Saturday, April 10, 2010

ஆவியுடன் ஒரு பேட்டி


" மச்சான்... இந்தியா வல்லரசு ஆயிடிச்சு நு , எல்லோரும் சொல்றாங்க..அது உண்மையா.. ப்ளீஸ் டா ..கேட்டு சொல்லு "

" என் லவ்வு வொர்க் அவுட் ஆகுமா.. கேட்டு சொல்லுடா"

" அடுத்து யாரு ஆட்சிடா.. கேட்டு சொல்லுடா மாப்பிள... "

அவனவன் தன் கோரிக்கைளை சொல்லி , என்னை டென்ஷன் ஆக்கி கொண்டிருந்தனர்... பேயுடன் பேசும் கலையை கற்று கொண்டது தப்பா போச்சே என நினைத்து கொண்டேன்,...
அதுவும் அரை குரயாகத்தான் கற்றேன்... குரு நாதர் சொன்னபடி, மந்திர பலகை, பூ, சாம்பல்,. கோழி எலும்பு எல்லாம் வைத்து மந்திரம் சொல்லியும் ஆவி எதுவும் வரவில்லை... போராடிக்கொண்டு இருந்தேன்..

இதெல்லாம் , வீண் வேலை ..ஆவியும் கிடையாது ..ஒன்றும் கிடையாது... நான் ஐ பீ எல் மேட்ச் பார்க்க, சேப்பக் போறேன், சொல்லியபடி கிளம்பினான் பரமசிவம்...

டேய்..ஹெல்மெட் போட்டுட்டு போடா... போலீஸ் நிக்குது என்ற நண்பர்களின் பேச்சை கேட்காமல் பைக்கில் பறந்தான்,...

ஒரு மணி நேரம்... நான் போராடி கொண்டே இருந்தேன்... நண்பர்கள் சிறிது சிறிதாக , நம்பிக்கை இழக்க ஆரம்பித்தனர்...

திடீரேனே , மல்லி பூ வாசம் அறையை சூழ்ந்தது...
ஆவி வந்துடுச்சு நான் முனு முணுமுணுத்தேன்...

மந்திர பலகையில் கை வைத்தேன்... கேட்கும் கேள்விக்கு ஏற்ப, அதயொல் உள்ள எழ்துகளில், கை அதுவாக நகரும்..அதுதான், ஆவியுடன் பேசும் முறை...

நண்பர்கள் கேள்வி கேட்க துடித்தனர்.. ரஜினி அரசியலுக்கு வருவாரா... தமிழில் ஒரு நல்ல பொழுது போக்கு படம் வருமா... வேலை கிடைக்குமா....

டேய்..இருங்கட,,, முதலில் ஆவியை பற்றி விசாரிப்போம் என்றபடி, முதல் கேள்வியை நானே கேட்டேன்..


ஆவியே... உன் பெயர் என்ன,.... எப்போது இறந்தாய் ..ஏன் இறந்தாய்

ஆவி பதில் அளித்ததது " என் பெயர் பரமசிவம்... ஹெல்மெட் போடாததால், அரை மணி நேரம் முன் இறந்தேன் ...

3 comments:

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா