Tuesday, November 18, 2014

இளையராஜாவின் அற்புத கவிதைகள் சில- கலவை பதிவு

பயங்கரமான குளிர் ..குளிர் தாங்க முடியாமல் ஒரு குருவி பறக்க முடியாமல் தரையில் கிடந்தது,,..குளிரில் நடுங்கி கொண்டு இருந்தது,,, இந்த சோதனை போதாது என்று, அந்த பக்கமாக வந்த ஒரு மாடு அதன் மேல் சாணி போட்டு சென்று விட்டது... குருவிக்கு மூச்சு முட்டியது.. ஆனாலும் கொஞ்ச நேரத்தில் சாணியின் இளம் சூடு குளிருக்கு இதமாக இருக்கவே , சந்தோஷமாக பாட்டு பாட ஆரம்பித்தது,,,ஆனாலும் மூச்சு விட முடியாமல் கஷ்டப்பட்டது... யாராவது காப்பாற்ற மாட்டார்களா என தவித்தது.. பாட்டு சத்தம் கேட்டு அந்த பக்கம் வந்த பூனை , குருவியை சாணியில் இருந்து விடுவித்தது.. குருவி நிம்மதி பெருமூச்சு விட்டு முடிப்பதற்குள் குருவியை சாப்பிட்டு விட்டு நடையை கட்டியது பூனை.


நீதி

1. உன் மேல் சாணி அடிப்பதன் மூலம் சிலர் உனக்கு மறைமுகமாக நன்மை செய்து விடுகிறார்கள்.

2. உனஓர் இயக்குனர் ஒரு சிறந்த திரைக்கதையை வைத்து ஒரு சிறந்த திரைப்படத்தை உருவாக்கமுடியும் . அல்லது சிறந்த திரைக்கதையை வைத்து மோசமான படத்தையும் உருவாக்க கூடும் . ஆனால் ஒரு மோசமான திரைக்கதையை வைத்து , ஒரு சிறந்த படத்தை உருவாக்க வாய்ப்பே இல்லை . முடியவே முடியாது - syd fieldக்கு உதவுபவர்கள் எல்லோரும் , நல்லெண்ணத்தில் உதவுகிறார்கள் என சொல்லி விட முடியாது.

3. அதிர்ஷ்டம் ஏற்பட்டால் அதை வாயை மூடிக்கொண்டுஅனுபவி..தேவை இல்லாமல் வாயை திறக்காதே

-------------------------------------------------------------------


பசித்தவன் முன்பு
வெந்த முட்டை உடையும் சத்தம்
மிகக்கொடிது - ழாக் ப்ரெவர்

-----------------------------------------------------------------


ஒரு புத்தக கடையில் அபூர்வமான புத்தகம் ஒன்றை எடுத்து பில் போட கொடுத்தேன் . ஐம்பது ரூபாய் இருக்கும் என நினைத்தால் , பில் தொகை இரண்டு ரூபாய் மட்டுமே . ஆச்சர்யமாக வருடத்தை பார்த்தேன் . 1970ல் பிரசுரமான அந்த புத்தகத்தின் கடைசி பிரதி எனக்காக காத்திருந்து இருந்திருக்கிறது

-------------------------------------------------------------------


”எம் ஜி ஆர் ஆட்சியில் இருந்த சமயம் அறக்கட்டளை மூலம் பல நல்ல காரியங்கள் செய்வதற்கு நிதியுதவிகள் பெறவேண்டிய நல்ல எண்ணத்தில், கொல்லூர் மூகாம்பிகை பக்தராய் எம் ஜி ஆர் அவர்கள் இருந்ததைப் பெருந்தன்மையுடன் பெரிதுபடுத்தாமல், வீரியமல்ல காரியமே முக்கியம் என எம்ஜிஆருடன் அன்னியோன்னியமாக இருந்தவர் திரு. வீரமணி அய்யா அவர்கள். ” - ஓர் அறிவு ஜீவி

ஆமாம்... புரட்சித்தலைவி ஆட்சியின்போது அவர் மீதான ஊழல் புகார்களை பெருந்தன்மையுடன் பெரிதுபடுத்தாமல், வீரியமல்ல காரியமே முக்கியம் என புரட்சிதலைவி ஆட்சியுடன் அன்னியோன்னியமாக இருந்தவர் திரு. வீரமணி அய்யா அவர்கள்


அதன் பின் கலைஞர் ஆட்சிக்கு வந்ததும் அவர் தவறுகளை பெருந்தன்மையுடன் பெரிதுபடுத்தாமல், வீரியமல்ல காரியமே முக்கியம் என கலைஞருடன் அன்னியோன்னியமாக இருந்தவர் திரு. வீரமணி அய்யா அவர்கள்

மீண்டும் புரட்சித்தலைவி ஆட்சி அமைந்ததும் அவர் மீதான ஊழல் புகார்களை பெருந்தன்மையுடன் பெரிதுபடுத்தாமல், வீரியமல்ல காரியமே முக்கியம் என புரட்சிதலைவி ஆட்சியுடன் அன்னியோன்னியமாக இருந்தவர் திரு. வீரமணி அய்யா அவர்கள்
-------------------------------------------------------------------------------------------

இதெல்லாம் தமிழ் வார்த்தைகள் கிடையாது என அவ்வப்போது சிலர் ஷாக் கொடுப்பார்கள் . எந்த மொழியிலும் புதிது புதிதாக வார்த்தைகள் சேர்வது இயல்புதானே . 1910க்கு பிறகு புதிதாக சேர்ந்தவை தமிழ் அல்ல என்பது போல காலக்கெடு ஏதும் இல்லை


------------------------------------------------------

அலுவலகத்திலும் வேலை இல்லாமல் வேறு வேலைகளும் இல்லாமல் எதையும் அவதானிக்கும் நேரமும் இல்லாதவர்கள்தான் அவதானிப்பு என கற்பனை ஸ்டேட்டஸ் போடுகிறார்கள் ‪#‎அவதானிப்பு‬


------------------------------------------------------------

அண்ணா என்ற மூன்றெழுத்தை , 
காதலுக்கு முற்றுப்புள்ளியாக , 
சில நேரம் காதலுக்கு ஆரம்ப புள்ளியாக ,
பயன்படுத்தும் வித்தையை எங்கிருந்து கற்றாய் ! ! ‪#‎பிங்கூ‬


---------------------

விபத்தை ஆர்வமாக பார்ப்பதன் உளவியல் என்ன ? நல்லவேளை , நமக்கு இது நிகழவில்லை என்ற சாடிஸ்ட்டிக் மகிழ்ச்சியா ?
-----------------------------------------------------
ஊரில் திருட்டு பயம் அதிகம்... பைக்கை லாக் செய்து விட்டீர்களா என ஒன்றுக்கு இரண்டு முறை செக் செய்து கொள்ளுங்கள் என ஒருவரிடம் சொன்னேன்.. லாக் செய்யாததுதான் திருடர்களை உருவாக்குகிறது என நான் சொல்வதாக அரை மணி நேரம் குமுறி விட்டு போனார்... நம் ஊர் அறிவு ஜீவிகளுக்கு போட்டியாக இன்னொருவர்

------------------------------------------


மிடில் சாங்க் என்று எந்த பாடல்களை சொல்கிறீர்கள் என சொல்லுங்கள். நீங்கள் யார் என சொல்கிறேன்


பழைய பாடல் பிடிக்கும் என்றால் வயதானவன் என நினைப்பார்கள் என அஞ்சுபவர்களால் கண்டுபிடிக்கப்பட்ட வார்த்தைதான் மிடில் சாங்க் ‪#‎அவதானிப்பு‬


என் தாத்தாவை மகிழ்விக்க பழைய பாடல்கள் வாங்கி கொடுத்தேன் . பு.யூ. சின்னப்பா தியாகராஜபாகவதர் போன்ற பாடல்கள் அவருக்கு ருசிக்கவில்லை . பழைய பாடல் வேண்டாம் . எம்ஜிஆர் சிவாஜி போன்ற இடைக்கால பாட்டு வாங்கிட்டு வா என்றார்#மிடில்சாங்க்



மிடில் சாங்க் ரசிகர்களை அந்த காலத்தில் இருந்து பார்த்து வருகிறேன் . ரகுமான் பாடல்களை மிடில் சாங்க்கில் சேர்த்து விட்டார்கள் என்பது அதிர்ச்சியளித்தது

-------------------------------------------------

பிளாட்பாரங்களில் வைத்து புத்த கடையை சுற்றி சில நேரங்களில் பயங்கர கூட்டமாக இருக்கும். நமக்கு அந்த கடைக்கு போக மனம் வராது. இத்தனை பேர் இருக்கிறார்கள். நல்ல புத்தகங்களை காலையில் இருந்து செலக்ட் செய்து எடுத்து போய் இருப்பார்கள். பல்ப் புத்தகங்கள்தான் இருக்கும் என நினைப்போம். சரி, எதற்கும் போய் பார்க்கலாமே என போனால்....ம்ம்ம்ம்ம்..... கிடைக்கவே கிடைக்காத அச்சில் இல்லாத அரிய பொக்கிஷம் ஒன்று நம்மை பார்த்து கண்ணடிக்கும்.. நம்மால் நம் கண்களையே நம்ப முடியாது..எப்படி இதை விட்டு வைத்தார்கள் என புரியவே புரியாது... புத்தகம்தான் வாசகனை தேர்ந்தெடுக்கிறதா
---------------------------------------------------------------
பழைய புத்தக கடையில் ஓர் அரிய புத்தகம் வாங்கினேன் . அதில் ஒரு பெயரும் 1980 என அதை வாங்கிய ஆண்டும் இருந்தது . அதை படித்தேன் .ஆங்காங்கு சில பக்கங்கள் ஒட்டியது பிரிக்கப்படாமல் இருந்தன் . முப்பது ஆண்டுகள் அந்த புத்தகம் திறக்கவே படாமல் இருந்திருக்கிறது என்பது ஆச்சர்யமாக இருந்தது

Mrinzo Nirmal சில பக்கங்கள் வாசிப்பதற்க்காக காத்திகிடக்கின்றன், மொட்டுக்கள் சூரியனினுக்காக காத்திருப்பதுஇ போல. வார்த்தைகள் வாசிப்பவனை தேர்ந்தெடுக்கத்தான் செய்கிறது. வாசகன் வார்த்தைகளை தேர்ந்தடுக்கிறானா, இல்லை வார்த்தைகளா? இப்படி வந்துகினே இருக்கு இந்த சூச்வேஷன்.

--------------------------------------------------------------------------------

அலுவலகங்கில் சில பிரச்சினைகளை தீர்க்க பல மீட்டிங்குகள் தேவைப்படும் . அந்த அளவுக்கு அவை சிக்கலான பிரச்சினைகள் . ஆனால் காலப்போக்கில் அந்த பிரச்சனைகளை விட மீட்டிங்குகள் அதிக சிக்கலாகி விடுவதும் உண்டு
-------------------------------------------
ஓர் இயக்குனர் ஒரு சிறந்த திரைக்கதையை வைத்து ஒரு சிறந்த திரைப்படத்தை உருவாக்கமுடியும் . அல்லது சிறந்த திரைக்கதையை வைத்து மோசமான படத்தையும் உருவாக்க கூடும் . ஆனால் ஒரு மோசமான திரைக்கதையை வைத்து , ஒரு சிறந்த படத்தை உருவாக்க வாய்ப்பே இல்லை . முடியவே முடியாது - syd field

-----------------------------------------------
எல்லோரும் எல்லாமும் எப்படி எப்படி இருக்கிறதோ , அப்படியே காட்சி தருவதுதான் சினிமாக் கலையின் அடிப்படையும் சாத்தியப்பாடும் ஆகும் - பேல பெலாஸ்
-------------------------------------------------
ஒரு நிமிடம் எவ்வளவு நீளமானது என்பது டாய்லெட் கதவின் எந்தப் பக்கத்தில் நீங்கள் இருக்கிறீர்கள் என்பதை பொருத்தது, உள்ளேயா வெளியேயா ‪#‎தியரி‬ ஆஃப் ரிலேட்டிவிட்டி
-----------------------------------------------------------
வெயில் கொளுத்தும் காலங்களில் மா நகராட்சி நூலகங்களில் கூட்டமே இருப்பதில்லை.
மழை அடித்து கொட்டும் காலங்களிலும் கூட்டமே இருப்பதில்லை.
ஆனால் மழை கொட்டும்போது , அருகில் டீக்கடைகள் இல்லாத பட்சத்தில், நூலகங்களில் கூட்டம் குவிகிறது ‪#‎அவதானிப்பு‬
-----------------------------------------------------
ஒரு படத்தை ஓட விடாமல் தடுக்க அந்த பட கதாநாயகனின் எதிரிகள் முயல்வது இயல்பு . ஆனால் எம் ஜி ஆர் தான் கதாநாயகனாக நடித்த ஒரு படத்தை ஓட விடாமல் தன் ரசிகர் மன்றம் மூலம் தடுக்க முயன்ற வினோதம் நடந்தது உங்களுக்கு தெரியுமா ? 
--------------------------------------------
கங்கை அமரன் முதன்முதலாக வாலி வீட்டுக்கு சென்றார்
க .         : சார் , என் இயற்பெயர் அமர்சிங்
வாலி :  முதலில் அமர் (sit ) சிங் . பேசலாம்
------------------------------------------------
ஒவ்வொரு கலையும் விசேஷ குணத்தை பெற்றுள்ளது. சங்கீதம் அரூபத்தை கிளர்ந்தெழ வைக்கிறது. இலக்கியம் புரிய வைக்கிறது. நாடகம் உய்த்துணர வைக்கிறது. சினிமா சலன உலகின் மெய்மையை காட்டுகிறது ‪#‎அம்ஷன்‬ குமார்
----------------------------
திரைப்படத்தில் மரணத்தை காட்டுவது கடினம் . காரணம் அங்கே சாவின் தடயங்கள் இருக்கின்றனவா என்பதை ரசிகர்கள் கவனிப்பார்கள் - சத்யஜித் ராய்... ஒரு மரணத்தை காட்ட எப்படியெல்லாம் யோசித்து காட்சி வைக்க வேண்டி இருந்தது என்பதை விளக்க இபப்டி சொல்கிறார்.
----------------------------------------
சினிமா மொழி , மொழிபெயர்க்க முடியாத ஒன்று. அது மனித குலத்துக்கே பொதுவானது.அதுதான் சினிமாவின் சக்தியும் கூட. இந்த விழுப்புணர்வு ஏற்படாதவரை சினிமாவை புலன் அளவில் மட்டுமே அணுகுவோம் ‪#‎தியடோர்பாஸ்கரன்‬
-----------------------------------------
நாங்கள் எடுப்பது மாற்று சினிமா இல்லை. நாங்கள்தான் உண்மையான சினிமா எடுக்கிறோம்.. கமர்ஷியல் குப்பைகள் எடுப்பவர்கள் மாற்று சினிமா எடுக்கிறார்கள்- லெனின்
----------------------------------------------

ஒருவர் சுதந்திர தின கொண்டாட்டம் ,கேவலமானது என்றார். இன்னொருவர் புனிதமானது என்றார். கடைசியில் இருவரும் ஒன்றாக அமர்ந்து டீவியில் சுறா படம் பார்த்தனர் .
------------------------------------------------------------------
இஞ்சினியரிங் டிப்ஸ் .
எந்த ஸ்டேஜிலும் தரம் சார்ந்த பிரச்னை வராமல் , தவறுகள் ஏதேனும் கண்டிபிடிக்கப்படாமல் பாஸ் ஆகிக் கொண்டே சென்றால் கண்ணுக்கு தெரியாத தவறு கடைசி நேரத்தில் பிடிபட்டு ஆப்படிக்கப் போகிறது என்று அர்த்தம்
இஞ்சினிரியங் டிப்ஸ்
நீங்கள் வடிவமைக்கும் இயந்திரத்துக்கு உத்தரவாதம் 12 மாதங்கள் என்றால் , அது சரியாக 13 ஆம் மாதத்தில் தன்னைத்தானே அழித்துக்கொள்ளுமாறு வடிவமைத்தால் , பொலிவான பொறியியல் வாழ்க்கை அமையும்
எஞ்சினிரியங் டிப்ஸ் .ஒன்று , அந்த இயந்திரத்தை மேனேஜ் செய்ய நம்மால் முடியாது என்பதை புரிந்து கொள்ள கற்றுகொள்ளுங்கள் . அல்லது அந்த இயந்தரம் குறித்து நமக்கு ஒன்றும் புரியவில்லை என்பது யாருக்கும் தெரியாமல் மேனேஜ் செய்ய கற்று கொள்ளுங்கள் . உங்கள் இஞ்சினிரிங் பயணம் இனிமையாக இருக்கும்
------------------------------------------------------------------
மனிதப் பிறவியில் 
உன்னை முதன்முதல்
கண்டு கொண்டவன் யார்?
இறைவன் என உனக்கு
முதன்முதல் பெயரிட்டவன் யார் 
‪#‎இளையராஜா‬
***************
நம் தவறுகள் நம் குருவாக முடியும்
ஆனால் நம் குரு ஒருபோதும் தவறாக முடியாது
*******************
கோயில் கொண்ட குரு நாதா
வெளியே இருக்கும் எனக்கு நீ காவல்
உள்ளே இருக்கும் உனக்கு
வெளியே இருக்கும் நான் காவல்
**********************
வணக்கத்துடன் குருவை தேடினேன் . 
வணக்கமே குருவாக வந்தது .
**************************
கொடுப்பதல்ல தனித்ததல்ல
எடுக்க எடுக்க தீர்வதல்ல
கண்டு கொண்டேன்
தடுப்பதல்ல 
தனித்ததல்ல
அடுத்து அடுத்து உள்ளத்து உறைவது
உணர்ந்து கொண்டேன்
***************
நாட்டத்தால்
நாட்டம் அறு ‪#‎இளையராஜா‬
***************
நீ வேண்டுவது கெட்டவையாக இருந்தாலும்
அதை உனக்கு தருபவனே இறைவன் !
இல்லையெனில் அதனால் வரும்
துன்பத்தையும் துன்பம் தரும் 
நல்ல பாடத்தையும் 
நீ உணராமலேயே போய் விடக்கூடும்!
‪#‎இளையராஜா‬
************************
எப்படியோ பிறந்தாய்..
எப்படியும் இறப்பாய், 
வீணாகாதே‪#‎இளையராஜா‬ பாறைகள்
*********************
• எண்ணமே தீயதெனில்,
எண்ண என்ன உள்ளது?
• பிறப்பே கொடியதெனில்
தெய்வமாய்ப் பிறப்பதிலும்
என்ன பயனுள்ளது?
• சித்திரம் எழுதிய சுவரைவிட
சித்திரம் எழுதா சுவரை
பத்திரமாய் பார்த்து வா
‪#‎இளையராஜா‬ பாறைகள்
*******************
விரிவதெல்லாம் 
வானும் இல்லை. 
கற்பிப்பதெல்லாம் 
கல்வியும் இல்லை ‪#‎இளையராஜா‬
*******************
பாட்டெழுதி 
பொருள் தேடும் கவிஞனே !
நீ எழுதும் பாட்டிலும்
பொருளைத்தான் 
தேடுகிறார்கள் ‪#‎இளையராஜா‬
******************
சொல்லிலெல்லாம் சொல்லி வைத்தும்
சொல்லிடாத பொருளின்மீது
இச்சை கொண்டேன்
சொல்லும் பொருளும் சுமைகள் என்று
சொல்லிவைத்தது உணர்ந்துஇன்று
இச்சை விட்டேன்
‪#‎இளையராஜா‬
****************************
நடந்து போகையில் , 
நிற்க நினைத்தால் உடல் நிற்கிறது,
 மனம் நிற்குமோ? 
மனதை நிறுத்த மனதை விடு#இளையராஜா
******************
புத்தகம் திறந்து கிடக்கிறது 
எழுதப்படா வெற்றுத்தாள்கள் #இளையராஜா
***********************
அலையோ? குமிழோ?
 நுரையோ? துளியோ? 
கடல் கடலே‪#‎இளையராஜா‬
________________________________________________________________________
சிலரால் என்னதான் முயன்றும் புத்திசாலித்தனமாக பேச முடியாது..அது போல சிலரால் விளையாட்டுக்குக்கூட பயனற்ற பேச்சு பேச முடியாது..தியடோர் பாஸ்கரன் அவர்களின் புத்தகம் ஒன்றை படித்து கொண்டு இருக்கிறேன். பயனற்ற வரி ஒன்று கூட இல்லை...எத்தனை தகவல்கள், எத்தனை விளக்கங்கள்... அவர் பாதம் தொட்டு வணங்குகிறேன்
_________________________________________
1931 வாக்கில் சினிமா மொழி வளரும் சாதகான நிலை தோன்றியது. ஆனால் திரைமொழி முதிர்ச்சி அடையும் முன்பே ஒலி வந்து விட்டதால், ஒலிக்கு தேவைக்கு அதிகமாக முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்தனர். புதிதாக கிடைத்த பொம்மையை வைத்து ஓயாமல் விளையாடும் குழந்தை போல இந்த தொழில் நுட்ப வளர்ச்சியை பயன்படுத்த ஆரம்பித்ததால் , தமிழ் சினிமாவில் திரை மொழி வளராமலேயே போய் விட்டது - தியடோர் பாஸ்கரன்
_____________________________________
முதல் உலகப்போருக்கு முன் , அமெரிக்க படங்களுடன், பிரஞ்சு , டேனிஷ் , ஜெர்மன் படங்களும் சென்னையில் திரையிடப்பட்டன, இந்த நிலை நீடித்து இருந்தால் , நம் சினிமாவும் நம் ரசனையும் வேகமாக வளர்ந்திருக்கும். ஆனால் போருக்கு பின் , நம்மை பொருத்தவரை சினிமா என்றால் அமெரிக்க சினிமா என்றாகி விட்டது. - தியடோர் பாஸ்கரன்
____________________________________________
அந்த காலத்தில் , அபூர்வ சந்திப்பு என்ற தலைப்பில் , வெவ்வேறு துறைகளை சேர்ந்த இரு பிரபலங்களை சந்தித்து உரையாடவைத்து , குமுதத்தில் வெளியிட்டு வந்தார்கள் . அந்தவகையில் அப்போது நடிகராக இருந்த ஜெயலலிதா மற்றும் தமிழறிஞர் கிவாஜாவை சந்திக்க வைத்தார்கள் . உன் படம் எதுவும் நான் பார்த்ததில்லைமா என்றாராம் கிவாஜா . ஜெ அலட்டிக்கொள்ளாமல் சொன்னாராம் , நானும் உங்க புக்ஸ் எதுவும் படிச்சதில்லை .
அந்த பொண்ணு ஒரு தமிழறிஞரிடம் இப்படி பேசிச்சிருச்சே என கண்ணதாசன் இன்னொரு உரையாடலில் அங்கலாய்த்ததை படித்து சிரித்து கொண்டேன் . அம்மா அன்றே அப்படி .
__________________________________
காட்சிப் படிமங்கள் மூலம் சொல்ல வேண்டியதை வார்த்தைகள் மூலம் சொல்ல முயன்றால் அங்கே சினிமா சீரழ்கிறது- ஹிட்ச்காக் ( தியோடர் பாஸ்கரன் நூல் ஒன்றில் இருந்து )
__________________________________
உள்ளே நீலவண்ண பிந்து பிரபஞ்ச நுண் தளத்தில் ஆழ்ந்த காளா பூவின் ஆரும்புகளில் உதிர்வுகொள்ளும். நகிலம் ஒளிப்பளிங்கில் ஆறு அடுக்கிய வெற்றிடத்தில் வெற்றிடமே பூத்த சூன்ய இதழ்தான் நீலம்
மேற்கண்ட வரிகளை தமிழில் மொழிபெயர்ப்பவர்களுக்கு இந்த வரிகள் இடம்பெற்ற புத்தகம் , பரிசாக தள்ளிவிடப்படும்
______________________________
ராங் நம்பரை தவறுவதாக அழைக்கும் போது பிசி டோன் கேட்டிருக்கவே மாட்டோம் ‪#‎விந்தைஉண்மைகள்‬
________________________________
முடிந்தவன் சாதிக்கிறான். முடியாதவன் போதிக்கிறான்...அதுவும் முடியாதவன் விமர்சகன் ஆகிறான்
_________________________________________
காலத்தை மனதால் புரிந்து கொள்ளமுடியவில்லை . நேற்று நண்பர் ஒருவரிடம் இரண்டு மணி நேரம் பேசினேன் . ஒருத்தி படம் பார்க்க இரண்டு மணி நேரம் பயணப்பட்டேன் . இரண்டு மணி நேரம் படம் பார்த்தேன் . அனைத்தையும் எஞ்சாயினேன் .ஆனால் இந்த ஒவ்வொரு இரண்டுமணி நேரமும் ஒவ்வொரு விதமாக மனதில் பதிவாகியிருக்கிறது . எல்லாமே ஒரே அளவிலானா இரண்டு மணி நேரம் என்பதை மனம் புரிந்து கொள்ள மறுக்கிறது
_____________________________________________
நேற்று பைக்கில் போய் கொண்டிருந்தபோது போன் அடிக்கவே எடுத்து பேசினேன் . ஓவர்டேக் செய்து , வேண்டுமென்றே அருகில் வந்த அய்ம்பது வயது நபர் என்னவோ கத்தினார் . அட்வைஸா என எரிச்சலாக ஸ்பீட் எடுத்தேன் . விடாப்பிடியாக பக்கத்திலேயே வந்து சார் உங்க பாக்கெட்டில் இருந்து கேஷ் விழுந்த மாதிரி இருந்துச்சு , கவனிங்க என சொல்லி விட்டு போய் விட்டார் . எதிர்பார்ப்பில்லாமல் சக மனிதர் மேல் காட்டும் அக்கறைதான் மனிதனுக்கே உரிய தனி அடையாளம் போல
_______________________________________________
மின்னாமல் முழங்காமல் வருகின்ற மழை போல , சொல்லாமல் கொள்ளாமல் வந்தது ஏன் சிலையே . . கண்மூடும் வேளையிலும் என தொடங்கும் பாடலில் மேற்கண்ட வரிகளில் ல ள ழ என துல்லியமாக பாடி இருப்பார் சுசீலா . இப்போதைய பாடகர்களுக்கு எல்லாம் ல மட்டுமே
_________________________________________
எந்த கேள்விக்கும் பதில் சொல்லத்தயார்- ராகுல் ஆவேசம்..
இதோ கேள்விகள்...
தட்டானுக்கு சட்டை போட்டால் குட்டை பையன் கட்டையால் அடிப்பான்.. அவன் யார்?
பன்றிக்கு நன்றி சொல்லி குன்றின் மேல் ஏறி நின்றால் வென்றிடலாம் குலசேகரனை என்றால் என்ன ??
_______________________________________
சில மாதங்கள் முன்பு வழக்கம்போல வெட்டியாக சாலையில் நடந்து கொண்டு இருந்தேன். யாரோ ஒரு பெண் , மஞ்சள் ஆடை அணிந்து குங்குமம் எல்லாம் பெரிதாக வைத்து , கையில் ஒரு தட்டுடன் என்னை அணுகினார் “ குழந்தைக்கு அம்மை போட்டு இருக்கு... மடிப்பிச்சை வாங்கி காணிக்கை கொடுக்கணும், ஏதாச்சும் கொடுங்க” என்றார். சும்மா பிச்சை கேட்டால் கொடுப்ப்போமே..ஏன் சாமி பெயரைசொல்லி கேட்கிறார்கள் என்ற எரிச்சலில் காசு எல்லாம் இல்லை என எரிச்சலுடன் சொன்னேன். அவர் முகத்தில் அதிர்ச்சி. அப்படி சொல்லக்கூடாது. சாமி காரியம்என தயங்கி தயங்கி கேட்டார்..அதுதான் இல்லைனு சொல்றேன்ல என கோபமாக சொல்லி விட்டு போய் விட்டேன்.
கொஞ்ச நாள் கழித்துதான் அவர் பக்கத்தில் தெருவில் குடி இருப்பவர் என்றும் , நல்ல நிலையில் இருப்பவர் என்றும், உண்மையிலேயே குழந்தைக்காக , ஒரு ஃபார்மாலிட்டிக்கிற்காக மடிப்பிச்சை வாங்கினார் என்றும் தெரிய வந்தது. அவருக்கு என்னை ஏற்கனவே தெரிந்து இருக்க கூடும், அதனால் என்னிடம் கேட்டு இருக்கிறார். அவரைப்போய் அவமானப்படுத்தி விட்டோமே என இன்றும் வருத்தமாகவே இருக்கிறது.
அதன் பின் வேறு ஏரியாவுக்கு மாறிவிட்டேன். இன்று அதே போல ஒரு பெண் கேட்டார். எதையும் யோசிக்காமல் சட் என ஒரு நோட்டை பாக்கெட்டில் இருந்து எடுத்து கொடுத்தேன். அவர் யார் என்பது தெரியவில்லை.
வரும் காலத்தில் அவர் ஒரு ஃபிராடு, ஏமாற்றி காசு வாங்கி இருக்கிறார் என தெரியவந்தால் , எனக்கு நிம்மதியாக இருக்கும். முன்பு செய்த தவறுக்கு ஜஸ்டிஸ் வழங்கப்பட்டு விட்டதாக நினைத்து ஆறுதல் அடைந்து கொள்வேன்
____________________________________
இரண்டு பிச்சைக்காரர்கள் , ஒரு குரங்கு , ஒரு மாங்காய்தலை விநோத உயிரி , இதை வைத்து செம சிறுகதை படைத்திருக்கிறார் ந.பிச்சைமூர்த்தி
____________________________
_
பேசும் மணி வார்த்தை தமிழ்ச் சுவையோ
புதிர் போடும் விழி ஜாடை விடுகதையோ
நெஞ்சில் ஆசை அலை பாயும் புதுப்புனலோ
ஒரு ஆடை சுமந்தாடும் மதுக்குடமோ
பஞ்சணையில் கை அணைக்க
பையப் பைய மெய் அணைக்க
தாவி தாவி வரும் கலைமானோ#வாலி
_________________________________________________
மது விடுதியின் மரக்கிளையிலிருந்து
சின்னஞ்சிறு இலை
மதுக்கோப்பையினுள் விழுகிறது .
மதுவோடு 
இலையை குடிப்பவன்
பிறகு
கிளையை
மரத்தை குடிக்கிறான்
இறுதியாக ஒரு வனத்தை
-சேலம் வே.பாபு
______________________________________________________________
இதழ் மலரும் சிரிப்பொலியை கேட்டேன் .அவன் சிரிப்பினிலே இறைவனை நான் பார்த்தேன். கண்ணாதசன் போட்டியாளராக இருந்த போது வாலி .
உரலு ஒண்ணு இங்கிருங்கு . உலக்கை ஒண்ணு அங்கிருங்கு . இது வைரமுத்துவுக்கு போட்டியாக . எதிரிதான் நம் ஆயுத்தை தீர்மானிக்கிறான் என்ற கூற்று நினைவுக்கு வருகிறது 
___________________________________
பொன்வண்டொன்று மலரென்று முகத்தோடு மோத
நான் வளைகொண்ட கையாலே மெதுவாக மூட
என் கருங்கூந்தல் கலைந்தோடி மேகங்களாக
நான் பயந்தோடி வந்தேன் உன்னிடம் உண்மை கூற
‪#‎கண்ணதாசன்‬ பாறைகள்
நாணம் ஒரு வகை கலையின் சுகம் 
மௌனம் ஒருவகை மொழியின் பதம் 
‪#‎கண்ணதாசன்‬ பாறைகள்
_____________________________________________
பழைய புத்தக கடையில் புத்தகம் வாங்கினேன் . அபிநயா ,பி எஸ் சி 1980 என எழுதப்பட்டிருந்தது . அந்த அபிநயா இப்போது என்னவாக இருக்கிறார் , இத்தகைய நல்ல புக்கை ஏன் விற்றார் , எப்படி வாங்கினார் , படித்துவிட்டாரா என பல கேள்விகள் எழவே புக்கை ஓரம் கட்டிவிட்டு டீவியை ஆன் செய்தேன்

1 comment:

  1. இளையராஜாவின் கவிதைப்பகிர்வு அதிகம் ரசித்தேன். பகிர்வுகள் ,அவதானிப்பு என அத்தனையும் அருமை.

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா