றாக இருக்கிறதா என இவர் கேட்டதன் அர்த்தம் , ஷூட்டிங் நடத்த போதுமான வெயில் , மழையற்ற தன்மை போன்ற சினிமா விவாகாரம்... அவர்கள் நன்றாக இருக்கிறது என சொன்னது , ஒரு சராசரி மனிதனின் பார்வையில்..மேக மூட்ட்டம் , மெல்லிய மழை போன்றவற்றை அவர் சிறப்பான வெதர் என சாதாரண விசிட்டர் பார்வையில் சொல்லி விட்டார்.
இவர் சொல்லிம்போதே தெளிவாக சினிமாவுக்கு ஏற்ற வெதர் இருக்கிறதா என கேட்டு இருக்க வேண்டும்...
இப்படி தகவல் தொடர்பு குளறுபடியால் பல பிரச்சனைகள் ஏற்படுவதுண்டு..
------------------------------------------------------------------
பிராமணர்களை திட்டுவது உபத்தரவமில்லாமல் அறச்சீற்றத்தை காட்டும் வழி என்ற கேவலமான மனப்போக்கு தமிழகத்தில் உள்ளது . அதை நம்மால் மாற்ற முடியாது . ஆனால் இந்த சராசரிகளின் பேச்சை கேட்டுக்கொண்டு , பிராமணர்கள் என்பதற்காக சில பொக்கிஷயங்களை ஒதுக்கி விடக்கூடாது . அந்த வகையில் வ வே சு ஐயர் பற்றிய புத்தகம் ஒன்றை படித்தேன் . சிறிய அறிமுகம் ஒன்றை விரைவில் தருவேன்
-----------------------------------------------------------
நேற்று நண்பர் தமிழ்வாசி பிரகாஷூடன் செல்பேசினேன் . ஓர் அற்புதமான கருத்தை எடுத்து வைத்தேன் . மூணு நிமஷம் மூச்சுவிடமால் பேசி முடித்ததும் , இரக்கமே இல்லாமல் ஒண்ணுமே புரியல என்றார் . பிறகு வேறு மாடுலேஷனில் குரல் மாற்றி மெதுவாக பேசினேன் . புரியவில்லை என்றால் தைரியமாக சுட்டிகாட்டுதல் நல்ல பண்பாகும்
-------------------------------------------------------------------------
வெள்ளைக்காரன் : வாட் ஈஸ் தொடுவானம்.
கிராமத்தான் : வானமும் , பூமியும் தொடும் இடம்
வெ: வானமும் பூமியும் தொடுது..உங்க ஊர்ல மனுஷன , மனுஷன் தொடுவதில்லை ‪#‎ஒருத்தி‬
--------------------------------------------------------------------
அடுத்த தேர்தலை நினைப்பவன் அரசியல்வாதி அடுத்த தலைமுறையை நினைப்பவன் தலைவன்... 
நான் எதையும் நினைக்காதவன்.. அதனால் நான் பிரதமர்‪#‎முகமதுபின்துக்ளக்‬
------------------------------------------
ஃபேஸ் புக்கில் இருக்கும் தன் நண்பர்கள் லிஸ்ட்டை தீவிரமாக அலசிக்கொண்டு இருந்தார் “ ஒரு நண்பர் “ . என்ன பண்றீங்க என்றேன்.. “ இல்லை, ஃபேஸ் புக் அக்கவுண்ட் டீ ஆக்டிவேட் பண்ணனும் ..அதுதான் வொர்க் “ என்றார்.
இதுக்கு என்ன பெரிய வொர்க்.. ரெண்டு நிமிஷத்துல செஞ்சுடலாமே என்றேன்.
ரெண்டு நிமிஷத்துல பண்ணிடலாம்.. ஆனால் ஃபேஸ்புக்கை விட்டு போகாதீங்க .. இலக்கியத்தை கை விட்டுடாதாதீங்கனு வேண்டுகோள் விடுக்க யாரையாவது நம்பகமான ஆள செட் பண்ணனுமே ..அதுதான் தேடுறேன் என்றார்.
” நீங்க ரிசைன் பண்ணுங்க ( ஞ்ங்கொய்யால ..பெரிய கவர்னர் போஸ்ட்டு) .. நான் கெஞ்சுற மாதிரி கெஞ்சுறேன்.. திரும்பி வந்து சேர்ந்துக்கங்க” என்றேன்.
” உங்களை எல்லாம் நம்ப முடியாது... ரிசைன் செய்த ஒரு நண்பருக்கு நன்றினு போஸ்ட் போடுவீங்க..வேற ஆள் பார்க்குறேன் “ என்றார்.
அதற்கு மேல் அங்கு இருக்க பிடிக்காமல் கிளம்பினேன்‪#‎ஒருநண்பர்பாறைகள்‬
_______________________________________________________
இந்த வஞ்சி மகள் ஒரு ஊதாப்பூ...
இசை வண்டுகள் வந்து ஊதாப் பூ.... 
இந்த கோலமகள் ஒரு கொய்யாப்பூ.. 
தென்றல் கைகளினாலே கொய்யா பூ

இந்த வண்ண மகள் விழிகள் எனும் வேலை.. ( வேல் )
கண்டு வர்ணனைகள் செய்வது என் வேலை...( Job/work)
தென்றல் மெல்ல மெல்ல நீந்துகின்ற மாலை..( evening)
இவள் மார்பினில் நான் ஏந்துகின்ற மாலை...( பூ மாலை )
அந்த காமன் விடும் மலர் கணைகள் அஞ்சும் (ஐந்தும்)
இவள் கிட்ட நின்றால் பாய்வதற்கு அஞ்சும் ( பயப்படும் )
இந்த தோகை மயில் உறவுகளை நாடி ( நாடி செல்லுதல் )
கொஞ்ச துடித்து இருக்கும் காதலனின் நாடி ( நாடி துடிப்பு )
_________________________________________________________
நான் வெஜ் உணவுகளை சமைக்கையில் அதன் ரத்த வாசம், அறுபட்ட காயம் போன்றவற்றை மறைக்க வாசனை பொருட்கள் , மசாலாக்கள் சேர்ப்போம் அல்லவா? ஆனால் காய்கறிகள் , கீரைகள் போன்றவற்றுக்கு என இயற்கை மணம் உண்டு..அதை வாசனை பொருட்களால் மறைக்க கூடாது.. போரும் அமைதியும் போன்ற நூல்களில் தேனீர் கொதிக்கும்போது உருவாகும் நறுமணத்தை டால்ஸ்டாய் அழகாக வர்ணித்து இருப்பார்... அது போன்ற நறுமணத்தை அனுபவிக்க இந்த குளிர் காலம் மிகவும் ஏற்றது
-----------------------------------------------------------------------
கண்ணை நம்பாதே..உன்னை ஏமாற்றும் என்ற எம் ஜி ஆர் பாடல் கேட்டு இருப்பீர்கள்.. அதை இயற்றியது வாலி அல்லது கண்ணதாசன் என நினைத்திருப்பீர்கள்/ நினைத்திருந்தேன்.. இல்லை...இது மருதகாசி... இதில் ஒரு சுவையான செய்தியை சொல்கிறார்..
பொன் பொருளை கண்டவுடன் ,
வந்தவழி மறந்து விட்டு
தன் வழியே போகிறவர் போகட்டுமே.. 
என் மனதை நான் அறிவேன்
என் உறவை நான் மறவேன்
எது ஆன போதிலும் ஆகட்டுமே
இப்படி எழுதினாராம் மருத காசி.. பாடலை படித்து பார்த்த எம் ஜி ஆர் ஒரு கேள்வி கேட்டாராம் .. ‘ ஒருவனுக்கு பொன் பொருள் வந்தவுடன் , பழைய தவறான பாதையை விட்டுவிட்டு, புதிதாக ஒரு வழியை தேர்ந்தெடுத்து , தன் வழியே போனால் நல்லதுதானே.. இதை ஏன் ஒரு குறை போல எழுதி இருக்கிறீர்கள் என்றாராம்.. எம் ஜி ஆரின் நுட்பமான பார்வையை கண்டு திகைத்த மருத காசி அதை மாற்றினாராம்..
பொன் பொருளை கண்டவுடன் வந்த வழி மறந்து விட்டு
”கண் மூடி” போகிறவர் போகட்டுமே...
இப்போதைய நாயகர்கள் இப்படி எல்லாம் பாடலை படித்து பார்க்கிறார்களா?
-------------------------------------------------------------------------------
பழைய பாடல் என்றால் கண்ணதாசன் , வாலி என நம் ஆட்கள் நினைப்பதுண்டு..அந்த காலத்தில் மருதகாசி தன் பாணியில் கலக்கினார்..
தென்றல் உறங்கிய போதும் திங்கள் உறங்கிய போதும்
கண்கள் உறங்கிடுமா காதல் கண்கள் உறங்கிடுமா.
----------------------------------------------------------------------
ஒரு நண்பர் யுக்தியை பலர் திறம்பட பயன்படுத்தினாலும் சிலர் சொதப்புகிறார்கள் . ஒரு நண்பரை காலையில் சந்தித்தபோது என சிலர் ஆரம்பிக்கிறார்கள் . அதில் தவறில்லை . ஆனால் அதை 6.30க்கே போஸ்ட் செய்து தொலைக்காதீர்கள்
--------------------------------------------------------------------
நீங்கள் 15வ்யது ஆணாகவோ பெண்ணாகவோ இருந்தாலும், அடல்ட்ஸ் படங்களில் நடிக்க தடை இல்லை... ஆனால் என்ன நடித்து இருக்கிறீர்கள் என பார்ப்பது சட்டப்படி தவறு - சட்டம் ஒரு கழுதை
-------------------------------------------------------------------------
திருச்சியில் இருந்து எக்மோருக்கு ஒரு அன் ரிசர்வ்டு டிக்கட் எடுக்கிறீர்கள்... தாம்பரத்தில் இறங்கி அதே டிக்கட்டை வைத்து , ஒரு எலக்ட்ரிக் டிரையினை பிடித்து , மாம்பலம் நுங்கம்பாக்கம் என அந்த வழியில் ( தாம்பரம் - எக்மோர் ) எங்கு வேண்டுமானாலும் இறங்கலாம்... ஆனால் அந்த டிக்கட்டை விட அதிக காசு கொடுத்து வாங்கிய ரிசர்வ்டு டிக்கட்டை வைத்து ( செகண்ட் கிளாஸ் பெர்த் , ஏசி ) இப்படி பயணிக்க முடியாது # சட்டம்ஒருகழுதை

------------------------------------------
அந்த காலத்தில் 24 மணி நேரம் இயங்கும் இண்டர்நெட் செண்டர்கள் இருந்தன . நள்ளிரவு கூட பிரவுசிங் செய்யலாம் . நெட் பரவலாகி விட்டதால் அவை மறைந்து விட்டன .திடீரென உருவாகி திடீரென மறைந்த ஒரு தொழில் அது . பேஜர் என இன்னொன்றும் இப்படியே

---------------------------------------------
பேருந்து பயணம் . சோலை புஷ்பங்களே என்ற பாடல் . அந்த பாடல் வெளிவந்தபோது பிறந்தே இராத ஓர் இளம்பெண் அதை அழகாக ரசித்தது பாடலை விட அழகாக இருந்தது . ஸ்டாண்டிங்கில் இருந்தார் . பாடலுக்கு ஏற்ப அழகாக தலையை மட்டும் அசைத்து ரசித்தது செம க்யூட் . நானும் அப்படி செய்ய முயன்றேன் . சரியாக வரவில்லை . ஒரு கட்டத்தில் அந்த விபரீத முயற்சியை அவர் பார்த்துவிட்டு கொடுத்த நளினமான ரெஸ்பான்ஸ் குறித்து பஸ்சிலேயே எழுத நினைத்தேன் . ஆனால் பஸ் குறித்த எழுத எனக்கே போர் அடித்து விட்டது . படிப்பவர்களுக்கும் சுவாரஸ்யமாக இருக்காது . நாமே இவ்வளவு யோசிக்கிறோம் . இ. வே . மா படத்தில் ஒரே மாதிரி பஸ் காட்சி மீண்டும் மீண்டும் ஒரே கான்சப்டில் வரும் . முடியல . பஸ் பயணம் செய்தால் எத்தனையோ விஷயங்கள் கிடைக்கும்
-------------------------------------------------------------------------
incentive இல்லாமல் உங்களால் ஏன் காதலிக்க முடியவில்லை ? பாதுகாப்பு , அரவணைப்பு , பாலுறவு , கிளர்ச்சி , இன்பம் என எதையும் எதிர்பாராமல் நிகழ்வதே காதல் .- ஜே கிருஷ்ணமூர்த்தி
-----------------------------------------------------------------------------
முன்னாள் காதலி அல்லது முன்னாள் காதலன் என்ற சொற்பிரயோகம் எனக்கு எப்போதுமே குழப்பம்தான் . நாம் காதலிக்கும் ஒருவரை காதலிப்பதை என்றாவது ஒரு நாள் நிறுத்துதல் சாத்தியமா ? காதல் என தவறாக நினைத்த உறவில் இருந்து வெளி வந்த பின் சம்பந்தப்பட்டவரை முன்னாள் காதலன் என்றோ காதலி என்றோ எப்படி சொல்வது ? It was never a love at all 
------------------------------------------------------------------------------------
ஜானி படத்தை ரீமேக் செய்யுங்களேன் என என்னிடம் சிலர் கேட்பார்கள்..கண்டிப்பாக செய்யலாம்... ரஜினி போன்ற ஓர் ஆக்டரை கூட்டி வாருங்கள் என்பேன்...அதன் பின் அவர்கள் வருவதில்லை - இயக்குனர் மகேந்திரன்
----------------------------------------------------------------------------
இயக்குனர்கள் அனைவருக்குமே ரஜினியின் நடிப்பு மீது அளவற்ற நம்பிக்கை உண்டு... ஒன்பது ரூபாய் நாவலை படமாக்க , தங்கர் பச்சான் முதலில் அணுகியது ரஜினியைத்தான்... ரஜினிக்கும் ஓக்கேதான்...ஆனால் க்ளைமேக்சை தன் ரசிகர்கள் ஏற்க மாட்டார்கள் என தயங்கி விட்டார்... ரஜினியிடம் ஏன் சென்றீர்கள் என தங்கரிடம் கேட்டார்கள்... அவரைப்போன்ற யதார்த்தமான நடிகர் வேறு யாரும் இங்கு இல்லை என்றார் அவர்
------------------------------------------------------------------------------
செக்ஸ் ஏன் இந்த அளவுக்கு மனதை ஆக்ரமிக்கிறது ? சுயம் அழிந்து , முழுமையாக ஈடுபட செக்சில் மட்டுமே உங்களால் முடிகிறது . எனவே மீண்டும் மீண்டும் அந்த அனுபவத்தை மனதுக்குள் நிகழ்த்துகிறீர்கள் . இது அவசியமற்றது . சாப்பிடுவதை , நீர் அருந்துவதை , உரையாடுவதை , முழுமையாக ஈடுபட்டு செய்து பழகுங்கள் . சுயம் அழிய , செக்ஸ் தேவையில்லை என புரியும்#ஜேகிருஷ்ணமூர்த்தி
--------------------------------------------------------------------------
ஜப்பானில் சில பத்திரிக்கைகள் கடைசிப்பக்கத்தில் இருந்து ஆரம்பித்து அப்படியே சென்று முதல் பக்கத்தில் முடியுமாம்.. இதை சுஜாதா நகைசுவையுடன் போலியான தற்புகழ்ச்சியுடன் கணையாழியின் கடைசிப்பக்கத்தில் இப்படி எழுதுகிறார்.
ஜப்பானில் எல்லா பத்திரிக்கைகளும் கணையாழி போலத்தான்.. கடைசிப் பக்கத்தில் இருந்துதான் படிக்க ஆரம்பிக்கிறார்கள்..
-------------------------------------------------------------------------------
அரசியல்வாதியின் கல்லறை வாசகம்..
தயவு செய்து கை தட்டி விடாதீர்கள்.
எழுந்தாலும் எழுந்து விடுவார்
-----------------------------------------------------------------------------------
பற்களின் குழிகளை அடைக்கும் பல் வைத்தியர் இறந்து விட்டார்...அவருக்கான கல்லறை வாசகம்..
மெதுவாக நடந்து செல்லுங்கள்
பல் வைத்தியர்
தன் கடைசி குழியை
அடைத்துக் கொண்டு இருக்கிறார்
--------------------------------------------------------------------------
ந்யூட்டன் சமாதியில் காணப்படும் வாசகம்..
இயற்கையும் அதன் விதிகளும்
இருட்டில் மறைந்து இருந்தன..
ந்யூட்டன் உண்டாகக்கடவது
என்றார் தேவன்
எல்லாம் வெளிச்சமாயிற்று
----------------------------------------------------------------------------------------
மெட்டி படத்தில் ஒரு காட்சி.... தன் தங்கை யாரோ ஒருவனை காதலிப்பதாக சொல்கிறாள்..ஹீரோ கேட்கிறான் “ அவன் என்ன ஜாதி ? “ .... ஒரு ஹீரோ இப்படி ஒரு வசனம் பேசி எந்த படத்திலும் பார்த்ததில்லை... ஜாதி என ஒன்றே நம் சமூகத்தில் இல்லாதது போலவும் , வில்லன்கள் மட்டுமே ஜாதி பற்றி பேசுவது போலவும் நம் ஆட்கள் க்தை சொல்வார்கள்.. ஜாதி வித்தியாசம் பார்க்காமல் பலர் இருக்கிறார்கள் என்பது உண்மை..ஆனால் ஜாதி என ஒன்று இல்லாதது போல நடிப்பது யதார்த்தம் இல்லை... ஆனாலும் ஒரு விஜயோ , அஜித்தோ தன் படங்களில் யாரிடமாவது என்ன ஜாதி என கேட்பதை ஹீரோயிசத்துக்கு களங்கமாகவே நினைப்போம்... ஆனால் மகேந்திரன் துணிச்சலாக அந்த வசனத்தை தன் நாயகனுக்கு கொடுத்து இருக்கிறார்... அந்த நாயகன் ஜாதி வித்தியாசம் பார்க்காதவனாக இருக்கலாம். ஆனால் தன் தங்கையின் காதலன் குடும்பம் , ஜாதி , மதம் பற்றி தெரிந்து கொள்ள விரும்புவது இயல்புதானே..இந்த சாதாரண யாதார்த்தம் கூட நம் படங்களில் இருக்காது
Like----------------------------------------------------------------------------------------------------------------
ஓர் ஐந்து வயது சிறுவன் சாலையில் நடந்துகொண்டிருந்தபோது கீழே கிடந்த பத்து ரூபாய் மகிழ்ச்சி அளித்தது . அன்று முதல் தரையை பார்த்தே நடக்க ஆரம்பித்தான்
அறுபது ஆண்டுகள் கழித்து , நண்பனிடம் சொன்னான் . தரையை பார்த்து நடந்தேன் . மொத்தம் ஐந்தாயிரம் ரூபாய் . இரண்டு வளையல்கள் . சில ஜோடி புதிய செருப்புகள் . சோழர்கால நாணயம் ஒன்று , காதல் கடிதங்கள் ரெண்டு , தற்கொலை கடிதங்கள் சில கிடைத்தன என்றார் . நண்பன் சொன்னான் . அட முட்டாளே . நீ என்னவெல்லாம் இழந்திருக்கிறாய் தெரியுமா ? பல சூரிய உதயங்கள் , மேக ஓவியங்கள் , வான வில் , சாலை ஓர மலர்கள் , குழந்தைகளின் புன்னகை , அழகிய பெண்கள் என பட்டியலிட்டான் . இவர் சொன்னார் . இவற்றையெல்லாம் நான் இழந்துவிட்டதாக நினைக்கிறாய் . நீயும் இவற்றை கவனித்திருக்க மாட்டாய் . சும்மா யோசித்து சொல்கிறாய் . அதற்கு நானே மேல் . தரையை பார்த்தே , மக்களைப்பற்றி நாகரிகங்கள் பற்றி சொல்லும்நிலைக்கு வளர்ந்திருக்கிறேன் . நீ வெறும் loser . # பிச்சை எடுத்தாலும் அதை முழு கவனத்துடன் பிரக்ஞையுடன் செய்யுங்கள்
---------------------------------------------------------------------------------------------------
மெட்டி படத்தில் ஒரு காட்சி . தங்கள் தாயாரின் சடலம்கூட அவர்களை அந்த அளவுக்கு கதற வைக்காது . சடலம் எடுத்துச்சென்றவுடன் , பூக்களும் மாலைகளும் மட்டும் கிடக்கும் . நடுவே வெற்றிடம் . அந்த வெறுமை ! ! கதறி விடுவார்கள் . நாமும்தான் . சினிமா மொழியை புரிந்துகொண்ட ஒப்பற்ற கலைஞன் மகேந்திரன்



3 comments:

  1. ஒவ்வொன்றும் 'நச்' ரகம்...

    ReplyDelete
  2. அத்தனையும் அருமை! தெவிட்டாத சேதிகளை சேகரித்துத் தந்துள்ளீர்கள்.
    விரும்பின், எனக்கு "இந்த வஞ்சிமகள் ஒரு ஊதாப் பூ" எனும் பாடலை மின்னஞ்சலில் அனுப்பமுடியுமா?
    பிரதி செய்ய முடியவில்லை. என் சேகரிப்பில் வைத்திருக்க விரும்புகிறேன்.
    இது சிலேடை தானே! தெளிவு படித்தவும். நன்றி
    johan.arunasalam@gmail.com

    ReplyDelete
  3. செலவிட்ட நேரம் பயனுள்ளது. வாழ்த்துக்கள்.

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா