Saturday, November 29, 2014

உளுந்த வடையும் உலக ஞானமும்- மொக்கைகளும் சில முத்துகளும்

ஒரு வீட்டில்
சாவு மேளம்..
இன்னொரு வீட்டில்
திருமண இனிய மேள ஓசை..
கணவனுடன் வாழும் பெண்கள்
வாசமிகு மலர்களை சூடிக்கொள்கின்றனர்.
கணவனை பிரிந்தவர்களோ
கண்ணீரில் மூழ்குகின்றனர்.
உலகைப்படத்தைவன்
பண்பில்லாதவன் போல..
இவ்வுலகம் கொடியது.
இதன் இயல்பு உணர்ந்தவர்கள்
இனியவற்றையே காண முயலுக---
-புற நானூறு பக்குடுக்கை நன்கணியார்
அழகிய குவளைகளில்
பூக்களை அடுக்கி வைப்போம்...
அரிசிதான் இல்லையே
என்ற ஜப்பானிய ஹைக்கூவை நினைவு படுத்தியது அந்த புறனானூறு.. பசியை மலர்களின் நறுமணம் போக்க முடிந்தால் , துரோகங்களை ஒரு குழந்தையின் புன்னைகை மறக்க செய்ய முடிந்தால் , வாழ்க்கை எவ்வளவு இனிமையானது...
------------------------------------
கெடுத்தப்படு நன் கலம் எடுத்துக்கொண்டாங்கு - செம உவமை # நற்றிணை
-----------------
துகில் விரித்தன்ன வெயில் - இன்னொரு உவமை # நற்றிணை
-----------------------
ஜாதி கொடுமையில் இருந்து தப்பிக்க , புத்த மதத்தை தழுவுமாறு அம்பேத்கர் சொன்னார் என பரலாக நினைக்கிறார்கள் .ஆனால் புத்தமதத்தின் சிறப்புகளுக்காகத்தான் அந்த மதத்தில் சேர சொன்னார் என தோன்றியது , அவர் புத்தகம் படித்தபோது
---------------------------------------
கருணை என்பது மனிதர்பால் கொள்ளும் அன்பு. புத்தர் அதற்கும் அப்பால் சென்று மைத்ரியை* போதித்தார் .-அம்பேத்கர்
----------------------------------------------------------
********புணர்ச்சி*******
பாம்புகள் 
புணர்ச்சி
பழகுதல்
உண்டு
“புரை தீர்த்த
நன்மை
பயக்க வேண்டும்”
என்ற வேகம்
அவைகளுக்கு இல்லை
- நகுலன்
--------------------------------------------
படித்ததில் பிடித்தது...
இன்றென்ன
கிழித்து விட்டோம்..
நாளை மீது 
நம்பிக்கை வைக்க.
--------------------------------------------------

** வாய்மையே வெல்லும்*****
கடவுள் அருளால் ....
பணக்காரனாகி விட்ட..
நேர்மையான விறகு வெட்டியை பார்க்க...
கடவுள் பூமிக்கு வந்தார்..
அவன் வழக்கம்போல...
விறகு வெட்டினான்..
அருகில் மனைவி...
திடீரென ஆற்றில் விழுந்திவிட்டாள்...
அவன் அலற
ஆண்டவன் பிரசன்னமானான்..
இலியானாவை ஆற்றில் இருந்து
ஆற்றில் இருந்து எடுத்தான்.
“ இவளா உன் மனைவி ? “
கேட்டான் ஆண்டவன்..
“ ஆமாம் ஆமாம்” ஆமோதித்தான் வி.வெ.
ஆண்டவன் கடுப்பானான்.
“ அடே துரோகி ஏன் இந்த பொய்...
ஏன் இப்படி மாறினாய் “
வி வெ சொன்னான்..
” நான் மாறவில்லை...
நீயும் மாறியிருக்க மாட்டாய்.
இலியானா இல்லை என்றால்
காஜலை காட்டுவாய்.
அவளும் இல்லைஎன்றதும்
தமன்னாவை காட்டுவாய்..
அனைத்தையும் மறுத்து
கடைசியில் என் மனைவியை மட்டும் ஏற்பேன்,
என் நேர்மையை பாராட்டி
நால்வரையும் என்னுடன் அனுப்புவாய்..
தக்காளி. அவனவன் ஒருவளை வைத்தே
காலத்தை ஓட்ட முடியவில்லை
நால்வருடன் வாழ்வதை விட
நாண்டுகொண்டு சாகலாம்..
எனவேதான் முதலிலேயே பொய் சொன்னேன்”
ஆண்டவன் மறைந்தான்
---------------------------------------------
**** அச்சமில்லை , அச்சமில்லை **********
பேருந்தில் டிக்கட் பரிசோதகர் !!!
என்னிடம் டிக்கட் இல்லை !!!!!!
கொஞ்சமும் அஞ்சவில்லை !!!!!
நான் தான் டிரைவர் !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
‪#‎பிங்கூ‬
-------------------------------------------------
ஃஃஃ பலவிதம் ஃஃஃ
இளங்கவிஞன்! 
காப்பி அடித்தான் !!
காமெடி என்றார்கள!!
அப்பாவி கவிஞன் !
காப்பி அடித்தான் ! !
திருட்டு என்றார்கள் !!
சீனியர் கவிஞன் !
காப்பி அடித்தான் !!
ஆராய்ச்சி என்றார்கள்!
‪#‎பிங்கூ‬
-------------------------------------------------
**** உளுந்த வடையும் உலக ஞானமும் ******
உளுந்த வடை நடுவே !!!!!
ஓட்டையாக இருந்தது!!!!!!
உளுந்த வடையில் !!!
ஒன்றும் இல்லாத அந்த பகுதி !!!!!
உள்பிரஞ்ஞையை !!
உலுப்பி விட்டது !!!
உளுந்த வடையின் மையத்தில் !!!!!
ஒன்றும் இல்லை !!!!!!!!!
ஒன்றும் இல்லாத அந்த பகுதி இல்லையென்றால் !!!!!!
உளுந்த வடையே இல்லை !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
‪#‎பிங்கூ‬
-------------------------------
*சட்டை செய்யாதீர்கள்*****
என்னவள்!!!!
மாடியில் இருந்து!!!!!!
என் சட்டையை !!!!!
கீழே தூக்கிப் போட்டாள் !!!!!
எனக்கு!!!!
கைகால் உடைந்தது !!!!!
சட்டைக்குள் இருந்தது !!!
நான் தான் !!!!!
# பிங்கூ
----------------------------
மதர்ஸ் டே!!!!!
ஃபாதர்ஸ் டே !!!!!
அங்கிள்ஸ் டே !!!!
ஆண்டீஸ் டே !!!!
லவர்ஸ் டே !!!!!!!!!!
இதையெல்லாம் விட !!!!!
எனக்கு பிடிதத்து !!!!!!!!!!!!!
நீ !!!!!!
செல்லமாக !!!!!
என்னை கூப்பிடும் !!
டேய் !!!!!!!
--------------------------------------------------
வெயிலில் !!!!!!!
ரஜினிக்கும் வியர்த்தது !!!!!!!!!!!!!
சுற்றிலும் !!!!!!!!!!!!!!!!!
லட்சக்கணக்கான !!!!!!!
விசிறிகள் இருந்த போதிலும் !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
-----------------------------
****பூவும் பூமகளும் ******
என்னவளிடம்!!!!!
காதலை சொல்லி!!!!!
ரோஜா கொடுத்தேன் !!!!!!!
அவளோ !!!!!!!
பூவை செல்லமாக
என் மேல் எறிந்தாள் !!!!
என் முகமெல்லாம் ரத்த களறி !!!!!!!
பூவை
பூத்தொட்டியுடன் சேர்த்து
எறிந்து தொலைத்து விட்டாள் !!!!!!!!!!!!!!!
‪#‎பிங்கூ‬
--------------------------------------------------------
கொடுமை கொடுமை என !!!!
எண்டர் கீ !!!
கோயிலுக்கு போனது !!!!!
ஆனால் ,
அதற்கு முன் !!!!!
ஏற்கனவே போய் இருந்த !!!!!
ஆச்சர்யக்குறி கீ !!!!!!
அங்கே அழுது கொண்டு இருந்தது !!!!!!
------------------------------------------------------------------
இரவு !
"ஹஸ்பண்ட் வந்துட்டாரு" !
கனவு கண்டு மனைவி உளறல் ! 
தூக்க கலக்க
கணவன் ஜன்னல் வழியை குதிக்கிறான்!
பழக்கதோஷம் !!!
‪#‎பிங்கூ‬
--------------------
எப்படி தேடுவேன் ! 
தொலைந்துபோன எருமையை!
அமாவாசை இருட்டு !!
‪#‎பிங்கூ‬
----------------------
கடும் கோடைக்காலம்!
ஆற்றில் முழ்கி எழுந்தாள்!!!
குளிர்ந்தது ஆறு !!!!!!!!!!
- கவிஞர் பிச்சைக்காரன்
------------------------
*எல்லா உயிர்களின்மீது காட்டப்படும் அன்பு மைத்ரி. சக மனிதர்கள் காட்டப்படுவது கருணை . நம் மீது அன்பு காட்டுபவர்கள்மேல் பதிலன்பு காட்டுவது வியாபாரம்

No comments:

Post a Comment

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா