Friday, April 23, 2010

புலிகளின் இரண்டு கண்கள்





தமிழ் ஈழ விடுதலை போரில், முதல் முதலில் வீழ்த்தப்பட்ட எதிரி யார்?

சிங்கள போலீஸ் ?

சிங்கள ராணுவ வீரர்?

சிங்கள கட்சி தலைவர்?
தமிழர்களை துன்புரிதிய ஒரு சிங்கள வெறியன்?

நீங்கள் இதில் எந்த விடையை சொல்லி இருந்தாலும், அது தவறு...
துரையப்பா என்ற தமிழர்தான், ஈழ போரின் முதல் பலி என்பது போன்ற , பரவலாக அறிய படாத தகவல்களை , நடுநிலையுடன் அலசி இருக்கும் புத்தகம் தான்,.மருதன் எழுதியுள்ள, விடுதலை புலிகள் என்ற நூல்..

. சிங்கள பேரின வாதத்தை கட்டு படுத்த முடியாத அரசியல் வாதிகள், தமிழர் நலனை புறக்கணிப்பதும், வாத்தைலளால் விளக்க முடியாத துன்பங்களை தமிழர்கள் அடை தும், மனித குலத்துக்கே ஒரு களங்கம்.

அமைதி வழியில் சிலர் தீர்வு காண முயற்சித்து, வெற்றி பெற முடியாத நிலையில், ஆயுத தீர்வு என்ற முடிவுக்கு பிரபாகரன் தள்ள படுகிறார் என்பது நன்றாக விளக்க படுகிறது... வேறு வழியே இல்லாத நிலையில் தான், ஆயுதம் ஏந்த வேண்டிய அவசியம் ஏற்பட்டது...

ஆனால், கொள்கை அடிப்படயில் இல்லாமல், ஒரு தனி மனிதனின் விருப்பு வெறுப்புக்கு ஏற்றாவரு, போராட்டம் நடத்த பட்டது உலகிலயே இதிதான் முதல் முறை என தோன்றுகிறது....

உண்மை வீரர் உமா மகேஸ்வரன், காதலில் விழுந்த போது, அதை ஒரு பிரச்சினை ஆக்கி, அவரை வெளியேற்றியது, விடுதலை போரில் ஒரு பெரும் பின்னடைவு..

பின், பிரபாகரனே காதலில் விழுந்து, கல்யாணம் செய்து கொள்வது, அவர் முன்பு எடுத்த முடிவு தவறு என உணர்த்துகிறது...

வரலாறு என்பதே அபத்தம் தான்... தி நகர் சண்டையில் , சற்று வேறு விதமான முடிவு ஏற்பட்டு இருந்தால், உலக தமிழர்களின் தலைவராக, உமா மகேஸ்வரனைதான் , இன்றி அடையாளம் காட்டி இருப்போம்...

ஒழுங்கு , கட்டு ப் பாடு, என எல்லா விதத்திலும் தனித்துவமாக புலிகள் அமைப்பு செயல்பட்டதையும், கடும் பயிற்சி எடுத்து கொண்டதையும் ,வரலாறு கண்டிப்பாக பாராட்டும்..

ஆனாலும், எதிரி யார் என்ற தெளிவு இல்லாமல், துரோகி என முடிவு எடுத்து, சொந்த சகோதரர்களையே கொன்று குவித்ததும, இந்நூலில் பதிவு செய்யபட்டுள்ளது...

அமைதி வழியில் போராடிய அமிர்த லிங்கம், கொல்லப்பட்டதை படிக்கும் போது, இதெல்லாம் ஏன் என நமக்கு கஷ்டம்க இருக்கிறது..
என்ன இருந்தாலும், தனக்கு சரி என பட்டதைத்தான் பிரபாகரன் செய்து இருக்கிறாரா..சுயநலம் என்று எதுவும் இல்லை , உண்மையான போராளி என்று நூல் விளக்குகிறது...

கும்பிட்ட கைக்குள் துப்பாக்கி, மலர் மாலையில் வெடி குண்டு என்றெல்லாம், சிலரை கொன்று குவிக்கும் போது, அவர்களை துரோகிகள் என்று முடிவெடுத்து தண்டிக்கும் அதிகாரத்தை தாங்கள் எடுத்து கொள்வது நியாயமா என்று சிந்தித்து இருந்தால், தம்மையும் சிலர் தண்டனைக்குரியவர்கள் என முடிவேக்க கூடும் என்ற உண்மை அவர்களுக்கு புருந்திரிக்க கூடும்...

கடைசியில் , கருணா என்ற தமிழனே, அவர்களுக்கு சவால் ஆனதுதான் வரலாறு...

இவளவு திறன், திட்டமிடல், உழைப்பு, விமான படை உருவாகும் ஆற்றல் எல்லாம் கொண்ட புலிகள், சிங்கள பேரின வாத எதிர்ப்பை மட்டும் இலக்காக கொள்ளாமல், சிங்கள பேரின வாத எதிர்ப்பு மற்றும சக போராளிகள் எதிர்ப்பு, இரண்டையும் இரண்டு கண்களாக கொண்டு போரிட்டதுதன், உலக வரலாற்றின் மாபெரும் சோகம்....

புத்தகம் : விடுதலை புலிகள்

ஆசிரியர் : மருதன்
வெளியீடு : கிழக்கு பதிப்பகம்

13 comments:

  1. பட விளக்கம்

    1 சமாதான பேச்சு நடத்தும் போது, கொல்லப்பட்ட, சபாரத்தினம்... ஆயுத போரில் ஈடுபட்ட , இணையற்ற தமிழ் வீரர..

    2சிங்கள வெறியர்களின், கோர தாண்டவம்

    3 அரசியல் தீர்வுக்கு பாடுபட்ட , அமிர்த லிங்கம்...

    தமிழனுக்கு, துன்பம்

    ReplyDelete
  2. தமிழனுக்கு துன்பம் , சிங்கள வெறியர்களால் மட்டும் அல்ல..

    சபாரத்தினமும், அமிர்த லிங்கமும், சிங்களர்களால் கொள்ள படவில்லை

    ReplyDelete
  3. பதிவுகள் சிறப்பாகவே உள்ளது.

    நண்பரே நிறைய எழுத்துப் பிழைகள் உங்கள் பதிவுகளில் காணப்பெறுகின்றன அடுத்தடுத்த பதிவுகளில் கவனம் கொள்ளவும்.

    தமிழ் ஈழ விடுதலை போரில், முதல் முதலில் வீழ்த்தப்பட எதிரி யார்? இது வீழ்த்தப்பட்ட என்று இல்லாமல் என்ன பொருள் கொடுக்கிறது பாருங்கள்.

    ReplyDelete
  4. /* துரையப்பா என்ற தமிழர்தான் */

    துரையப்பா என்ற தமிழின துரோகி, தமிழ்நாட்டு கருணாவைப் போல் ஈழத்தின் கருணைவைப் போல் இவனும் ஒரு துரோகி, இவனுக்கு மரியாதை வேறு

    ReplyDelete
  5. /*துரையப்பா என்ற தமிழர்தான்*/

    துரையப்பா என்ற தமிழின துரோகி, தமிழ்நாட்டு கருணாவைப் போல் ஈழத்தின் கருணைவைப் போல் இவனும் ஒரு துரோகி, இவனுக்கு மரியாதை வேறு

    ReplyDelete
  6. " அடுத்தடுத்த பதிவுகளில் கவனம் கொள்ளவும்."

    சுட்டி காட்டியதற்கு நன்றி... இனி கவனமாக இருப்பேன்

    ReplyDelete
  7. இவ்வளவு எழுதற நீங்க, ஒரு படையை கட்டியமைத்து தமிழர் விடுதலைக்காகப் போராட வேண்டியது தானே?

    கை இருந்த என்னவுன்ன எழுதலாமா, வாய் இருந்த என்னவுன்னப் பேசலாமா?

    அவனவன் வீட்டு பெண்களோட மார்பை அறுத்தா தான் அவனனுக்கு வலி தெரியும்

    போராட்டம் எப்படி தொடங்கியது, எப்படி மாறியது, எப்படி துப்பாக்கி கிடைத்தது, எவன் கொடுத்தான், இதுக்கெல்லாம் வரலாறு படிக்கனும் சார்

    ஒரு புத்தகத்தை படித்துவிட்டு விமர்சிக்க கூடியதல்ல இந்த போராட்டம்

    உண்மையான தமிழ் வித்துக்கு தான் இதோட வலித் தெரியும் புரியும், எல்லோருக்கும் தெரியாது புரியாது. நீங்க எப்படி

    ReplyDelete
  8. " உண்மையான தமிழ் வித்துக்கு தான் இதோட வலித் தெரியும் புரியும் "
    சார்... அங்கு நடப்பது, ஒட்டு மொத்த மனித குலத்துக்கே எதிரானது... அப்பட்டமான மனித உரிமை மீறல். .

    அதை சரியான முறையில் உலக அரங்கிற்கு எடுத்து செல்லாமல், நமக்குள் அடித்து கொண்டதுதான் மாபெரும் தவறு..

    ReplyDelete
  9. rajapriyan good post

    ReplyDelete
  10. கிழக்கு பதிப்பகத்தில் இருந்து வேறு எப்படிப்பட்ட புத்தகம் வரும்...

    ReplyDelete
  11. /*சார்... அங்கு நடப்பது, ஒட்டு மொத்த மனித குலத்துக்கே எதிரானது... அப்பட்டமான மனித உரிமை மீறல். .*/

    சார், அது எல்லாருக்கும் தெரியும், அங்கு நடக்கும் இன அழித்தலை உலக மக்களிடம் கொண்டுச் செல்ல உங்கள் எழுத்து உதவ வேண்டும்

    அதை விடுத்து பழையக் கதையை பேசிக்கொண்டு இருப்பதில் எந்த பயனும் இல்லை.

    /*அதை சரியான முறையில் உலக அரங்கிற்கு எடுத்து செல்லாமல், நமக்குள் அடித்து கொண்டதுதான் மாபெரும் தவறு.. */

    இதை தான் தமிழர்கள் அனைவரும் விரும்புகிறார்கள், உங்கள் எழுத்து இதை சார்ந்து இருந்தால் தமிழர்களுக்கு நன்மை

    முதல தமிழன இருப்போம்

    ReplyDelete
  12. மருதன் வ்ழக்கம்போல இந்தியக்காந்தீயம் பிழைக்கப் பத்திரமாக கிழக்குக்கு எழுதியிருக்கின்றார். கிழக்கு, நக்கீரன் போன்ற தமிழர் பிணங்களிலே தர்ப்பைவைத்துச் சவுண்டித்தனம் செய்யும் பதிப்பகங்களைத் கையாலே தட்டிக் கேளாமல் வளரவைக்கும் தமிழகவீரர்கள் கருணாநிதியையும் டோண்டுவையும் வாயாலே வெட்டிமுறிப்பது நகைப்புக்குரியது.

    ReplyDelete
  13. ஆழமான வரலாறு தெரியாமல் ஒரு புத்தகம் அந்தப்புத்தகத்துக்கு ஒரு விமர்சனம்.
    இந்தக்கேள்விக்கு பதில் சொல்லுங்கள் பார்க்கலாம்?
    திமுக தனி இராணுவப்படை, அதிமுக வுக்கு தனி இராணுவம், மதிமுகவுக்கு தனி இராணுவம் என அரசியல் கட்டசிகளுக்கு தனி ஆயுதப்படை இருந்திருந்தால் தமிழ்னாட்டில் அமைதி பொஙிவழிந்திருக்குமோ?
    சபரத்தினம் தமிழக நடிகையை கீப்பாக வைத்திருந்தார். யாழ் ஆஸ்பத்திரியில் வைத்து அவரது இயகத்தை சேர்ந்த இன்னொரு தலைவரை சுட்டுக்கொன்றனர்.
    இந்தியாவின் குறுக்குத்தனமான விளையாட்டுக்களால் தன் ஈழப்போர் இப்படி இரத்தக்களர்யானது.
    ஆயுதம் ஏந்தியவர்களயும் அரசியல் கட்சிகளையும் ஒப்பிட்டு குழப்ப வேண்ண்டாம்.
    ஆய்தம் ஏந்தினால் ஒரு இராணுவந்தாண் இருக்கவேண்டும். பல அரசியல் கட்சிகள் இருக்கலாம்.
    புலிகள் இந்தியாவின் நீளும் கரங்களை வெட்டத்தான் போராட்டம் இரத்தக்களரியாயிருந்தது.அமிர்தலிங்கம் முதற்கொண்டு சபாரத்தினம் வரை இந்தியா வின்
    திரைமறைவு வேலைகளை சதுரங்ககாய்களை நகர்த்தி விளையாய விளையாட்டுக்கு வெட்டப்பட்ட காய்கள்தான் அவை. இந்தியா விளையாட்டை நிறுத்தவில்லைபெரிய காயை வெட்டியபோதுதான் அவர்களுக்குப்புரிந்தது.இது சாதாரணவிளையாட்டிலை என்று.
    இன்னும் இந்தியா தமிழர்களோடு விளையாடுவதை நிறுத்தவில்லை

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா