Tuesday, April 27, 2010

ஊருக்கு உபதேசமா? அரசு பள்ளிகள் கட்டுரை கிளப்பும் சந்தேகம்!!!!

தமிழ் தமிழ் என ஊருக்கு உபதேசம் செய்யும் அரசியல் வாதிகள், தங்கள் வாரிசுகளை ஆங்கில பள்ளிகளில் படிக்க வைப்பது நாம் அறிந்தது தான்... அனால், நாம் பெரிதாக அலட்டி கொள்வதில்லை.... எல்லோரும் அப்படித்தான் என நினைத்து கொண்டு சமாதானம் அடைவோம்...

ஆனால், நான் விரும்பி படிக்கும் தமிழ் பத்திரிக்கை ஒன்றும் இந்த பாணியில் இறங்கி உள்ளது சற்று வருத்தாமாக இருக்கிறது..

சென்னை மாநகராட்சி பள்ளிகளில் , கல்வி தரம் தனியார் பள்ளிகளை விட சிறப்பாக இருப்பதாகவும், மாணவர்களுக்கு களவு கற்கும் சூழல், அரசு சென்னை பள்ளிகளில் இருப்பதாகவும் , அந்த பத்திரிகையில் கட்டுரை வெளியிட பட்டிருகிறது...

அது உண்மையாக இருந்தால் சந்தோஷம்தான்....

ஆனால், அது உண்மை என அந்த பத்திரிக்கை நம்புகிறதா. அதை எழுதிய நிருபர் நம்புகிறார என்பதுதான் கேள்வி...

எழுதிய நிருபரோ, அல்லது பதிரிகையின தூண்களோ தங்கள் குழந்தைகளை, அரசு பள்ளிகளில் சேர்ப்பர்களா அல்லது தனியார் பள்ளிகளில் சேர்ப்பர்களா என்பது கேள்வி குறிதான்...

பத்திரிகைகள் தாங்கள் உண்மை என நம்புவதை மட்டுமே பிரசுரிக்க வேண்டும் என்பதே வாசகர்களின் வேண்டுகோள்...

எனது சந்தேகம் தவறானது என தெரிய வந்தால், மகிழ்ச்சிதான் .... அல்லது, வாசகர்களின் குழநதைகள், அரசு பள்ளிகளில் படிக்க வேண்டும்..தங்கள் குழந்தைகள் தனியார் கல்வி வசதியை பெற வேண்டும் என நினைத்தால், வருத்த படுவதை தவிர என்ன செய்ய முடியும் ???

2 comments:

  1. உங்கள் ஆதங்கம் புரிகிறது மாற்றம் எதிர்பார்ப்போம்

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா