Monday, November 24, 2014

தமிழ் நாட்டில் தமிழ் படங்களுக்கு இடம் இல்லை- இயக்குனர் ராம் ஆவேச பேச்சு




அம்ஷன் குமார் எப்போதுமே ஆழமாக பேசக்கூடியவர். அடுத்து அவர் பேசினார்.

இங்கு பேசிய அனைவரும் லெனினை எடிட்டர் லெனின் என அழைத்தனர். அவர் சிறந்த இயக்குனர் . விருது பெற்றவர். தமிழ் குறும்படங்களின் தந்தை என்றுகூட சொல்லலாம். 2003ல் ஒரே நாளில் ( மே31 ) என் படமும் அவர் படமும் தணிக்கைக்கு சென்றது. இது ஒரு முக்கிய நிகழ்வாகும்.  மாற்றுப்படம் ஒன்று வந்தால் , இன்னொரு படம் வர வெகு நாட்கள் ஆகும்.  அன்றைய தினம் ஒரே நாளில் இருபடங்கள் தணிக்கைக்கு சென்றன. ஃபில்ம் சொசைட்டிகள் , திரை விழாக்களில் அந்த படங்கள் பெரும் வரவேற்பு பெற்றன. சுனாமி நிதி திரட்ட என் பட திரையிடல்களை பயன்படுத்தினேன். இப்படி நிதி திரட்டிய ஒரே தமிழ் படம் என் சினிமாதான்.  விருதுக்காக எங்கள் படங்களை அனுப்புவதில் சிக்கல் ஏற்பட்டது. குறைந்த பட்சம் 2 மணி நேரம் ஓடினால்தான் அதை ஃப்யூச்சர் ஃபில்ம் என அங்கீகரிப்போம் என்றார்கள். குறைந்தது 8 முதல் 25 பிரிண்டுகள் போடப்பட வேண்டும் என்றார்கள்.  இவற்றை எல்லாம் போராடி கடைசியில் வென்றோம்.
நமது ரசனை மேம்பட வேண்டும். படம் ஃபர்ஸ்ட் ஆஃப் சூப்பர் , செகண்ட் ஆஃப் சொதப்பல் என விமர்சிக்கிறார்கள். படத்தில் ஃபர்ஸ்ட் ஆஃப் , செகண்ட் ஆஃப் என்றெல்லாம் எதுவும் இல்லை.  நம் ஊரில்தான் இப்படியெல்லாம் பேசுகிறான். ரசிகன் மேல் நம்பிக்கை வைத்துதான் இயக்குனர் படம் எடுக்கிறார். சார்லி சாப்ளின் ஒரே ஷாட்டில் அந்த காட்சியை வைக்கிறார் என்றால் மக்களுக்கு புரியும் என நம்புகிறார்.

சத்யஜித்ரே படம் ஒன்று. ஒருவனுக்கு பொருளாதார ரீதியாக கஷ்டம். மனைவி வேலை செய்யும் நிறுவனத்தின் தலைவரை பார்க்க செல்கிறான். அந்த தலைவர் இவனை அமரச்சொல்லி சிகரட் கொடுக்கிறார். இவன் அதை உடனே புகைக்காமல் சற்று உற்று பார்த்த பின் புகைக்கிறான். இங்கு க்ளோஸ் அப் ஷாட் எதுவும் வராது. அது அவன் அதுவரை புகைக்காத விலை உயர்ந்த சிகரட் என்பதால் சற்று தயங்குகிறான் என்பதை ரசிகர்கள் புரிந்து கொள்வார்கள் என இயக்குனர் நம்புகிறார்.

இப்படி நல்ல ரசனையை வளர்க்க தமிழ் ஸ்டுடியோ அமைப்பு உழைக்கிறது. வாழ்த்துகள். என்றார்

அடுத்து பேசிய ராம்  , தனக்கே உரிய அழகு தமிழில் பேசினார்.

இன்று சென்னை சிட்டி முதல் , குக்கிராமங்கள் வரை , திருப்பூர் , கோவை , மதுரை என பல்வேறு சூழல்களில் மக்கள் உலக சினிமா பார்த்து வருகிறார்கள். இதற்கு இரண்டு  காரணங்கள். ஒன்று பர்மா பஜார். இன்னொன்று தமிழ் ஸ்டுடியோ . நல்ல படங்களை பார்க்கும் ஆவலை ஏற்படுத்தியதில் தமிழ் ஸ்டுடியோவுக்கு முக்கிய பங்கு உண்டு.


அன்றைய ஃபிரான்ஸ் , இத்தாலி போன்ற நாடுகளில் ஹாலிவுட் படங்கள் வர முடியாது. ஒரு வித தேக்க நிலை நிலவியது. அதன் பின் உலகப்போர் ., அது சார்ந்த பிரச்சனைகள். வறுமை. வேலைகிடைக்காத பிரச்சனை. அன்றாடம் சாவு என ஃபிரான்ஸ் தடுமாறியது. ஹாலிவுட் படங்கள் நுழைந்தன.  ஃபிரான்ஸ் சினிமா முடங்கி போனது. சார்த்தர் போன்றவர்கள் உருவானார்கள். இருத்தலியல் சார்ந்த படைப்புகள் தோன்றின. இப்படிப்பட்ட சமூக சூழலில்தான் நியூ வேவ் சினிமாக்கள் உருவாக ஆரம்பித்தன. மக்களோடு சேர்ந்து அவர்கள் கதைகளை சொல்லும் படங்கள் வெளி வர ஆரம்பித்தன.

இதே சூழலில்தான் இத்தாலியில் நியோரியாலிஸ்ட்டிக் வகை படங்கள் வர ஆரம்பித்தன. பை சைக்கிள் தீவ்ஸ் போன்ற படங்கள் வந்தன.

அதாவது ஓர் இயக்கம் நிக்ழ வேண்டும் என்றால் அதற்கான சமூக சூழல் தேவை. தமிழ் ஸ்டுடியோ அமைப்பு 2007ல் ஆரம்பிக்கப்பட்டது. அப்போதைய சூழல் எப்படி இருந்தது?
ஐ டி நிறுவனங்கள் வந்தன. ப்லர் வெளி நாடு சென்று அங்குள்ள படங்கள் பார்க்கும் வாய்ப்பு பெற்றனர். இண்டர்னெட் போன்ற டிஜிட்டல் புரட்சியால் , வெளினாட்டு படங்கள் பற்றிய பார்வை நமக்கு கிடைத்தது. டிவிடி நிறைய வர ஆரம்பித்தன. ஆனால் இந்த வசதி ரசனையை வளர்க்க பயன்படவில்லை. இந்த சூழலிதான் தமிழ் ஸ்டுடியோ அமைப்பு உருவானது. நல்ல பணிகளை செய்து வருகிறது.

ஆனால் அது பெரிய இயக்கமாக வளர வேண்டும் என்றால் சமூக பிரச்சனைகளை கையாள வேண்டும். தனது அரசியலை தெளிவாக முன் வைக்க வேண்டும். கூடங்குளம் , ஈழம் போன்ற பிரச்சனைகளில் மவுனம் காப்பது கூடாது. தான் யார் என்பதை சொல்ல வேண்டும்.

சிங்கள இயக்குனரின் படம் வந்தபோது ஒரு கும்பல் ரகளை செய்வதாக சொன்னார்கள். தமிழ் அமைப்புகள் எந்த இடைஞ்சலும் செய்யவில்லை. கருத்து மட்டும்தான் சொன்னார்கள். ஆனாலும் இப்படி பழியை போட்டார்கள்.

அருண் தன் அரசியலை முன் வைக்காவிட்டாலும் , அவர் செயல்மூலம் அவரது இடதுசாரி பார்வை தெரிகிறது. லீனா மணிமேகலை , லெனின் , ஆனந்த் பட்வர்த்தன் போன்றோருக்கு விருது கொடுத்ததன் மூலம் அவர் மனதை புரிந்து கொள்ள முடிகிறது. ஆனாலும் அவர் தன் அரசியலை தெளிவாக முன் வைக்க வேண்டும். கலையை வெறுமனே ரசிக்கும் வலது சாரியாக இருக்கக்கூடாது.

மற்ற நாடுகளில் நிகழ்ந்த மாறுதலைப்போல தமிழில் ஏற்பட்ட மாற்றத்தை கொண்டு வந்த இயக்கம் திராவிட இயக்கம்தான். 1952ல் வந்த பராசக்தி ஒருவகையில் நியூவேவ் சினிமா எனலாம். அதுவரை இருந்த புராண வகை படங்களின் அடித்தளத்தை அசைத்து பார்த்தது அந்த படம். இன்று வரை தமிழ் சினிமா தனித்துவத்துடன் செயல்பட அந்த இயக்கம்தான் காரணம்.

மல்ட்டிப்லெக்ஸ் திரை அரங்குகள் வந்தபோது , இதேபோல இன்னொரு மாற்றம் வரும் என எதிர்பார்த்தோம். குறும்படங்கள் , லோ பட்ஜெட் படங்கள் திரையிட முடியும் என நினைத்தோம். ஆனால் நடந்தது வேறு.

அந்த அரங்குகளில் முதலில் , ஆங்கில படங்கள்..பிறகு ஹிந்தி. மூன்றாவது தெலுங்கு. அதன் பின்புதான் தமிழ் படங்களுக்கு , அதுவும் பெரிய நடிகர்கள் நடித்த படங்களுக்கு இடம் கிடைக்கிறது. அதன் பின்புதான் மற்ற படங்கள். அதுவும் தலைப்பு அவர்களுக்கு பிடித்தால் மட்டுமே இடம் கிடைக்கும்.  ,மதுபானக்கடை படத்துக்கு இடம் தர மறுத்தது ஒரு தியேட்டர்.

அருண் நல்ல பணிகளை செய்கிறார். ஆனால் பேசா மொழி என்ற பெயர் எனக்கு பிடிக்கவில்லை. மரண தண்டனையை எதிர்த்து பேசாத கலை எனக்கு தேவை இல்லை. படங்கள் என்றால் பேச வேண்டும்.  ஈரான் படத்தின் மவுனம் வேறு. என் மவுனம் வேறு. அவர்களைப்போலவே நானும் எடுக்க வேண்டும் என்பது இல்லை. அதேபோல தமிழ் ஸ்டுடியோ என்ற பெயரும் பிடிக்கவில்லை.


இவ்வாறு ராம் பேசினார்.


( அடுத்து மிஷ்கின் பேச்சு தனி பதிவாக ) 

No comments:

Post a Comment

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா