Tuesday, April 6, 2010

சாலை விபத்து - சிறிய அலட்சியம், பெரிய இழப்பு



( i saw statement of Mr. Vaiko in newspaper... this made me to write this..otherwise, this incident would not have been shared )
தேசிய நெடுஞ்சாலையில் , நண்பர்களுடன் பயணித்துக் கொண்டு இருந்தேன்... உற்சாகமாக பேசிக்கொண்டு , அதி வேகமான பயணம்.. நல்ல சாலை..

எங்களை முந்திக்கொண்டு கொண்டு ஒரு சிவப்பு கார் சென்றது.... ஒரு இளைன்ஞர் ஒட்டி செல்ல, ஒரு பெண்ணும் , குழந்தையும் பின் சீட்டில் இருந்தனர்... ( மிக குறைவான நேரம் கவனித்தால், விரிவாக சொல்ல முடியவில்லை)

சிறுது தூரத்தில் , சாலை அடைக்கப்பட்டு இருந்தது... இடது, வலது என்பதை பிரிக்கும் தடுப்பு சுவர் உடைக்கப்படு இருந்ததால், அதன் வழியாக , நாங்கள் வால்;எ புற சாலைக்கு வந்து, பயணத்தை தொடர்ந்தோம்,.,,, wrong ரூட் என்பதால் சற்று மெதுவாக சென்றோம்... மீண்டும் ஒரு இடத்தில, தடுப்பு சுவர் உடைக்க பட்டு இருந்தது . அதன் வழியாக , சரியான ரூட் , இட புற சாலை அடைந்து, பயணத்தை தொடர்த்ந்தோம்... பத்து நிமிடம் நிறுத்தி, ரிலாக்ஸ் செய்த பின் பயணம் தொட்ரந்தது....

சற்று தூரத்தில் , சாலையின் வல புறத்தில், ஏதோ விபத்து.... பார்த்த எங்களுக்கு பயங்கர அதிர்ச்சி...

எங்களை முந்தி சென்ற சிவப்பு காரும் , பேருந்தும் நேருக்கு நேர் மோதல்... அந்த கார் ஓட்டுனர், மீண்டும் இடது புறம் திரும்பும் , பாதையை கவனிக்காததால், வலது புறமே சென்று இருக்கிறார்...

பாவம்... அவர் சரியாக செல்வதாகத்தான் எண்ணி இருப்பார்... எந்த ஒரு அறிவ்வு பலகையும் சாலையில் இல்லை....
கடைசி வினாடி கூட, " நாம் சரியாதானே செல்கிறோம், ஏன் அந்த பேருந்து இப்படி வருகிறது ? " என்றுதான் நினைத்து இருப்பார்


நூறு கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் பேருந்தும் காரும் மோதினால் என்ன ஆகும்...?

சற்று முன் பார்த்த கார் , இப்படி ஒரு விபத்தை சந்தித்த பார்த்தவுடன், எனக்கு ஏற்பட்ட அதிர்ச்சியை, சோகத்தை எழுத்தில் கொண்டு வர முடியவில்லை.... ( புகை படம் எடுக்க என் மனம் என்னை அனுமதிக்கவில்லை... )

ஒரு அறிவிப்பு பலகை , சரியான மாற்று சாலை இன்மை- இதனால், உயிர்கள் பலி....

விபத்துகள் ஏன் ஏற்படுகின்றன என அறிவியல் முறை படி ஆராய்ந்து, விபத்துக்களை தடுக்க வேண்டும்..

திரு வைகோ, ecr சாலை விபத்துக்கள் பற்றியும் , தடுப்பது குறித்தும் இன்று அறிக்கை வெளியிட்டு இருந்தார்...

வரவேற்க வேண்டிய அணுகுமுறை...

பெரும்பாலான விபத்துக்கள் , சாலை சரி இல்லாததால் நடக்கிறது என்பதை மறுக்க முடியாது...

2 comments:

  1. ஆதங்கம் மிகுந்த நிகழ்வை பகிர்ந்தமைக்கு நன்றி

    வாழ்த்துகள் நண்பரே

    ReplyDelete
  2. பகிர்ந்து கொண்டது, என் மனதுக்கு கொஞ்சம் ஆறுதலா இருக்கு...

    தேவையே இல்லாமல் உயிர்கள் பலியானது ஜீரணிக்க முடியல...

    புரிதலுக்கு நன்றி நண்பரே

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா