Sunday, November 2, 2014

சின்ன்ச்ஞ்சிறு கதைகள் , அனுபவம் , கடவுள் குறித்து பாலா

கல்லூரி வாழ்க்கையில் முதல் ஆண்டு படிக்கையில் சில நண்பர்கள் அறைக்கு பாலியல் தொழிலாளியை அழைத்து வர என் உதவியை நாடினார்கள்.. அதற்கு காரணம் நான் அதில் எக்ஸ்பெர்ட் என்பது அல்ல.. நான் தங்கி இருந்த அறை ஓனர் பிரச்சனை இல்லாத தனி அறை... வேறு எங்கும் அறை எடுப்பதை விட , நம் ரூமில் வைத்து முடித்து விடலாம் என்பது அவர்கள் ஐடியா... எனக்கு அதில் ஆர்வம் இல்லை.. இதை எல்லாம் கூட்டணி அமைத்து செய்வதே பிடிக்கவில்லை... வறுமையை ப்யன்படுத்தி ஒரு பெண்ணை இப்படி அழைத்து வந்து பயன்படுத்துவதையும் நான் விரும்பவில்லை.. ஆனாலும் வெளியில் இருந்து ஆதரவு என்ற அடிப்படையில் அறையை மட்டும் அளிக்க ஒப்புக்கொண்டேன்.. நாங்கள் தங்கி இருந்தது சற்று ஒதுக்குப்புறமாக இடம்... பஸ் ஸ்டாப் சற்று தொலைவில் இருக்கும்.. எனவே பஸ் ஸ்டாப்பில் இருந்து நான் போய் பைக்கில் அழைத்து வந்தேன்.. எங்களை விட இரண்டு வயது பெரிய பெண்.. எனக்கு அவரைப்பார்க்கவே பாவமாக இருந்தது.. என்னிடம் ச்கஜமாக பேசினார்.. படிப்பை விசாரித்தார்.. பாவம்.. அவரை ரொம்ப டார்ச்சர் செய்ததாக காலையில் அறிந்தபோது மிகவும் வருந்தினேன்,,,
ஒன்று நான் அதில் ஈடுபட்டு இருக்க வேண்டும்.. அல்லது அறையை தர மறுத்து முற்றிலும் ஒதுங்கி இருக்க வேண்டும்.. இந்த நடு நிலை என்பது மிக மிக மோசமானது என்பதை உணர வைத்த சம்பவம் அது...

*********************************************************************************************

அபூர்வ சகோதரர்கள் .சிறப்பு சிறுகதை 

அண்ணன் பேப்பர் பார்த்துக் கொண்டிருந்தார் . அண்ணன் ஆதரவு மாவட்ட செயலாளர்கள் டிஸ்மிஸ் . போன் அடித்தது .

 தம்பி  - அண்ணே பேப்பர் பார்த்தீங்களா . இது உங்களுக்கு முத வார்னிங்

அடுத்தவாரம் . பொருளாளர் டிஸ்மிஸ் . போன் வந்தது . அண்ணே பேப்பர் பார்த்தீங்களா .செகண்ட் வார்னிங்


அடுத்தவாரம் . நிர்வாகிகள் டிஸ்மிஸ் . அண்ணே பேப்பர் பார்த்தீங்களா என பேசும்போது அண்ணன் வீட்டு நாய் சத்தம் போட்டு இடைஞ்சல் செய்தது . அண்ணன் அதை துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தினார் . தம்பி சவுண்ட் கேட்டியா ? இது உனக்கு ஃபர்ஸ்ட் அண்ட் லாஸ்ட் வார்னிங்


************************************************************************************************

அண்ணன் காட்டிய வழியம்மா ( சிறப்பு சிறுகதை )

“ உன் பேச்சை கேட்டு உன் அண்ணன கட்சிய விட்டு தூக்கியது தப்பா போச்சு.. இப்ப பாரு . வாஷ் அவுட் ஆகி இருக்கோம் “ கொதித்தார் தலைவர்...
தோற்றாலும் பரவாயில்லை.. 20 தொகுதிகளில் மூன்றாம் இடம்...

“ அப்பா.. சட்டசபை தேர்தலில் பாருங்க”
“ தக்காளி... இதுலயே கிழிக்க முடியல..அதுல ஒண்ணும் சாதிக்க மாட்ட... சரி,,, ஒரு போட்டி வைக்க போறேன்.. அதில் ஜெயிப்பவன் தான் அடுத்த தலைவன் “
“ சரிப்பா “
“ இதோ பத்தாயிரம் ரூபாய்.. இதை செலவு செஞ்சு நம்ம வீட்டை நிரப்பணும்... யாரு செய்றாங்களோ அவன் தான் தலைவன்”
“ சரிப்பா “
------------------------------------------
பத்தாயிரம் ரூபாய்க்கும் தலைவரின் நூல்கள் , கட்சி பத்திரிக்கை என வாங்கி வீட்டில் அடுக்கினார் தம்பி.. 80%தான் நிரப்ப முடிந்தது...
அண்ணனிடம் பத்தாயிரம் கொடுத்து விட்டு , தந்தையும் இரண்டாவது மகனும் வெளியே சென்றார்கள்..
அண்ணன் அந்த பத்தாயிரத்தில் ஐந்து ரூபாய் செல்வு செய்து கால் செய்து தன் ஆதரவாளர்கள் சிலரை அழைத்தார்.. ஐந்தாயிரம் ரூபாய்க்கு சரக்கு வாங்கினர்
ஒரு மணி நேரம் கழித்து தலைவரும் இரண்டாம் மகனும் வந்தனர்,...
அறை நிரம்பி இருந்தது...!!!!!!
.. அண்னனின் ஆதரவாளர்களின் சிரிப்பால் !!!!!!!!!!!!!!!!!!!!!
***********************************************************************************************

காதலே நிம்மதி
அப்பாடா . அம்மிக்கல்லை தலையில் போட்டு கணவனை கொன்று எரித்தாயிற்று .அவன் ஓடிப்போய்விட்டதாக கதையை பரப்பிவிட்டு , கள்ள காதலனை கணவனாக்கி விட வேண்டியதுதான் நினைத்துக் கொண்டாள் அவள் . பள்ளி விட்டு வந்த மகன் கொஞ்ச நேரம் கழித்து தன் அறையில் போய் விட்டான் . காலை . அப்பா ஓடி விட்டதாக சொல்ல வேண்டியதுதான் . அவனே பேச்சை ஆரம்பித்தான் . அம்மா , அப்பாவுடன் ஏதும் சண்டையா ? அதிர்ந்தாள் . ஏண்டா அப்படி கேட்கிற ?
நைட் என் ரூம்ல வந்து தூங்கினாரே . அதுதான் கேட்டேன் .


***********************************************************************************************************************
கல்யாணி என்ன செய்து விட்டாள்....
“ அண்ணா.. நீ ஆயிரம் சொல்லு... அம்மா மாதிரி வராது.. “ என்றாள் கல்யாணி தீர்க்கமாக...
“ அம்மாவை நான் குறைச்சு சொல்லல கல்யாணி.. ஆனா அப்பாவுக்கு நிகர் அப்பாதான் “ என்றான் குணசேகரன்...

“ஒத்துக்கவே முடியாது . அம்மா ஒரு படி மேல் ‘
புன்னகைத்தான் குணா “ வழக்கமா பொண்ணுங்களுக்கு அப்பாதான் பிடிக்கும்னு சொல்வாங்க.. நீ ஏன் எப்படி இருக்க.?. சைக்கலாஜிக்கல் பிராப்ளமா? “
கல்யாணி கோபமாக எழுந்தாள்..
: ராஸ்கல்,,,உனக்குதாண்டா சைக்காலாஜிக்கல் பிராப்ளம்..இல்லைனா டெய்லி அப்பானு அடம் பிடிப்பியா... இன்னிக்கு டின்னர் அம்மாதான்” பேய் போல கத்தியவாறு ஃபிரிஜ்ஜை திறந்தாள்..
உள்ளே இரண்டு மண்டை ஓடுகளும் மாமிச துண்டங்களும் கிடந்தன...
*****************************************************************************************************************
வாக்களிப்பதில் சிரமம் இருந்தால் அலுவலரை அணுக வேண்டும் . அவர் விண்ணப்ப படிவம் தருவார் . அதை நிரப்பி அவரிடம் கொடுக்க வேண்டும் . அவர் மேலதிகாரிக்கு அதை கொடுப்பார் . அதை பரிசீலித்து உதவியாளரை நியமிப்பார் . இதை செய்யாமல் விஜயகாந்துக்கு அவர் மனைவி உதவியது தவறு . தேர்தல் கமிஷன் சட்ட விளக்கம் .
தக்காளி , லுச்சாத்தனமா என்ன பேச்சு? அப்படி விண்ணப்ப படிவம் ஃபில் பண்ற அளவுக்கு தெளிவா இருந்தா , சுயமா ஓட்டு போட்ருப்பாரே?


********************************************************************************************************

மொரிஷியஸ் நாட்டு கரன்சியில் ஆங்கிலத்தில் ரூபாயின் மதிப்பு எழுதப்பட்டு இருக்கும்..அதன் கீழ் இரண்டாம் இடத்தில் தமிழ் இருக்கும்.. அதன் கீழ் ஹிந்தி 3ஆம் இடத்தில் இருக்கும்... இந்தியர் ஒருவர் அதை பார்த்தாராம்.. ஹிந்திதான்பா அதிகம் பேசப்படும் மொழி...தமிழை தமிழ் நாடு எனும் சின்ன பகுதியில்கூட பேசுவதில்லை..அதற்கு ஏன் இரண்டாம் இடம் என்று சொல்லவே ஹிந்தியை இரண்டாம் இடத்துக்கு கொண்டு போனார்கள்... அங்குள்ள தமிழர்கள் போராடினர்... கரன்சிகளை எரித்தனர்... கோடிக்கணக்கான கரன்சிகள் எரிக்கப்பட்டதால் அரசு பணிந்தது... மீண்டும் தமிழ் பழைய இடம் பெற்றது...

*******************************************************************************************************************

என்னிடம் இருக்கும் கவிதையை கேளுங்கள் , தருகிறேன்
என்னிடம் இருக்கும் புன்னகையை கேளுங்கள் , தருகிறேன்
என்னிடம் இருக்கும் மரணத்தை மட்டும் கேட்காதீர்கள்
அதை என் இனத்துக்காகவும் தமிழுக்காகவும் வைத்திருக்கிறேன்
-அறிவுமதி


***************************************************************************************************************

சங்ககால பன்னி பாடல்ஒரு வீரன் வேட்டை நாய்களோடு பன்றி வேட்டைக்கு போனான் . ஆண்பன்றி பெண்பற்றி அதன் குட்டிகளை பார்த்து மகிழ்ந்தான் . நாய்களை ஏவினான் . ஆண் பன்றி நாய்களை விரட்டி அடித்தது . வீரன் டென்ஷன் ஆகி தானே களம் இறங்கினான் . அம்பை எறிய ஆயத்தமானான் . ஆண் பன்றி தன் குடும்பத்தை தன் பின் நிற்க வைத்து விட்டு அவனுடன் மோத ஆயத்தம் ஆனது . தனக்கு சமமான வீரனை பார்த்த மகிழ்வுடன் வீரன் வேட்டையை நிறுத்திவிட்டு மனநிறைவுடன் கிளம்பினான்

***********************************************************************************************

பென்சிலை சீவும்போது
எனக்கு கேட்கிறது
எங்கோ காடுகள்
முறிந்துவிழும்
சத்தம் -கல்யாண்ஜி


******************************************************************************************************
டீக்கடைகள் மூடப்பட்டதால் என் ஆதரவாளர்களுடன் நேற்று ஆலோசனை நடத்த முடியவில்லை . ஆலயம் போனேன் . நல்ல கூட்டம் . செருப்பை ஓரிடத்தில் விட்டேன் .இப்படி விட்டா ஆட்டய போட்ருலாய்ங்கடா . தனிதனியா பிரிச்சுபோடு . யாரும் எடுக்க மாட்டாய்ங்க்ய என்றான் கூட வந்த அறிவாளி . என் செருப்பை எல்லாம் யாரும் எடுக்க வாய்ப்பில்லை . ஆனாலும் சொன்னபடி செய்தேன் . அவன் கொஞ்ச நேரத்தில் போய் விட்டான் . நான் கொஞ்ச நேரம் கழித்து கிளம்பினேன் . ஒரு செருப்பு இருந்தது . இன்னொன்றை எங்கு விட்டேன் ? தெரியவில்லை .கண்டுபிடிக்க முடியவில்லை . ஒற்றை செருப்பை தூக்கி போட்டு வேறு செருப்பு வாங்கினேன் . இன்று அதே கோயில் போனேன் . அந்த ஒற்றை செருப்பு வைத்த இடத்தில் இருந்தது

**********************************************************************************************************************
நான் செய்த பணிகளை , நான் இல்லாமல் மார்க்ஸ் செய்திருப்பார் . ஆனால் அவர் செய்ததை அவரன்றி யாரும் செய்திருக்க முடியாது -எங்கெல்ஸ்

***********************************************************************************************************************
வழவழப்பான தாளில் இருந்த ஆங்கில கில்மா புத்தகத்தை கைமாத்தாக காசு வாங்கி , அந்த காசில் வாங்கினேன் . ஆனால் டிக்ஸ்னரியை பார்த்து படிப்பதற்குள் சுருண்டு சுருங்கி போய் விட்டது மனது . காசு வேஸ்ட் . ஆனால் பூனை , சேவல் போன்றவற்றுக்கான ஆங்கில வார்த்தைகளை அப்படித்தான் கற்றேன்
******************************************************************************************************************

டிரெய்னில் யாரென்றே தெரியாதவர்களிடம் உடமைகளை பார்த்துக்கொள்ள சொல்லிவிட்டு வெளியே போவோம் . பெரும்பாலும் ஏமாற்ற மாட்டார்கள் . நம்பிக்கைவைப்பது என்பது இயல்பான தன்மை என இப்படி விளக்குகிறார் ஓஷோ . ஆனால் அறிவு ஜீவிகள் நம்பிக்கை வைப்பதை பலவீனமாக நினைக்கிறார்கள் . ஆன்மிக பாதையில் உலகியல் அறிவுக்கு வேலையில்லை என்கிறார் ஓஷோ

*******************************************************************************************************
வயிற்று பசிதீர்க்க
வராதா என்று ஏங்கி
மழைக்கு அண்ணாந்து
பார்த்த கண்கள் கண்டுகொண்டன
வானம் எல்லை இல்லாதது
-பிரமிள்

******************************************************************************************************

மருத்துவமனை போனேன் . அங்கே ஒரு பெண் . செம சிவப்பு . பிரவுன் கண்கள் . ஷார்ட் அண்ட் ஸ்டைலிஷான கண்கள் . இரட்டை ஆயுதங்கள் போன்ற , ஒரே அளவில் , அழகான அளவான பெண்மை மிளிரும் இரண்டு கன்னங்கள் . இதெல்லாம் ஈர்க்கவில்லை . வலது கன்னத்தில் நியூசிலாந்து மேப் போல அழகாக பழுப்பு நிற மச்சம் . நச் . ரசித்தபடி அமர்ந்திருந்தேன் . இன்னொருவரிடம் அவர் பேசியதில் இருந்து அவர் ஏன் வந்து இருக்கிறார் என்பது தெரிய வந்தது . அந்த மச்சத்தை நீக்க முடியுமா என கன்சல்ட் செய்ய வந்தாராம் . ஓவியங்களுக்குகூட ரசனை இல்லாமல் போகக்கூடும் என்ற இயற்கையின் விளையாட்டு ஆச்சர்யப்பட வைத்தது

*************************************************************************************************
சில நேரங்களில் , குதூகலமாக இருப்பது பாவத்தை அளிக்கிறது . சில நேரங்களில் , பாவம் செய்வது குதூகலம் அளிக்கிறது -பைரன்

**********************************************************************************************************
ஓஷோ அனைவரையும் கிண்டல் செய்தார் . காந்தி முதல் பாதிரியார்கள் வரை யாரையும் விட்டு வைக்கவில்லை . அப்பேற்பட்ட ஓஷோவுக்கே செக் வைத்தவர்தான் யூஜி கிருஷ்ணமூர்த்தி . இவர் ஓஷோவையை கிண்டல் செய்யலானார் . பல சீடர்கள் ஓஷோவிடம் இருந்து கட்சி மாறத்தொடங்கினர் . யாரும் யூஜியிடம் போகக்கூடாது என போர்டு எழுதி வைக்கும் நிலை ஏற்பட்டது . வேறு யாருக்கும் இந்த அளவு ஓஷோ அஞ்சியதில்லை . வல்லவனுக்கு வல்லவன்
*************************************************************************************************************
சமாதியில் அமர்ந்து தியானம் செய்ய நினைத்தேனா ? ஆனாலும் மெல்லிய பயம் . தனிமை . தூரத்து நிலவு . கண் மூடினேன் .யாரோ வருடுவது போல இருந்தது . அந்த இடத்தை போய் யார் தொடப்போகிறார்கள் . பிரமையா பேயா . ஆனாலும் இதமாக இருந்தது . அனுமதித்தேன்ஆனால் .ஆஆ. பேய்க்கு பல் உண்டா . திடுக்கிட்டு விழித்தேன் . பேய் இல்லை . கடி நிற்கவில்லை . எறும்பு . சென்னையில் இருந்தே பயணித்திருக்கிறது . பாவம் . மனித சமாதியில் அதுவும் சமாதி ஆகி விட்டது
********************************************************************************************************************
லவ் பெயிலர் பரிணாம வளர்ச்சி

1980வரை தற்கொலை
1990வரை தாடி வளர்ப்பு
2000 வரை குழந்தைக்கு காதலி பெயர் வைத்தல்
2010 வரை பாஸ்வேர்டுக்கு காதலி பெயரை வைத்தல்
2014 அடுத்த காதலிக்கு முந்தைய காதலி பெயரை வைத்தல்


பெண்கள் எப்பவும் ஒரேமாதிரிதான் . காதலனை பிரிந்த ஒரே ஆண்டில் கல்யாணமாகி குழந்தை பெற்று , மாமாவுக்கு டாட்டா சொல்லு


*************************************************************************************************

இயக்குனர் பாலா பேட்டியில் இருந்து
மனைவி - என் தாய்
மகள் - இன்னொரு தாய்
தந்தை - எனக்கு ஏற்பட்ட பெரிய இழப்பு
தோல்வி - என் செருப்பு
போதை - அனுபவித்தது போதும்
கடவுள் -நாம் அனைவரும்


****************************************************************************************************
கம்யூனிஸ்ட்டுகள் ஏன் இடதுசாரிகள் என அழைக்கப்படுகிறார்கள் என்பது பலருக்கு தெரியாது..ஃபிரஞ்சு புரட்சியின்போதுதான் இந்த சொல் புழக்கத்துக்கு வந்தது..1789ல் ஃபிரெஞ்சு தேசிய அசெம்ப்ளி கூடியபோது , மாற்றத்தை விரும்பாத கன்சர்வேட்டிவ்கள் வலதுபுறம் அமர்ந்து இருந்தனர்...புரட்சிகரமான கருத்து கொண்டோர் இடதுபுறம் அமர்ந்து இருந்தனர்..இபப்டி அமர்வது வழக்கமாகி விட்டதால் காலப்போக்கில் புரட்சியாளர்கள் இடது சாரிகள் என பெயர் பெற்றனர்.. இன்னும் பல நாடுகளில் இடது சாரிகளுக்கு இடது புறமே இருக்கை அளிக்கப்படுகிறது
******************************************************************
சோம்பல் என்பது இனிமையானது என்பார் ஓஷோ . உலகில் எல்லோரும் சோம்பேறியாக இருந்துவிட்டால் உலகப்போருக்கெல்லாம் வாய்ப்பே இல்லை என்கிறார் அவர் . நானும் சோம்பேறிதான் . தர்ப்பூசணி வாங்க போனேன் . விலை தெரியவில்லை . சும்மா நோட்டமிட்டுக்கொண்டிருந்தேன் . ஓர் அம்மா வந்தார் . கஷ்டப்பட்டு பேரம் பேசி ஒரு விலையை நிர்ணயித்து பழம் வாங்கினார் . அதே விலைக்கு எனக்கும் கொடுங்கள் என கேட்டு வாங்கினேன் . எனர்ஜி சேவ் ஆகி விட்டது
*****************************************************************************************
பைபிள்னா பைபிள்தான்,, மதச்சார்பற்ற கீழ்கண்ட வரிகளை படியுங்கள்... இதை , இரண்டு முதியோர்கள் என்ற கதையில் டால்ஸ்டாய் மேற்கோள் காட்டியுள்ளார்.. இது போன்ற கதைகளை அறிமுகம் செய்து வைத்த முக நூலுக்கு நன்றி
********************************************************************
யோவான் 4:21 முதல் 4:24 வரை
எங்கள் முன்னோர்கள் இந்த மலையில் வழிபட்டு வந்தனர்.. நீங்களோ ஜெருசலேமில் வழிபட சொல்கிறீர்களே என்றாள் அந்த பெண்.
இயேசு சொன்னார்.. பெண்ணே.. என்னை நம்பு ,,, மலையிலும் ஜெருசலேமிலும் மட்டும் அல்ல.. சகல இடங்களிலும் கடவுளை வழிபடலாம்.. அதற்கான காலம் வந்து கொண்டு இருக்கிறது..
நீங்கள் உங்களுக்கு புரியாததை வணங்கி கொண்டு இருக்கிறீர்கள்... நாங்கள் வணங்கப்படுபவரை புரிந்து கொண்டு இருக்கிறோம்..
பிதா உண்மையாகவும் , ஆன்மாவோடும் இருக்கிறார்...தன்னை வணங்குபவர்களும் இப்படி இருக்க வேண்டும் என எதிர்பார்க்கிறார்...
*************************************************************************************


No comments:

Post a Comment

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா