Tuesday, November 4, 2014

டெர்ரர் கதைகள் - மிக்சர் போஸ்ட்

முல்லாவின் விலை உயர்ந்த குதிரை காணாமல் போய்விட்டது . எல்லோரும் சோகத்தில் . முல்லா மட்டும் சந்தோஷமாக காணப்பட்டார் . காரணம் கேட்டார்கள் . நல்ல வேளை , குதிரை மேல் அமர்ந்திருந்தால் இந்நேரம் நானும் காணாமல் போயிருப்பேனே . தப்பித்தேன் என்றார் மகிழ்ச்சியாக

*******************************************************************************************************

டெர்ரர் கதை . பேச்சு . ஃபேஸ் புக் சாட் , யாஹு சாட் எல்லாம் போரடித்திருக்கும் . இனி மரங்கள் , செடி , கொடிகளிடம் நீங்கள் பேசலாம் .மன்னிக்கவும் . உரையாடலாம் . அதற்கு என் கண்டுபிடிப்பு உதவும் . பலத்த கைதட்டல்களுக்கிடையே அறிவித்தார் விஞ்ஞானி ராகவன் . இது பொழுது போக்கு கருவி மட்டும் அன்று . புயல் , வெள்ளம் போன்ற பேரிடர்களை நமக்கு முன் இவை உணர்ந்து நமக்கு சொல்லி விடும் . இதன்மூலம் உயிர்சேதம் , பொருள் சேதத்தை தடுத்து கொள்ளலாம் என அவர் பேச பேச கூட்டம் ஆர்ப்பரித்தது . தாவரங்களை பேச வைத்த தன்னிகரற்ற விஞ்ஞானி வாழ்க என கோஷம் எழுந்தது
( ஓகே guys . அடுத்த இரு வரிகளில் கதை முடியவேண்டும் . டெர்ரர் முடிவாக அவலச்சுவையுடன் இருக்க வேண்டும் . மேற்கண்ட வரிகளின் அடிப்படையில் க்ளைமேக்ஸ் இருக்க வேண்டும் . முயற்சியுங்கள் . நான் நினைத்து வைத்திருப்பதைத்தான் சொல்ல வேண்டும் என்பதில்லை . சரியான கிளைமேக்ஸ் ,தவறான கிளைமேக்ஸ் என்பதும் இல்லை . சும்மா க்ரியேட்டிவிட்டிய காட்டுங்க


*********************************************************************************************************

டெர்ரர் கதை . டியர் . மலை உச்சிக்கு போற பாதை அழகா இருந்தாலும் , பயமாவும் இருக்குல ? ஆள் நடமாட்டமே இல்ல
ஆமாண்டா செல்லம் . பயமா இருக்கு . இப்பவாச்சும் நீ இருக்க . திரும்பி போகும்போது நான் மட்டும் தனியா எப்படித்தான் போகப்போறேனோ


**********************************************************************************************************
டெர்ரர் கதை . சொல்லுடி செல்லம் . உனக்கு ஆண் குழந்தை பிடிக்குமா ? பெண் குழந்தையா ?
எதுவா இருந்தா என்னங்க ? எதுவா இருந்தாலும் ஓகேதான்.
ஓ. என்னே பெருந்தன்மை . வியர்வி சிந்தி உழச்சவன் நானல்லவா ?
ஏன் ? நான் வியர்வை சிந்தலையா ?
ஹா ஹா . உன்னை ஜெயிக்க முடியாது . எனக்கும் ஆண் குழந்தை பெண் குழந்தை வித்தியாசம் எல்லாம் இல்லை . ஏதோ ஒண்ணு . சரி சீக்கிரம் கொண்டு வா . பசிக்குது. ஃப்ரிட்ஜ்ல வச்சிருக்கேன்

**********************************************************************
டெர்ரர் கதை . வீ ட்ரைட் அவர் பெஸ்ட் . ஒரு பேட நியூஸ் ,ஒரு குட் நியூஸ் சொல்ல போறேன்
சொல்லுங்க டாக்டர்
முதலில் பேட் நியூஸ் . ஆக்சிடெண்ட்ல உங்க மனைவிக்கு கால் போயிருச்சு . கைகளையும் இனி அசைக்க முடியாது . பத்து லட்சம் செலவழிச்சா கண்களை காப்பாத்தலாம்
ஓ காட் ! சரி குட் நியூஸ் என்ன டாக்டர?
ஹாஹா . நான் சொன்னது சும்மா தமாஷ் . உங்க மனைவி இறந்துட்டாங்க


************************************************************************************
டெர்ரர் கதை , . திருட போன வீட்ல அழகான பொண்ண பார்த்தேன் . செம ஸ்ட்ரக்சர் .
அப்புறம் ?
அப்புறம் என்ன , நான்ஸ்டாப் செக்ஸ்தான் . அவ அப்ஜெக்ட் பண்ணல . உடம்பு முழுக்க கிஸ் அடிச்சேன்
வாவ் . லிப் கிஸ் அடிச்சியா ?

இல்லப்பா . அது மட்டும் முடியல . எவ்வளவு தேடியும் அவ தலையை கண்டு பிடிக்க முடியல
*********************************************************************************************************
டெர்ரர் கதை . சார் என்ன சாப்பிடுறீங்க . மெனு பாருக்க . மெனு எல்லாம் வேண்டாம் . வந்திருப்பவரகளின் லிஸ்ட் கொடுங்க

****************************************************************************************************
வாலி எழுத வந்த புதிதில் திராவிட இயக்கம் வளர்ந்து வந்த காலகட்டம்..பிராமண எதிர்ப்பு கடுமையாக இருந்தது.. ஆனாலும் பிரமாணன் என்ற அடையாளத்தை மறைக்காமலும். ( பலர் அந்த அடையாளத்தை மறைக்க சொல்லி அட்வைஸ் கொடுத்தார்கள்) அதே நேரத்தில் பிராமணன் என்ற திமிர் இல்லாமலும் நடந்து கொண்டு , பிற்காலத்தில் திராவிட இயக்க தலைவர்களுடன் நெருக்கம் ஆனார்.. சினிமாவிலும் வென்றார்..
ஒரு பாடலில் , சர்க்கரை கட்டி பாப்பாத்தி..உன் மனச வச்சுக்கோ காப்பாத்தி என எழுதினார்... இதில் ஜாதியெல்லாம் இல்லை... வழக்கு சொல்தான் என்றார் அவர்.. அவர் ஒரு பிராமணராக இருந்தாலும் , பாப்பாத்தி என்பது தவறில்லை என கருதினார்.

ஆனால் பிராமணர் அல்லாத புரட்சித்தலைவர் அதை நீக்க சொன்னார்.. பிராமணர்கள் சிலர் புண்படக்கூடும் என்பது அவர் எண்ணம்..
மேன்மக்கள்..
கடைசியில் அது மாற்றப்பட்டது..
சக்கரக்கட்டி ராஜாத்தி... உன் மனச வச்சுக்கோ காப்பாத்தி
************************************************************************************************************
வாலியை ஒரு கட்டத்தில் கலைஞரின் ஜால்ரா என கிண்டல் செய்தனர்... ஆனால் அவர் , அந்த கால கட்டத்திலேயே வைகோ நிகழ்ச்சிகளுக்கும் சென்று இருக்கிறார் என்பதும் , அதை கலைஞர் தடுக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.. நான் எறும்பு மாதிரி... தமிழெனும் சர்க்கரை எங்கெல்லாம் இருக்கிறதோ. அங்கெல்லாம் செல்வேன் என்றார்... கலைஞரை புகழ்ந்தது போல வைக்கோவையும் புக்ழந்து இருக்கிறார் . கலைஞர் தவறாக நினைப்பாரோ என்ற பய்ம் இன்றி..
வைகோவை பற்றி அவர் பாடியதில் இரு பகுதிகளை தருகிறேன்.. இரண்டாம் பகுதியை பாருங்கள்... வழக்கம்போல வாலியின் குறும்புதான்,,,ஆனால் எனக்கு ஏனோ கண்கள் கலங்கின...

1
நீ நடந்து வருகையில் பூமரங்கள் வீசினவாமே சாமரங்கள் …
வைகோ …அது உன் ‘வேர்’ வைகோ ..
நீ நடந்து வருகையில் தரை இறங்கி நின்றனவாமே
தண்ணீர் மேகங்கள் ..
வைகோ அது உன் ‘பார்’ வைகோ
2
சிறைச்சாலையில் சில சாயங்கால வேளையில்
நீ பந்து விளையாடிய போது உன் நெஞ்சில் வந்து விளையாடியிருக்குமே
என் நினைவு..
அது எப்படி என்று சொல்லவா ..
அன்று நீ ஆடிய ஆட்டம் ‘வாலி’பால் அல்லவா …??

*************************************************************************************************
புரட்சிதலைவர் அமெரிக்க மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்தபோது , வாலியின் இந்த பாடல்தான் தமிழகம் முழுதும் ஒலித்தது.
இறைவா உன் மாளிகையில்
எத்தனையோ மணி விளக்கு
தலைவா உன் காலடியில்
என் நம்பிக்கையின் ஒளி விளக்கு
நம்பிக்கையின் ஒளி விளக்கு

ஆண்டவனே உன் பாதங்களை
நான்கண்ணீரில் நீராட்டினேன்
இந்த ஓருயிரை நீ வாழ வைக்க
இன்று உன்னிடம் கையேந்தினேன்..
எம் ஜி ஆர் நல்லபடியாக வந்ததும். ஜானகி அம்மையார் வாலிக்கு நன்றி தெரிவித்தார்... இந்த வரிகளை நாட்டு மக்கள் மனமுருக பாடி பிரார்த்தித்தே எம் ஜி ஆர் குணம் அடைய காரணம் என்றார்.
வாலி அடக்கத்துடன் சொன்னார்... எம் ஜி ஆர் குணம் அடைய காரணம் வாலி பாக்கியம் அல்ல...உங்கள் தாலி பாக்கியம்

******************************************************************************************
வாலி நினைவுகள் - வாலி மருத்துவமனையில் தன் கடைசி நிமிடங்களில் இருந்தபோது , கமல் அவரைப்பார்க்க வந்து இருந்தார்.. வாலி யாருடனும் பேசும் நிலையிலோ , பார்க்கும் நிலையிலோ இல்லை.. இந்த நிலையில் அவரை காண சகிக்காத கமல், மருத்துவர்களிடம் சத்தமாக வாலியின் காதில் விழும்படி சொன்னார்... “ விஸ்வரூபம் -2 படத்துக்கு பாட்டு எழுதணும்... அவருக்காகத்தான் காத்துக்கொண்டு இருக்கிறோம்.. சீக்கிரம் அனுப்பி வைங்க “
எத்தனையோ பாராட்டுகளை கேட்ட அந்த மகா கவிஞன் கேட்ட கடைசி பாராட்டாக இது இருந்து இருக்க கூடும்... அதுவும் இன்னொரு பெரிய கலைஞனிடம் இருந்து !!!

****************************************************************************************

வாலி நினைவுகள் - கண்ணதாசனை தொடர்பு கொண்டு பலர் அப்போது வந்த ஒரு புதிய பாடலை பாராட்டி பேசினார்கள்... கண்ணதாசன் உதவியாளர்களிடம் அலுத்துக்கொண்டார்... இப்பலாம் நான் எழுதிய பாடலை நானே மறந்துடுறேன்.. இதை எப்ப எழுதுனேனு எனக்கே மறந்துடுச்சுப்பா என்றார்...
உதவியாளர்கள் தயங்கி கொண்டே சொன்னார்கள் “ அண்ணே..அது உங்க பாட்டு இல்லை.. வாலி எழுதியது “
கண்ணதாசன் உடனே வாலியை தொடர்பு கொண்டு பாராட்டினாராம் “ என்னை மாதிரியே எழுதி இருக்கய்யா.. அருமை “ என பெருந்தன்மையாக பாராட்டியதை தனக்கு கிடைத்த பெரிய கவுரமாக வாலி குறிப்பிட்டு இருக்கிறார்..
அந்த பாடல் ..
மாதவிப் பொன் மயிலாள் தோகை விரித்தாள் - வண்ணமையிட்ட கண் மலர்ந்து தூது விடுத்தாள்
காதல் மழை பொழியும் கார்முகிலாள் - இவள்
காதலன் நானிருக்க பேரெழிலாள்
********************************************************************************************************
வாலி பாடல்களுக்கு கமல் ரசிகர் என்றாலும் , ஒரு குறிப்பிட்ட வரி அவருக்கு மிகவும் பிடிக்கும்., அதை அவர் குறிப்பிட்ட போது , நானும் “ அட !! “ என வியந்தேன்...
கமலுக்கு பிடித்த வாலியின் வரி..
“ மெய் என்று மேனியை யார் சொன்னது “ ( வாழ்வே மாயம் பாடல் )
*********************************************************************************************************************
வாலி நினைவுகள்- ஆறரை கோடிபேர்களில் ஒருவன்..அடியேன் தமிழன் நான் உங்கள் நண்பன் என்று எஸ் ஜே சூர்யா ஸ்டைலாக பாடுவதை பார்த்து ரசித்து இருப்பீர்கள்.. இந்த பாடலை ரஜினிக்காக வாலி எழுதினார். ஜக்குபாய் படத்துக்காக.. ஆனால் படம் டிராப் ஆகி விட்டது.. பிறகு பாடலை கேட்ட ரஜினி நல்ல பாடலை இழந்து விட்டேனே என வருந்தினாராம்
*******************************************************************************************
வாலி நினைவுகள் - தளபதி படத்த்தில் , சின்ன தாய் அவள் என்ற பாடலை கேட்டு கண் கலங்காதவர் இருக்க முடியாது.. அதிகம் கண் கலங்‌கியவர் யார் தெரியுமா ? இளையராஜா .. காரணம் ? சின்ன தாய் என்பது அவர் அன்னையின் பெயர்... அந்த பாடலில் வரும் ராசா எனும் பெயரையும் கவனியுங்கள் .. வாலியின் சிறந்த பாடல்களில் ஒன்று
******************************************************************************************
பாலகுமாரன் , சுஜாதவை எல்லாம் கடந்து வந்து விட்டோம் என சொல்பவர்களை பார்த்தால் , எனக்கெல்லாம் பொறாமையாக இருக்கும்.. நானெல்லாம் இன்னும் கிராமப்புற கதைகளையே கடந்து விடவில்லை... சமீபத்தில் படித்த ரஷ்ய கிராமப்புற கதை ஒன்று.
******************************************
ஒரு வயதான் நாய் ஒன்று பசியுடன் நடந்து போய்க் கொண்டு இருந்தது... வழியில் பார்த்த ஓநாய் அனுதாபத்துடன் விசாரிக்கவே , தான் அந்த காலத்தில் பெரிய தாதா என்றும் இப்போது வேட்டையாட முடியவில்லை என்றும் சொன்னது.. நான் உனக்கு உதவுகிறேன் என சொல்லி , ஓநாய் அதை அழைத்து சென்றது...
அந்த பக்கம் ஏதோ சத்தம் கேட்கிறது..பார்த்து வா என ஓனாய் சொல்லவே , போய் பார்த்து வாத்து இருப்பதாக சொன்னது நாய்..அய்யே...ஒரே சிறகாக இருக்கும்..இந்த பக்கம் போய் பார் என்றது ஓனாய்... போய் பார்த்து விட்டு , ஆட்டு மந்தை இருப்பதாக சொன்னது நாய்..அய்யே...ஒரே முடியாக இருக்கும்... நேராக போய் பார் என்றது ஓனாய்.. பார்த்து விட்டு குதிரை இருப்பதாக சொன்னது நாய்.
ஓனாய் சந்தோஷத்துடன் வேட்டைக்கு தயாரானது.. கால்களை தரையில் வேகமாக தேய்த்தது.
“ என் வால் துடிக்கிறதா “ என்றது..
“ ஆம் “ என்றது நாய்
“ என் விழிகள் சிவந்து பிதுங்குகிறதா “
“ ஆம் “
ஓனாய் பாய்ந்து குதிரையை வீழ்த்தியது...இரண்டும் பசியாறின..
அடுத்த நாள் நாய் வழியில் ஒரு வயதான பூனையை பார்த்தது.. பூனை தன் ஃப்ளாஷ் பேக்கை சோகமாக சொல்ல , அதற்கு ஓனாய் பாணியில் உதவ முடிவு செய்தது நாய்.
அந்த பக்கம் ஏதோ சத்தம் கேட்கிறது..பார்த்து வா என நாய் சொல்லவே , போய் பார்த்து வாத்து இருப்பதாக சொன்னது பூனை ..அய்யே...ஒரே சிறகாக இருக்கும்..இந்த பக்கம் போய் பார் என்றது நாய்... போய் பார்த்து விட்டு , ஆட்டு மந்தை இருப்பதாக சொன்னது பூனை ..அய்யே...ஒரே முடியாக இருக்கும்... நேராக போய் பார் என்றது நாய் .. பார்த்து விட்டு குதிரை இருப்பதாக சொன்னது பூனை
நாய் சந்தோஷத்துடன் வேட்டைக்கு தயாரானது.. கால்களை தரையில் வேகமாக தேய்த்தது.
“ என் வால் துடிக்கிறதா “ கேட்டது நாய்..
பூனை சந்தேகமா பார்த்தது..வாலின் முடிகள் லேசாக காற்றில் ஆடின.
“ ஆமா..லேசா துடிக்குது” என்றது பூனை..
“ என் விழிகள் சிவந்து பிதுங்குகிறதா “
இல்லையே “ பரிதாபமாக சொன்னது பூனை..
“ ஆம் என சொல்..அப்பத்தான் நான் வேட்டையாட முடியும் “ என்றது நாய்... அரைகுறை மனதுடன் ஆம் என்றது பூனை..
நாய் ஆக்ரோஷமாக பாய்ந்து குதிரை முன் விழுந்தது... குதிரை டென்ஷன் ஆகி ஓங்கி ஒரு உதை விட்டது.. ரத்தகளறியாகா பூனை முன் விழுந்தது... கண்கள் பிதுங்கி ரத்தம் கொட்டியது..
பார்த்த பூனைக்கு உற்சாகம்
“ சகோதரா...உண்மையிலே இப்போது உன் கண்கள் சிவந்து பிதுங்கி இருக்கின்றன.. இப்போது பாய்ந்து தாக்கு “ என்றது..
**************************************************************************
ட்ரெய்னில் கதை படிப்பதற்கு கவிதை ஒன்று இடைஞ்சலாக இருக்கிறது என்பதை வருத்தத்துடன் ( ? ! ) தெரிவித்து கொள்கிறேன்

********************************************************************
கவிதை வாசிப்பு முயற்சி anti - climax ல் ( aunty climax அல்ல ) முடிந்துவிட்டது என்பதை வேதனையுடன் சொல்லிக்கொள்கிறேன்

***************************************************************************
கவிதை வாசிப்பு முயற்சி தோல்வி என்று நான் சொன்னதை வைத்து நான் செருப்படி வாங்கியது போல சில எதிரிகள் வதந்திகளை பரப்புகிறார்கள் . நம்பவேண்டாம் . நானே சொல்கிறேன் . அந்த கவிதை என் அருகிலேயே வந்து அமரும் சூழ்நிலை வந்தது . க்ளோஸ் வியூவில் ரசித்தபடி நைசாக பேச்சை ஆரம்பித்தேன் . அப்போது ஒரு ஸ்டேஷனில் டிரெய்ன் கொஞ்ச நேரம் நின்றது . அண்ணா , எனக்கு ஒரு தண்ணி பாட்டில் என அந்த கவிதை காசை நீட்டியது . அண்ணா என்ற வார்த்தை அதிர்ச்சியளிக்கவே , வாங்கி கொடுத்துவிட்டு , மவுனமாக மௌனியை எடுத்தேன் . பின் அட்டையில் அவர் புன்னகைத்தார்
*********************************************************************************
அவர்களது குதிகால் உயர்ந்த பூட்ஸ் அவர்கள் மூளையை விட பளபளவென மின்னின . அவர்கள் நடையோ , அவர்களது தலை வகிடை விட கோணலாக அவனுக்கு தோன்றியது - மௌனியின் இந்த வர்ணனையை ஆட்டயைப்போட்டு சுஜாதா ஒரு கதையில் தான் எழுதியதுபோல எழுதியிருப்பார்
*************************************************************************
தனியாக பைத்தியக்காரத்தனத்தில் தான் இருப்பதாக ஒர் எண்ணம் முதலில் - பிறகு உலகமே பைத்தியக்காரத்தனமாய் போய்விட்டதோ என்ற யோசனை . கடைசியில் ஒன்றும் புலப்படாமல் பைத்தியக்காரத்தனம் என முணுமுணுத்து மூச்சு விட்டான் . யார் யார் எப்படி எப்படி என அவனால் அப்போது உணரமுடியவில்லை.
எப்போதும் முடியாதென்ற எண்ணம்தான் எனக்கும்
ஃ ஃ ஃ ஃ ஃ ஃ ஃ ஃ ஃ ஃ ஃ
1938ல் எழுதப்பட்ட வரிகள் என நம்பவே முடியவில்லை

*****************************************************************************
அவள் பார்வை என்னை ஊடுருவி துளைத்து சென்றது. ஒருவன் , தன் உள்ளூர உறைந்த ரகசியத்தை , பைத்தியத்தின் பகற்கனாவில் பாதி சொல்லிவிட்டு மறைவதுபோல , அவள் பார்வை என்னை விட்டு அகன்றது
-ங்கொய்யால , எப்படியெல்லாம் எழுதுகிறார்கள் ! !
*************************************************************************************************
ஒரு வாலிபன் ஒரு பெண்ணை ரொம்ப நாளாக சைட் அடித்து வந்தான்.அவளுக்கு அவனை பிடிக்கவில்லை. ஆனால் காலப்போக்கில் பிடிக்க ஆரம்பித்தது. தன் காதலை கவிதையாக எழுதி அனுப்பினாள்..அதைப்பார்த்த அவன் என்னவோ ஏதோ என அரண்டு விட்டான். ஊரை விட்டு ஓடிப்போகிறேன் என அவளுக்கு எழுதி விட்டு ஓடிவிட்டான். அந்த லெட்டர் பெண் வீட்டார்கள் கையில் கிடைத்தது... ஓடிப்போகலாமா என அதில் எழுதி இருந்தான். அவளை அவர்கள் திட்டினார்கள்.. முறைப்படி வீட்டுக்கு வந்தால் , திருமணம் செய்து வைப்பார்கள் என அவள் எழுதியதை புரிந்து கொள்ளாமல் இப்படி தன் பெயரை கெடுத்து விட்டானே என்ற வேதனையில் அவள் தற்கொலை செய்து கொண்டாள்.. ஊர் அவளுக்காக பரிதாபப்பட்டாலும், அந்த முட்டாள் காதலனை நினைத்து சிரித்தது..
அந்த ஊருக்கு ஒலவையார் வந்தார். தற்கொலை செய்து கொண்ட அந்த பெண் பேயாகி மாறி அவ்வையாரை தாக்க முனைந்தது..
என்னை ஏன் தாக்குகிறாய்.. ஒரு பாட்டை புரிந்து கொள்ள முடியாதவனை, ஒரு விஷயத்தை புரியும்படி எழுத தெரியாதவனை , ஊராரின் கேலிக்கு ஆளானவனை ஒரு பெண் பெற்று போட்டாளே...அந்த மாதரசியைப்போய் தாக்கு... தாக்கு ..தாக்கு என்றார்..அந்த பேய் யோசிக்க ஆரம்பித்தது..
வெண்பா விருகாலிற் கல்லானை வெள்ளோலை
கண்பார்க்கக் கையால் எழுதானைப் - பெண்பாவி
பெற்றாளே பெற்றாள் பிறர் நகைக்கப் பெற்றாளே
எற்றோமற்றெற்றோமற்றெற்று
***********************************************************************
அவ்வையார் ஒரு கல்யாணத்துக்கு போனார்..பயங்கர கூட்டம் , சாப்பிட முடியவில்லை.. பசி மயக்கத்துடன் வந்து கொண்டு இருந்தார்.. வழியில் பார்த்த நண்பர் “ என்ன.. சாப்பாடு பலமா.. நன்றாக உணவு உண்டீர்களா “ என்றார்... அவ்வையார் கிண்டலாக சொன்னார் “ கூட்டத்தில் நெருக்குண்டேன்.. தள்ளுண்டேன்... பசியால் சுருக்குண்டேன். ஆனால் சோறு உண்டிலேன் “
வண்டமிழைத் தேர்ந்த வழுதி கலியாணத்(து)
உண்ட பெருக்கம் உரைக்கக்கேள் – அண்டி
நெருக்குண்டேன் தள்ளுண்டேன் நீள்பசியி னாலே
சுருக்குண்டேன் சோறுண் டிலேன்


No comments:

Post a Comment

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா